Nov 25, 2009

லிபரான்: அரசியல்வாதிகளின் பொய்முகம்

பலவருடங்களையும், அரசாங்கத்தின் கஜானவையும் சேதப்படுத்தி வந்திருக்கும் லிபரான் கமிஷன் அறிக்கை, என்ன முடிவுகளை கொண்டுவந்திருக்கிறது என்றால்... பெரிய ஒரு வெற்றிடம்தான் மிச்சம்.




எதற்காக நாடாளுமன்றத்தில் இதை சமர்க்கப்பட வேண்டும்? இதை சமர்பித்த அரசாங்கம் யார் மீதும் குற்றம்யில்லை, சூழ்நிலையால் குற்றவாளியாக ஆக்கபட்டுள்ளனர் எனும் அர்த்ததில் சமர்பித்துள்ளது. யார் மீதும் குற்றம்யில்லை என்றால் எதற்கு ஒரு கமிஷன், எதற்கு இவ்வளவு நாட்கள்? ஏன் நமது வரிப்பணம் இவ்வளவு வீணடிக்கபட்டது? அதை விட முக்கியமானது இக்கமிஷன் கூறியிருக்கும் எவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை இல்லையாம். நடவடிகை எடுக்க வில்லை என்றால் இதை சமர்பிக்கனும்? இக்கமிஷனே யார் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பரிந்துரைக்கவில்லை.

லிபரான் கமிஷன், மிகப்பெரிய உண்மையை மறைந்த்துள்ளது, அது காங்கிரஸுக்கு எந்த விததிலும் பாபர்மசூதி இடிப்பில் தொடர்பில்லை என்பதை... இந்த உண்மையை கண்டுபிடித்தது லிபரான் கமிஷனா, அல்லது அறிக்கையை தாக்கல் செய்த அரசாங்கமா தெரியவில்லை? பாபர்மசூதி இடிக்கபட போகிறது என்று அன்று ஆண்டுகொண்டிருந்த நரசிம்மராவுக்கு எதுவுமே தெரியாதாம், அவரும் காலையில் பேப்பர் பார்த்துதான் இச்செய்தியை தெரிந்து கொண்டாராம், இதை நான் சொல்லவில்லை லிபரான் அறிக்கை சொல்கிறது, இல்லை இல்லை தாக்கல் செய்த அரசாங்கம் கூறுகிறது. பாபர்மசூதி விவகாரத்தின் ஆணிவேர், காங்கிரஸ் கையிலே உள்ளது, அனைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தி ராமர் சிலையை அங்கு நிறுவ அனுமதியளித்தது அன்றய காங்கிரஸ் அரசாங்கதான். இடித்தது வேண்டும் என்றால் இந்துத்துவா, அதற்கு துனை நின்றது காங்கிரஸ் என்றால் மிகையில்லை. காங்கிரஸ் கட்சிய சேர்ந்த (சங்கர் சிங் வகேலா) அமைச்சரும் இதில் குற்றம் சாற்றபட்டவர் ஆவார்.

அரசியல்வாதிகளுக்கும், நான்காம் தூணுக்கும் மிக நல்ல ஒரு விசயம் மாட்டிகொண்டது. அரசியல்வாதிகள் நன்கு அடித்துகொள்வதற்கும், ஓட்டு வங்கியை பலப்படுத்தவும் லிபரான் கமிஷன் உதவபோய்கிறது. இப்பவே நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்திவுள்ளது. பாஜாக உறுப்பினர்களும் சமாஜ்வாடி உறுப்பினர்களும் தாக்கி கொள்ளாத அளவிற்கு கூச்சல் இட்டு கொண்டனர், மகராஷ்ட்ராவில் உள்ள தொடர்ச்சி போல்...  வேறு ஒரு பரபரப்பு செய்தி வரும் வரை இச்செய்தி ஓடும்.

லிபரான் கமிஷனால் குற்றவாளிகள் என்று கூறப்பட்டிருக்கும் சிலபேரில் மிகவும் பிரபலமான முகங்கள்... இவர்களை சட்டம் என்ன செய்துவிட முடியும்? பாபர்மசூதி இடிப்பிற்கு மிகவும் பெருமைபடுவதாக உமாபாரதி கூறுகிறார்,  சட்டம் அனைவருக்கும் பொதுதான் என கூறுவோம் நாம் சட்டதை பற்றி தெரியாதவரை... மிகப்பிரபலமானவர்கள் மீது சட்டம் என்ன கடமையை செய்யும்? மாபெரும் கேள்விகுறி!!! தன்னை மிதவாதி என்று கூறிகொண்ட வாஜ்பாயி, பாபர்மசூதியை இடுத்தது தவறு என்று வேறு நாடுகளுக்கு போய் ஒப்பாரிவைக்கும் அத்வானி போன்ற பொய்முகம்கள் அதிககதிகம் உள்ளன.
 
