Oct 19, 2009

புது உயிரினம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆராய்ச்சி நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.






பல்வேறு ரோபோக்கள் பழுதடைந்த ரோபோக்கள் என ரோபோக்கள் மயமாக இருந்தது.

இங்கு வேலை செய்யும் ரோபோக்கள் விஞ்ஞானிகள் என அழைக்கபட்டன.

பல்வேறு கிரகங்கள் மற்றும் சில பால்வெளிகளில் இருந்து ஜிவராசிகளை கண்டுபிடிக்கும் வேலையை சில ரோபோக்கள் செய்து கொண்டிருந்தன.

இப்படி ரோபோக்களின் தம்தம் வேலையை பிரித்து கொண்டுள்ளது.

அனைத்து ரோபோக்களும்  அதி வேகமாக அங்கும் இங்கும் என நகர்ந்து கொண்டிருந்தன,

பரபரப்பாக அனைத்து செயல்களையும் முடித்து கொண்டிருந்தன.

பலகாலமாக அவர்கள் தேடி கிடைத்த ஒரு கரப்பான்பூச்சியை குளோனிங் முறையில் அதிககமா உருவக்கி பெரிதுபடுத்தும் முறையில் மிகபிரமண்டமாக பெரிது படுத்தி அதனை வைத்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தன.

அதன் இயங்கு முறையை தெரிந்து கொள்வதற்காக அதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன.

அனைத்து ரோபோக்களும் சிந்திக்கும் திறனுடன் தயாரிக்க பட்டாலும், அவைகளின் இயங்கு முறைகள் அனைத்தும் ஒன்று போல் இருந்தன.

ஜீவராசிகளை தேடி வென்றிருந்த ஒரு விண்கலம் உள்ளே நுழைந்தது...

அதனின் கேப்டன் மிகவும் படபடப்பாக காணப்பட்டார், பரபரப்புடன் அனைத்து ரோபோக்களும் காந்தவெளி மூலம் கட்டளை இட்டார். அனைவருக்கும் கேட்கும் விதமா பேச ஆரம்பித்தார்... நாம் பல காலமாக ஜிவராசிகளை தேடி கொண்டிருக்கிறோம்... நமது இயங்கு முறை மாற்றுவதற்கும் இதனை உபோயகபடுத்துகிறோம். இப்பொழுதுதான் ஒரு விசித்திரமான உயிரினம் மாட்டி உள்ளது. அதனை உங்கள் முன்பு காமிப்பதில் சந்தோசம்.

கேப்டன் ரோபோ சொல்லி முடித்தவுடன்... சில ரோபோக்கள். ஒரு மனிதனை தூக்கிவந்தார்கள்.

3 comments :

ஆ.ஞானசேகரன் said...

நண்பா,.. கர்பனை நல்லாயிருக்கு... கர்பனை நிஜமாகுமோ என்ற எண்ணமும் இருக்கு

Anonymous said...

this is not possible.

Prapa said...

"இவர்களை கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கும் ,வறுமையால் ,
இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.
எனவே, உணவை கெட்டுப்போகும் வரை
விட்டு வைக்காமல்,
தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்
தட்டில் இடுவோமா..?"..............................

தொடருவோம் வாருங்கள்..