Apr 14, 2012

இலவசக் கல்வி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த செய்தியை எவ்வளவு பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை, எதுவும் பரபரப்போ அல்லது நடிகை பற்றிய நிகழ்ச்சியே என்று யாரும் கண்டுகொள்ளாமல் கூட போய்விடலாம். பொதுவா இப்படிதானே நடக்குது.

அதாவது உச்சநீதிமன்றம் மிகவும் வரவேற்க்க கூடிய தீர்ப்பை கூறி இருக்கிறது, ஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு, 

தட்ஸ்தமிழில் வந்த செய்தியை பாருங்கள்.

http://tamil.oneindia.in/news/2012/04/13/india-sc-stamp-on-right-education-poor-students-to-study-free-aid0174.html

கல்வி என்பது மாபெரும் வியாபரமாக போய்விட்ட நமது நாட்டில், கல்வி என்பது இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்பாடி ஏற்படும்? 1000 ருபாய் முதல் போட்டவர்கள் 100 ருபாய் லாபம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் கல்வி வியாபரத்திலே முதலே போடாமல் லாபம் மட்டும்தானே, லாபத்தில் குறை ஏற்பட்டால் விடுவார்களா?



என்ன மனது இருந்தால் ஏழை குழந்தைகளுக்கு கல்வி தர முடியாது என்று நீதிமன்றம் சென்றிருப்பார்கள். அதுவும் 25 சதவீதம்... மீதி 75 சதவீதம் தாரளமாக கொள்ளை அடிக்கலாமே, யார் தட்டி கேட்க முடியும், அதுவும் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற பெயரால், இவர்களால் சிறுபான்மை மக்களுக்க் நன்மை என்றால் அதுவும் கிடையாது.  ஒரு சிலர் வளரத்தான் எங்கும் எப்போதும் "சிறுபான்மை" என்ற சொல் பயன் படுது, இதை பற்றி தனியே தொடர் கட்டுரையே எழுத் முடியும். பிறந்தவுடனே ஸ்கூலில் சேர்க்கிற அவலம் நமது நாட்டில்தான் உள்ளது, ஏன்னா அப்பத்தான் நல்லா படிக்க முடியுமாம், ஆமாம் அப்படியே எல்லாரும் விஞ்ஞானிகளை உருவாக்கிறார்கள் பாருங்கள், நினைக்க நினைக்க மிகவும் எரிச்சாலத்தான் இருக்கு...

என்னுடைய எண்ணம் எல்லாம், அனைவருக்கும் சமமான இலவச கல்வியை கொடுக்க வேண்டும், ஏழை, நடுத்தர வகுப்பு, பணக்காரன் என்ற பாகுபாடு கல்வியில் இருக்கவே கூடாது,  எல்லாரும் சமம் என்ற நிலை கல்வியில் இருந்துதான் வரவேண்டும். அரசாங்கத்தின் கேவலமான நிலைப்பாடால், கொள்ளை அடிப்பவர்கள்தான் அதிகமாகி கொண்டே செல்கின்றனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்க்க கூடியது.

Apr 10, 2012

கள்ளகாதலும் உயிர் பறிப்பும்

தினமும் ஏதாவது ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு கொண்டே போகிறது, அதுவும் கள்ளகாதலினால் ஏற்படும் உயிர் பறிப்பும் அதிகம் அதிகம்… இன்று தட்ஸ்தமிழ் படிக்கும் போது மிகவும் கொடுமையான சம்பவமாக இது உள்ளது, அதாவது கள்ளக்காதலாக்காக பெற்ற குழந்தைகளைக் கொன்றதுதான்… படிக்கும்போதே மிகவும் வலித்தது…

என்ன ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேமோ…


அதை படிக்க

http://tamil.oneindia.in/news/2012/04/10/tamilnadu-illicit-affair-auto-driver-killed-his-kids-aid0128.html


என்னுடையே கேள்வியெல்லாம், எதுக்கு குழந்தையை கொல்லனும்? அவருடைய கள்ளக்காதலியுடன் போய் தொலைய வேண்டியதுதானே… அந்த கள்ளக்காதலி கொல்ல சொன்னாராம் இவரும் கொன்னுட்டாறம்… ஒரு பெண் எப்படி இப்படியெல்லாம் குழந்தையை கொல்ல சொல்ல முடியும்? இதில் மிகவும் பாவம் அந்த குழந்தைகளின் தாய்தான்.. மிகவும் பரிதாபம்….


கள்ளகாதல் மிகவும் ஒரு கொடுரமாக பரவிக்கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு தீர்வு கண்டிப்பா வேண்டும்.


சரி, குழந்தைகளை கொன்றவருக்கு நமது நாட்டின் அரசியல் சட்டபடி என்னதான் தண்டனை கொடுப்பார்கள்? இப்படி பட்ட ஆட்டகளையெல்லாம் என்னதான் செய்யலாம்?