தெரிந்த முகங்கள் 
  • வாஜ்பாய் (BJP)
  • அத்வானி (BJP)
  • அசோக் சிங்கால் (VHP)
  • பால் தாக்கரே (Sivasena)
  • ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (VHP)
  • உமா பாரதி(BJP)
  • கோவிந்தாச்சார்யா (RSS)
  • கல்யாண் சிங்(BJP)
  • முரளி மனோகர் ஜோஷி(BJP)
  • பிரவீன் தொகாடியா(பஜ்ரங்தள்)
  • வினய் கத்யார்(RSS)
மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது,  பெரிய பொறுப்பில் இருக்கு அரசு அதிகாரிகளும் நேரம் கிடைத்தால் கொடிய முகத்தை காட்ட தயங்கமாட்டர்கள் என்பதுதான். லிபரான் கமிஷனால் கூறப்பட்டிருக்கும் மிகக்குறைந்தவர்களின் எண்ணிக்கை. மிகப்பெரிய தலைமை பொறுப்பில் இருந்த இவர்களின் கீழ் வேலை பார்த்த பலபேர்களை மனமாற்றம் செய்திருப்பார்கள் என்பதுதான்.   எவ்வளவு பேரிடம் விசத்தை விதைத்திருப்பார்கள்? முதலில் தண்டிக்க வேண்டியது உயர் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகளைதான். கீழ் உள்ள இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்று ரிட்டயர் ஆகி இருப்பார்கள் அல்லது ஏதாவது அரசியில் கட்சியில் சேர்ந்து தொண்டு ஆற்றுவார்கள்.

அரசு அதிகாரிகள்
  • ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)
  • அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)
  • அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)
  • டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)
  • ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)
  • கெளர் (மாவட்ட ஆணையர்)
  • திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)
  • பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)
அமைதியானவர்கள், சாதுக்கள் என்று மக்களால் நினைக்கபட்டவர்கள், எப்படி வந்தது இந்த கொலைவெறி???

சாதுக்கள் என்று அறியபட்டவர்கள்
  • சுவாமி சின்மயானந்த்
  • சுவாமி சச்சிதானந்த சாக்ஷி
  • சாத்வி ரிதாம்பரா

அறிந்தது தெரிந்தது குறைந்த அளவே. தெரிந்தவர்களையாது சட்டம் தண்டிக்கிறதா என்று பார்ப்போம்.  தர்மம் என்றாவது ஒரு நாளைக்கு வெல்லும். நம்பிக்கையுடன் 17 வருடத்தையும் எதிர்கொள்வோம்.

Nov 21, 2009

இந்தியா எப்ப முன்னேற?

இந்தியா நன்கு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், எப்பவும் வளர்ந்துகொண்டிருக்கும் போலவே எண்ணத்தோணுகிறது. டக்க்குன்னு கோவபட்டு நீ ஒரு தேச துரோகின்னு நினைச்சுறாதீங்க... எனக்கு இந்தியா நல்ல முன்னேறனும், வல்லரசு ஆகுதோ இல்லையோ நல்லரசு ஆகி பசி பட்டினி இல்லாம மக்கள் வாழனும் அப்படீங்கிற ஆசைதான்.

 
பின்ன எதுக்கு இப்படி ஒரு பதிவுக்கு தலைப்பு?

 
மக்கள் எவ்வளவுதான் விரும்புனாலும் சில அரசாங்க ஊழியர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளால் நமது விருப்பம் தள்ளி கொண்டேபோகிறது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெரியும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு விசயங்களிலும் அலட்சியமாக இருப்பதை. அவர்கள் ஊழியர்கள் என்று சொல்வதை கூட வெறுக்கிறார்கள் அவர்களை  அதிகாரிகள் என்று கூப்பிட வேண்டுமாம், ஏன் என்றால் எல்லாரையும் அதிகாரம் செய்ய அரசாங்கதால் நியமிக்கபட்டவர்கள் என்று நினைப்பு.

 
கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரேசன்கார்டில் மாற்றம் செய்வதற்காக அங்கு உள்ள ஊழியர் சில நாட்கள் அலையவிட்டனர். ரேசன்கார்டில் மாற்றம் செய்து வாங்குவதற்குள் சே ரேசன்கார்டே வேண்டாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.
 
இப்போது பாஸ்போர்ட் முடிந்து விட்டது என்று, ஆன்லைனில் அப்ளை செய்து  அவர்களும் 20/11/2009 10 மணிக்கு என்று நேரம் ஒதுக்கியதால், பரவாயில்லை நாடு முன்னேறிக்கொண்டுதான் வருது போல என்று சந்தோசமடைந்து, பந்தாவா 9:55 பாஸ்போர்ட் ஆபீஸ் சென்றேன்.

ஊரில் உள்ள பலபேரு அங்குதான் இருப்பார்கள் போல, அவ்வளவு ஒரு கூட்டம். சரி நமக்குதானே டைம் போட்டு செட்யூல் போட்டு கொடுத்திருக்கார்கள்தானே ஈஸியா உள்ள போயிடலாம்னு நினைச்சு, பெரிரிரிரிய வருசையை கடந்து ஒரு செக்யூரிட்டியிடம் கேட்டா, அவர்தான் அந்த பாஸ்போர்ட் ஆபிசை தாங்கி நிற்பவர் அப்படி ஒரு எரிச்சலான பார்வை... "ந்தா, எல்லாருக்கும் 10 மணிதான் டைம், நீ அங்கே போயி நில்லு" அப்படின்னு ஒரு பெரிய வருசையை காட்டினார். வரிசையா பார்த்து அதிர்ந்து போய் நின்றேன். அந்த வரிசையில் கூட்டமும் கொஞ்சமாத்தான் இருந்தது, சரி எப்படியும் ஒரு 60 நிமிடத்தில் வரிசை முடிந்துவிடும், பாஸ்போர்க்கு அப்ளிகேசன் கொடுத்துடலாம்ன்னு நம்பி நின்றேன். அப்பதான் தெரிந்தது அது அப்ளிகேசனு கொடுப்பதற்கு உண்டான கூட்டம் இல்லை, எந்த வரிசையில் நிற்கவேண்டும் என்பதற்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவாங்களாம் அதற்கு உண்டான வரிசைதான் அது. இந்த கொடுமையா யாராவது அனுபவித்துள்ளீர்களா.

எந்த வருசையில் நிற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு வருசை.

அதுமுடிய 1 மணிநேரம் ஆச்சு. ஒருவழியா ஸ்டிக்கர் ஒட்டியாச்சு அவர்கள் சொன்ன வேறு ஒரு கியுவில் போய் நின்றேன். அங்கும் சரியான கூட்டம் இருந்துச்சு, எனக்கு முன்னாடி வயசான ஒரு அம்மா நின்று கொண்டிருந்தார்கள், பாவம் அவர்களால் நிற்க கூட முடியவில்லை,  பாஸ்போர்ட் ஆபிஸில் எப்படி விண்ணப்பம்  பூர்த்தி செய்வது போன்ற விபரங்கள் எழுதி போட்டிருந்தனர், அதில் ஒன்றுதான் வயதானவர்களுக்கு 2 மாடியில் அப்ளிகேசன் வாங்கபடும்ன்னு போட்டிருந்தது. இதை அந்த வயதான அம்மாவிடம் சொன்னேன். நீங்க "ஏம்மா கியுவில் நிக்கிறீங்க, 2 மாடிக்கு போங்க அங்க வாங்கிகிருவாங்க" அப்படீன்னு, பாவம் அவர்களும் ஏறமுடியாமல் 2 மாடிக்கு ஏறி கொஞ்ச நேரத்தில் திரும்ப வந்துட்டாங்க,  அங்கு கொடுக்க முடியாதாம் இங்குதான் கொடுக்கவேண்டுமாம். எனக்கே என்னவே போல ஆயிடுச்சு. என்னாலதானே நடக்க முடியாம மேல் போய்விட்டு வந்துவிட்டார்கள் என்று.

பெரிய கொடுமை என்னவென்றால், மிக அதிகமான கூட்டத்திற்கு,  எல்லாவற்றையும் செக்செய்யும் ஊழியர்கள் 3 பேரே இருந்தனர்.

கூட்டம் அப்படியே நகர்ந்து நகககககககர்ந்து போயிடுச்சு.

அங்கே இருந்தவர்கள் முகத்தில் அப்படி ஒரு கடுகடுப்பு, எல்லரிடமும் எரிச்சலான வார்த்தைகள்தான். யாரா இருந்தாலும் ஆங்கிலத்தில்தான் பதில், ஆனால் அவர்களுக்குள் தமிழில் பேசிக்கொள்கிறார்கள், என்னமோ இந்தியாவை அவர்கள்தான் காத்துகொண்டிருப்பது போல்.

நான் எனது அப்ளிகேசன் ஃபார்ம் மற்றும் அனைத்து சர்டிபிகேட் எல்லவற்றையும் கொடுத்தவுடன், "Your photos are not good, take photos for passport" இது சொன்னவுடன் நெக்ஸ்ட் அப்படின்னுட்டாரு, நான் உடனே வெறுத்துபோயி வெளியே வந்துட்டேன்.

எப்ப மறுபடி போட்டா எடுத்து மறுபடி லீவு போட்டு அப்ளை செய்ய...

இதுதான் எனது கோபம்.

  • இப்படி செய்தால் ஏஜெண்டிடம் ஏன் அதிக பணம் எடுத்து அல்லது ஏதாவது திருட்டுதனம் செய்து பாஸ்போர்ட் வாங்க மாட்டார்கள்?
  • வயதானவர்கள், கர்பிணிப் பெண்கள் வந்தால் அவர்களுக்கு ஏன் தனி இடம் ஒதுக்க கூடாது?
  • 90% பேர் வேலைக்கு போகிறவர்கள்தான், வரவேண்டும் என்றாலே விடுப்பு எடுத்துதான் வரவேண்டும். சனி, ஞாயறு நாட்களிலும் செயல்பட்டால் என்ன?
  •  ஆன்லைன் அப்ளிகேசன் எதற்கு? அப்ளை செய்பவர்களுக்கு சரியான நேரத்தை குறிப்பிட்டால் எல்லாருக்கும் நன்றாக இருக்கும்.
  • அங்கிருப்பவர்கள் உட்கார இடம் இல்லை, கியுவில் நின்றுகொண்டே வரவேண்டியதிற்கிறது, ரயில் முன்பதிவு நிலையங்களில் உள்ளதுபோல் சேர் போட்டால் என்ன?
  • 10 பேர் பார்க்கவேண்டிய வேலையை 3 பேர் பார்த்தால் எல்லருக்கும் வெறுப்புதான் வரும், ஏன் அதிக பேர்களை வேலைக்கு அமர்த்த கூடாது? 

Nov 17, 2009

ஏழாவது அறிவு

அவளுடைய சரீரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.

பார்ப்பவர்கள் கண்களுக்கு அவள் தெரியவில்லை.

ஒரு சில வினாடிகளுக்கு முன்பு பார்த்தவளை இப்போது காணவில்லை.

அரங்கதிலிருந்த அனைவரும் அரங்கம் அதிர கைதட்டினார்கள். ஒருவருக்கொருவர் ஒருவிதமான சந்தோசத்தில் பார்த்துக்கொண்டனர். ஆச்சரியத்தில் சிலபேர் வாய் மூடாமல் திறந்தே இருந்தன.

பலபேர்களுக்கு நடப்பது நிஜமா இல்லை கனவா என்றே தோன்றியது.

நானும் அந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்.

நான் இதுவரை இவையெல்லாம் மூட நம்பிக்கை என்றே சொல்லிவந்தேன், மற்றவர்கள் சொல்லும்போதோ அவற்றை கேலிசெய்து  முற்றிலுமாக மறுத்தவன் நான். இவை நடக்காது நடக்கவே நடக்காது என்று இறுமாப்புடன் அலைந்தவன்,  கடவுள் மேல் நம்பிக்கையிம் கிடையாது வாழ்க்கையில் எதிர்பார்ப்பும் இல்லாமல் அதனால் விதிமேல் பழி சொல்லாமல் இருந்தவன. இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்து எனது பலநாள் கொள்கைகளையும்  கேள்விக்கு உள்ளாக்கியது. நேற்று வரை பகுத்தறிவாளன்  என்று என்னை அழைந்தவர்கள், இதை கேள்வி பட்டால் என்ன கூறுவார்கள். இதை எப்படி பகுத்தறிய முடியும்??? ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள் ஓட நடந்து கொண்டிருந்தவகைளை பார்த்து கொண்டேருந்தேன்.
சே, இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்க கூடாது. ஒருபக்கம் மனது கூறினாலும் நடந்தவை நன்மைக்கே என்று சமாதனப்படுத்தி கொண்டேன்.

அவளை சந்தித்ததுதான் மிகப்பெரிய தவறு.

சந்தித்த நினைப்பு வந்தது........

எனது வீட்டிற்கு போகும் போதுதான் அவளை பார்த்தேன், நல்ல அழகியாக இருந்தாள்,  ரோட்டில் செல்பவர்கள் அதிகமானோர் அவளைதான் பார்த்துகொண்டு சென்றனர்.  ஏதோ சேல்ஸ் கேர்ள் போல்,  ஒரு வித்தியாசமான் உடை உடுத்திருந்தால்.  அதே உடையில் மேலும் சில பேர்கள் நின்றார்கள். சரி என்னதான் பேசுகிறாள் என்று பார்க்கலாம் என கூட்டத்தின் உள் சென்றேன்.

அதிகமா  பேசிகிறவர்களுக்கு குரல் மாறிடுமே அப்படி இருந்தது அவளின் குரல், ஒருமாதிரி ரஃப்பா, இவ்வளவு அழகான பொண்ணுக்கு இப்படி ஒரு வாய்ஸா? கொடுமை...

என்னதான் பேசுகிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.

"இறப்பு என்றால் என்ன? மரணம் என்பது நமது உடல் அழிவதுதான்,  உடலுக்குதான் மரணம், உள்ளத்திற்கு அல்ல, நமது ஆத்மா என்றும் அழியாதது மரணம்  என்று நாம் நினைப்பது,  மற்றவர்களின் கண்களுக்கு  தோன்றாய் இருப்பதைதான்.  மற்றவர்களின் கண்களுக்கு ஒரு பிம்பத்தை நமது உடல் என்று  காமித்து  வைத்துள்ளோம்,  அது அழிவதுதான் மரணம் என்று எண்ணப்படுகிறது.  நமக்கு ஆறறிவு இருப்பது தெரியும் தொடுதல், சுவையறிதல், நுகர்தல்,  பார்வை, கேட்பது, பகுத்தறிவு இவைதான் காலம் காலமாக மனிதனுக்கு இருக்கும் அறிவுகள் என்று நாம் நினைப்பது. நாம் நினைப்பது போல் நமக்கு ஆறறிவு மட்டும் இல்லை, அதாவது பகுத்தறிவு கடைசி அறிவு கிடையாது, அதற்கு மேலும் ஏழாவது அறிவு உள்ளது.  பகுத்தறிவு மனிதனுக்கு கடைசி  என்று சொன்னால்தான் மேலும் இதனை பற்றி தேடமாட்டான்.  நமது அறிவால் பல அற்புதங்களை செய்யலாம். சிறந்த பயிற்சி எடுத்து  கொண்டால் நினைத்த நேரத்தில் இந்த உடலை தேவையற்றதாக ஆக்கிவிடலாம்.

நமது எண்ணங்களே ஆன்மா வாழ்ந்து வருகிறது. ஆன்மா என்பது அழியாது மட்டும் அல்ல,  என்றென்றும் நமது எண்ணங்களாக தோன்றுவவையே.

நாங்கள் இங்கு வந்ததுக்கு காரணமே ஏழாவது அறிவை உங்களுக்கு நிரூபிக்கதான். மனிதன் ஏதோதோ கண்டுபுடிக்கிறான், ஆனால் அவனுள் உள் ஒளிந்திருக்கும் சக்தியை மட்டும் உணராதவனாக இருக்கிறான். தூர தொலையில் இருக்கும் இருவர் பேசிக் கொள்ள செல்போன் தேவை இல்லை, மனிதனின் ஏழாவது அறிவை பயன்படுத்தி ஆழ்சக்தி மூலம் பேசிக்கொள்வது மட்டும் அல்ல நினைத்த நேரத்திலே அவர்களிடம் பார்த்தும் கொள்ளலாம். இப்படி பல பல நன்மைகளை உள்ளது.

இதை பற்றி விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறோம். 

அறிந்து கொள்ளுங்கள் ஏழாவது அறிவு"


 
அவ பேச பேச எனக்கு சிரிப்பு சிரிப்பாதான் வந்தது.  ஏழாவது அறிவாம் எட்டவது அறிவாம்... கேக்குறவன் கேணையனா இருந்தா என்ன வேன்னா சொல்லுவாங்க... சிரிச்சுகிட்டே நகர்தேன்... மனசுக்குள் ஒரு சின்ன ஆசை அப்படி என்னத்தான் சொல்லுவாங்க செய்வாங்க, போய்தான் பாக்கலாமே...

அவர்கள் அட்ரஸ் வாங்கி கொண்டு, அடுத்த நாள் குறிப்பிட்ட அரங்கத்திற்கு சென்றேன். மிக அதிகமானோர் வந்திருந்தனர். எனக்கு கடைசியில் நிற்பதற்கே இடம் கிடைத்தது.

அவளும் மேடையில் இருந்தாள்.

ஒரு பெரியவர் மிகவும் சன்னமாக உரையாற்றி கொண்டிருந்தார். கூட்டம் அமைதியாக இருந்ததினால் தெளிவாக கேட்டது.

"நமது மனத்தின் சக்தியை உங்கள் முன்பு நாங்கள் காட்ட போகிறோம், இதற்காக பலநாட்கள் முயற்சி செய்து இவற்றை கண்டுகொண்டுள்ளோம், இவை அழிய கூடாது, மக்களுக்கு போய் சேரவேண்டும். அதனால் இதை இலவசமாக விருப்பமுள்ள மக்களுக்கு போதிக்கிறோம்.




நாம் நினைத்த அடைய பல வழிகளை உபயோக படுத்துகிறோம், உதாரனம் கதவை அடைக்க, நமது எண்ணத்தின மூலம் அதனை செயல் படுத்தலாம்.  ஒரு மிருகத்தை கூட நமது சக்தியின் மூலம் கட்டு படுத்தலாம்.

நமது எண்ணம் மிகவும் சக்திவாய்ந்தது.

இப்போதுதான் விஞ்ஞானம் எண்ணம்தான் மிகவும் வேகமானது என்றும் கண்டுபிடித்துள்ளனர். நமது நாட்டில் இதை முன்பே கண்டு பிடித்திருந்தார்கள்.  எண்ணம்தான் எங்கும் விரைவாக போக கூடியது. அந்த எண்ணமே சக்தியாக ஏழாவது அறிவாக மாற்றம் அடையும்.

முதலில், இவள் (அப்பெண்ணை நோக்கி) அவள் விருப்பபட்ட இடத்திற்கு செல்லபோகிறாள், அவள் போக விரும்பிய இடம் மும்பை, CST ரயில் நிலையம் ஆகும். அவள் இங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைவாள் மும்பை, CSTயில் இங்கிருப்பவர்களின் நண்பர்கள் இருந்தால் அவளை அங்கு சரிபார்க்க சொல்லவும். இவள் ஏழாவது அறிவை உபயோகபடுத்தி தனது உடல் முதற்கொண்டு மாற்ற வல்லமை படைத்தவளாயிற்றாள்."


அவர் கூறியவுடன், அப்பெண் சம்மானமிட்டு அமர்ந்தாள்,  மேஜிக் செய்பவர்கள் ஏதாவது டப்பாவில் அடைத்து செய்வார்கள் அப்படி இல்லாமல் வெளிப்படையான இடத்திலே அமர்ந்தாள்... சிறிது நேரத்திலே மறைய ஆரம்பித்தாள்......


டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........


நல்ல தூக்கம், மணி 8 ஆயிடிச்சா? இப்படிலாம் கனவு வருமா?


பிரஸ் செய்துவிட்டு டீ குடிக்க போனேன்.


தினகரன் போஸ்டரில் கனவில் வந்த பெரியவர் போட்டோ


"பெண்ணை கொலை செய்த குற்றதிற்காக ஏழாவது அறிவு என்ற ஆன்மிக மையம் நடத்தி வந்த பெரியவர் கைது"

Nov 13, 2009

சென்னையின் சப்தம்

உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... தினமும் யராவது ஒரு ஆட்டோக்காரரிடம் திட்டு வாங்குவது அல்லது அவரை திட்டுவது என்பது சென்னை வாசிகளுக்கு பழக்கமான ஒன்றுதான். நான் ஆட்டோக்காரரை திட்டுறேன்னா, அதுக்கு முதல் காரணம், என்ன கருமாந்திரமான எஞ்சின்தான் வைய்த்துருப்பார்களோ, கடவுளே, அது ஓசோன் படலத்துல ஓட்டை போடுறது ஒரு பக்கம். சில ஆட்டோ விடும் பாருங்க ஒரு சப்த்ம், உலகத்துல யாருமே கேட்டே இருக்க முடியாது; அப்படி ஒரு சவுண்டு.... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்னூ மிகக்கொடுமையான சப்தம், நான் பைக்ல போகும் போது ஆட்டோ வந்தா ஒதுங்கி வழிவிட்டுறது, ஆட்டோ முன்னாடி மாட்டிக்கிடா டிரைவரோட வாய் சத்தம்; ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிடா இஞ்சின் சத்தம்.






அப்புறம், பைக்... சில பேர் பன்னுற அழும்பு தாங்கவே முடியலை... பைக்ல ஹாரனுங்குற பேருல வச்சுருப்பங்க ஒரு வித்தியாசமா சவுண்டு. ஏதாவது மிருகம் பக்கதுல போய் அடுச்சா அடுத்த நொடி அது செத்துரும், நாம எல்லாம் இதை எல்லாம் கேட்டுகிட்டு எப்படித்தான் உயிர் வாழ்றோமே???


ஏதாவது தலைவர் பிறந்த நாள், இறந்த நாள் வந்தா போதும்... உசிரோட இருக்கும் போது கண்டுக்கதவன், மைக் செட்டு வச்சு போடுவான் பாட்டை... கொஞ்சம் நோயால இருக்குறவங்க எல்லாம் பெரிய சீக்காளி ஆய்டுவங்க. அந்த பாட்டு எழவுதான் ஒழியுதுன்னா, அவரு மைக் புடுச்சு பேச ஆரம்பிப்பார்... கொண்டாடப்படும் தலைவரே மறுபடியும் செத்துடலாமான்னு நினைப்பார்... அவரு பேசிறதா சென்னைல இருக்குற எல்லா ஏரியாவுக்கும் கேக்கனும்னு தெடர்ச்சியா மைக் செட் கட்டி நம்ம காத புண்னு ஆக்கிடுவாங்க.


நான் சென்னை விட்டு போகலைனா, விரைவில் நான் செவிடு ஆயிடுவேன் :(


எது எதுக்கோ கேசு போடுற புண்ணியன்களே சென்னையின் சப்தம் குறைக்க ஒரு வழி செய்ய கூடாதா???

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு

Nov 11, 2009

மாறவே மாட்டாங்களா?

பொதுவா ஏமாறுவதுக்கு என்றே சில பேர் உள்ளனர் போல். இதில் ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்களையே குற்றம் சொல்லனும். சமிபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் இந்த பதிவை எழுத தூண்டியது. 

அதாவது, ஒரு கணிணி நிறுவனத்தில் பணம் கட்டினவர்களை அந்நிறுவனம் பட்டை நாமம் சாத்திஉள்ளது...

எப்படிதான் ஏமாறுவார்களோ?

சில பேர் தானும் சாப்பிடாமல், மற்றவர்களுக்கு தானம் செய்யாமலும் சேமித்து சேமித்து இப்படி ஏமாற்று பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து எப்படிதான் சிந்திக்காமல் ஏமாறுகிறார்களோ? சிறிது வருடங்களுக்கு முன்பு சிட்பண்ட் என்ற பெயரில் ஏமாற்றி கொண்டுருந்தார்கள். 

இப்போதும் அவர்கள் தொடர்கிறார், வேறு வேறு பெயர்களிலும். மக்கள் இப்போதும் தொடர்ந்து ஏமாறுகிறார்கள்.

சில விசயங்கள் நமக்கே தெரியவேண்டும். பணம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்நிறுவனத்தின் நம்பகதன்மையை சிந்திக்க வேண்டாமா? 100000 முதலீடு செய்து மாதம் 20000 வருமானம் வரும் என்றால் நம்பிவிடுவதா? சமிபகாலமாக அதிககமாக பஸ், ரயில் போன்றவற்றில் சிலபோஸ்டர் தென்படுகின்றன... அவைகளின் சாராம்சம்...

"மாதம் 5000 வருமானம்,  இது மார்கெட்டிங் கிடையாது, கஷ்டப வேண்டியதில்லை, சேல்ஸ் வேலையிம் கிடையாது, உங்களது விருப்பபட்ட நேரங்களில் வேலை செய்யலாம்"

இப்படிலாம்,  இருக்கின்றது... எப்படி வரும் 5000 ருபாய்.. சும்மா தூக்கி கொடுத்திருவாங்களா 5000 ருபாய்??? நாம அவர்கள் கொடுக்கும் நம்பருக்கு பேசினால் அப்படியே ஐஸ் முழுங்கியது போல் பேசுவார்கள்.. அவர்கள் இடத்திற்கு கூப்பிட்டு  நீங்க எந்த வேலையிம் செய்ய வேண்டாம், 100000 பணம் கட்டிடுங்க... மாசம் மாசம் 5000 ருபாயா 5 வருசத்திற்கு கொடுப்போம், ஜாலியா இருக்கலாம்னு சொல்வார்கள்... ஏமாறுவதற்கே இருக்கும் மக்களும் பணத்தை கட்டி விட்டு வருவார்கள்.

ஏமாற்றுபவர்கள் பலவிதம், கம்பியூட்டர் பெயரில் கூட... "டாக்குமொண்ட் பிராஸ்ஸிங்... ஒரு குறுப்பிட்ட அமொண்ட் கட்டிடுங்க, எவ்வளவு கட்டுறீங்களோ அதற்கு தகுந்தார்போலவே டாக்குமொண்ட் கொடுப்போம், நீங்கள் அதை பிராஸ்ஸிங் செய்து மாதம் 50000 வரை சம்பாதிக்கலாம்..." பணத்தாசையில் வீட்டை அடமானத்தில் வைத்து சேர்வார்கள்.

எனக்கு தெரிந்தவர் நடந்த உண்மை சம்பவம் இது.
சென்னை சுற்றி பார்க்க வந்த அவரது குடும்பம், எங்கோ செல்லும் போது, ஏதோ ஒரு பார்மில் அவர்களது மொபைல் நம்பரை கொடுத்துள்ளனர், அவர்களும் அதை மறந்து விட்டனர், கொஞ்ச நாளில் அவர்களுக்கு ஒரு போன் வந்துள்ளது,  "உங்களுக்கு சிங்கப்பூர் போவதற்கு பரிசு விழுந்துள்ளது" என்று கூறிவுள்ளார்கள், அவர்களும் ஒரே குஷியாகி அடுத்த நாளே சென்னை வந்து ஒரே குஷியா இருந்தாங்க... அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போனவுடன்... உங்களுக்கு பரிசு விழுந்தது உன்மைதான். சீக்கிரமா பாஸ்போர்ட்லாம் ரெடி பன்னுங்க, விசா, டிக்கட், தங்குற செலவு எல்லாம் நாங்களே பார்த்து கொள்வோம், அவரு ரெம்ப சந்தோசமாயிட்டாரு... அவர்கள் சில இடங்களில் அவரின் கையெழுத்து வாங்கிவிட்டு, இது நீங்க எங்க கிளப்பில் மெம்பரா சேர்ந்தாதான் இது எல்லாம் அணுவிக்க முடியும் என்றவுடன், அவரும் அவரின் மிகவும் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து விட்டனர்.

எல்லா இடங்களிலும் இவர்கள் உள்ளனர்,  வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூட ஒரு கூட்டம் ஏமாற்றி கொண்டு இருக்கின்றது. நாம அங்கு போன பிறகுதான் தெரியும், ஏதாவது அவர்களிடம் சேர்ந்து கோர்ஸ் படித்தால்தான் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வார்களாம்... வேலை என்பது உறுதி கிடையாது... வேலை கிடையாது என்பது உறுதி :)




இப்படி பலபேர் இருக்கின்றன்ர், ஏமாற்றுவர்களின் லிஸ்டில்... நாம்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுநிறுவன வங்கிகளே 11% மேல் வட்டி தறுவதில்லை... மற்றவர்கள் எப்படி தறமுடியும்? சிந்திப்பார்களா?

Nov 5, 2009

ஆஆஆஆ.... எனக்கு பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கலை...

பிடித்தவர் பிடிக்காதவர்...


யாருக்கு யாரை பிடிக்கும்... எப்ப பிடிக்கும்? ஏன் பிடிக்கும்?

யாருதான் இதை ஆரம்பித்தார்களோ.. உஸ்ஸ்ஸ்ஸ்... எந்த திரட்டிய பாத்தாலும் இதுதான் இருக்கு... இதில் இருந்து தெரியுது யாருக்கும் எழுதுறதுக்கு எதுவும் இல்லைனு... தப்பா நினைச்சுக்காதீங்க... எவ்வளவோ இருக்க எழுத... ஒருத்தரை பிடிக்காததை பற்றிதானா எழுதனும்?



எனக்கு பிடித்த எழுத்தாளர்களிடம் கூட இந்த பதிவு இருந்ததை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

நல்ல வேளை வினவு இப்படி பதிவு போடலை. :)

பிரபலமானவர்களை பிடிக்கலை என்று சொல்லி பிரபலமாகலாம் என்பது என்ன விதமான செயல்பாடு என்பது தெரியவில்லை.

பிடித்தவர்களை மட்டும் சொல்வது போல் அமைந்திருந்தால்... அது ஒகே.

ஏ ஆர் ரஹ்மானை பிடிக்காததற்கு அவர் விளம்பரபடத்தில் நடிப்பதை சொல்லிருந்தார்கள். AIDS நோயாளிகளுக்காகவும் லாபநோக்கமற்ற செய்திகளுக்காவும் அவர் விளம்பரபடத்தில் நடிக்கிறாரே... இளையராஜாவையும் விரும்புங்கள் அதே நேரத்தில் ஏ ஆர் ரஹ்மானை முதல் ஹாரிஸ் ஜெயராஜ் வரை வெறுக்காமல்.

நீங்க பிடிக்கலைன்னு ஒருத்தரை சொன்னா அது அவர் மேல் தெரிந்தே தெரியாமலோ கொஞ்சம் வெறுப்பு விதைப்பதற்கு சமம்.

பொதுவா, ஒருத்தருக்கு ஒருவர் பிடித்தவர் பிடிக்காதவர் என்று எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்கின்றனர்? இன்று பிடிக்கும் ஒருவர் நாளைக்கே பிடிக்காமலும் போகலாம், பிடிக்காதவர் பிடிக்கவும் செய்யலாம்.... காலத்தில் அனைத்தும் மாற்றத்திற்கு உரியதுதான்... பிடிக்காதவர் என்று எழுத்துமூலமாக பதிவு செய்யும் போது, அது என்றென்றும் தங்கிவிடவும் அவரின் எண்ணமாகவும் இருக்கும்.

உலகத்தில் பிடித்தவர் பிடிக்காதவர், பிடித்தவை பிடிக்கதவை என்று எதுவுமே இல்லை. நாம் சார்திருப்பவர்களாலும் நம்மை சார்திருப்பவர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனக்கு ஒருத்தரை பிடிக்க காரணமே, அவரின் சில செயல்பாடுகள் என்னை கவர்ந்ததாலும் மேலும் அவரை பற்றிய மற்றவர்களின் எண்ணங்கள் அவரின் மேல் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதாலும் அவரை எனக்கு பிடிக்க காரணமாய் அமைகின்றது.  இதே காரணம்தான் பிடிக்காததற்கும்...

மாற்றம் என்பது நம்மை சார்ந்து அனைத்தும் மாறிக்கொண்டிருப்பதுதான். மாறாமல் எதுவும் இல்லை, வாழ்கிற வாழ்க்கையில் அனைவரையிம் விரும்பி அனைவராலும் விரும்ப் படுகிறவர்களாக வாழ்வோம். 


Nov 2, 2009

பொண்ணும் சர்தார்ஜியிம்

சர்தார்ஜி ஜோக்ஸ் எப்ப படிச்சாலும் சலிக்கிறதே இல்லை...

நான் இல்ல இல்ல நம்ம விரும்பி அதிகமா படிக்கிறது சர்தார்ஜி ஜோக்ஸ்தான். சர்தார்ஜிவுடைய இன்னோசன்ட் நமக்கு ஜாலியா இருக்கு, பொதுவா நாம அறிவாளி வேசம் போட்ட முட்டாளுங்க இல்லையா? அய்யயோ ஜோக்ஸ் சொல்ல வந்துட்டு அட்வைஸ் பன்ன ஆரம்பிச்சுட்டேனே :D சரி சரி ஓவரா அறுக்கலை. இனி ஜோக்ஸ்க்கு போகலாம்.

ஒரு சர்தார்ஜிக்கு கார்வாங்கனும்னு மனைவிக்கு பரிசு கொடுக்கனும்னு ஆசையோ ஆசை.  அவரு பொண்டாட்டி கோடிஸ்வரி, அவளையிம் கூட கூட்டிக்கிட்டு போயி அவ இஷ்டபடி கார் வாங்கனும்னு போராங்க.
ஷோரூம்ல பல கார பாத்தவுடனே சர்தார்ஜி பொண்டாடிக்கு காருடைய பிராண்ட் பேரு மறந்து போச்சு.
அவ சேல்ஸ் மேன கூப்பிட்டு சொல்லுறா "அது டொயட்டா மாதிரி இருக்கும் ஆக்ச்சுவலா "டீ"ல அது ஆரம்பிக்கும்.
உடனே சர்தார்ஜி " வாவ், என்ன ஒரு ஆச்சரியம்? இங்கயிலாம் காரு பெட்ரோல்லதான் ஸ்டார்ட் ஆகும்"


சர்தார்ஜி வேலைக்கு இன்டர்வியூக்கு போறாரு
அங்க இன்டர்வியூ எடுக்குறவரு கேள்வி கேட்குறார்.
இ: நீங்க எங்க பிறந்தீங்க?
ச: பஞ்சாப்ல
இ: எந்த பார்ட்?
ச்: என்ன எந்த பார்ட்? (கோவமாயிட்டாரு) பாடி ஃபுல்லா பஞ்சாப்லதான் பொறந்துச்சு.

ஒரு சர்தார்ஜி புது சைக்களை தள்ளிக்கிட்டு வாறத நம்ம சர்தார்ஜி பாக்குறாரு.
என்ன புது சைக்களா? எப்படி கிடைச்சுச்சு?
உடனே அவரு, நான் காலைல வாக்கிங் போகும் போது ஒரு பொண்ணு சைக்களை ஓட்டி வந்துச்சு, என்ன பார்த்த உடனே பக்கதுல வந்து டிரஸ் எல்லாம் அவுத்துபோட்டுடு எது வேனுமோ எடுத்துக்கோன்னு சொல்லுச்சு, அதான் நான் சைக்களை எடுத்துகிட்டு வந்துட்டேன். 
 உடனே நம்ம ஆளு கோவமாயிட்டாரு, என்ன ஆளுப்பா நீ சே, ட்ரஸையிம் சேர்த்து எடுத்துருக்க வேனாம்.

சர்தார்ஜி வேகவேகமா ஆட்டோவுடைய முன் சக்கரத்தை கழட்டுறாரு, இத பார்த்த வேற ஒரு ஆளு கேக்குறாரு ஏம்பா என்ன ஆச்சு எதுக்கு கழட்டுற? அதுக்கு சர்தார்ஜி "ஹேய், அந்த போர்ட பாக்கலையா நீ?  பார்க்கிங் 2 வீலர் ஒன்லி"

அமெரிக்கா போயிட்டாரு சர்தார்ஜி...
ஒரு அமெரிக்கன் பிரண்டா கிடைசான்... அவன் அவங்க நாட்ட பத்தி சொல்ல சொல்ல நம்ம ஆளு வாய பொலந்து கேட்டுகிட்டு இருக்காரு. எங்க நாட்டுலையிலாம் கல்யாணம் இமெயில்லதான் நடக்ககும். உடனே நம்ம ஆளு, என்ன கொடுமை இது? எங்க நாட்டுல பிமெயிலோடத்தான் நடக்கும்னாரு.