Sep 30, 2009

தமிழை கொலை செய்தது போதும்

<<<
அய்யா இஸ்லாமியரே தமிழை கொலை செய்தது போதும் . இனியாவது தமிழை விட்டுவையுங்கள், தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் தமிழில் எழுத தெரியவில்லை. உங்களுக்கெல்லாம் எதற்கு தமிழ் வலைப்பதிவு , உமக்கெல்லாம் உருது தான் லாயக்கு. தயவு செய்து நிறுத்திகொள்ளும் உமக்கு கோடி புண்ணியமாக போகும். நீங்கள் சொல்லவிருக்கும் பதிவுகள் அனைத்தையும் படிக்கவே தோன்றவில்லை ஏனென்றல் தமிழை கொலை செய்வது பார்த்து தான் . தமிழுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் தயவு செய்து உங்கள் பதிவை தமிழில் எழுதுவதை நிறுத்தி கொள்ளுங்கள்







----இவண் முனைவர் ப . பிரியா கண்ணப்பன்
priya.9582@gmail.com
>>>
 
இப்படி ஒரு மெயில் எனக்கு இன்று வந்திருந்தது.
 
நானா தமிழை கொலை செய்கிறேன்?
 
ஆரம்பத்தில் எதுவும் தவறாகத்தான் இருக்கும், போக போகத்தான் சரியாகும், நானும் முடிந்த அளவு தவறில்லாமல்தான் முயற்சிக்கிறேன். ஏதாவது எழுத்து பிழையிருந்தால் அதை கடிதத்தில் கூறிருந்தால் சந்தோசப்பட்டு திருந்திருப்பேன்.
 
நான் எழுது எழுத்தில் இலக்கண தவறு இருந்து, அதை மாற்ற சொல்லி கடிதங்கள் வந்தன, அவர்களுக்கும் நன்றி சொல்லி அவர்கள் சொன்ன மாற்றம் படி மாற்றினேன்.
 
ஏன் இந்த வன்மம்?
 
நான் தமிழில் எழுதுவதற்கு காரணம், அது எனது தாய்மொழி. உருது எனக்கு தெரியாது, எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. தெரிந்த மொழியில்தானே எழுத முடியும்.
 
ஏன் அனைத்தையும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்?
 
எது எடுத்தாலும் மதம்தானா?
 
தமிழை யாரும் இங்கு சொந்தம் கொண்டாட தேவை இல்லை. எல்லாருக்கும் பொதுதான் அது. தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடும் கூட்டம் என்றாவது தமது சொந்தமான் நிறுவனத்தில் தமிழில் பெயர் வைத்திருக்குமா? அனைவரையும் நான் சொல்ல வில்லை. இஸ்லாமியர்கள் நடத்தும் நிறுவனங்களில் பாருங்கள் முடிந்த அளவு தமிழில்தான் பெயர் வைத்திருப்பார்கள்,  இங்கு மட்டும் அல்ல, நான் துபாயில் பணிபுரிந்ததால் அங்கும் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளுக்கு தமிழில்தான் பெயர். நாங்கள் தமிழை கொலை செய்ய விரும்பினால் ஏன் தமிழில் பெயர்?
 
என்னவோ இவர்கள் மட்டும்தான் தமிழை காப்பது போலவும், மற்றவர்கள் தமிழை கொலை செய்வது போலவும்...
 
 

இலங்கையில் தமிழ் சகோதர்கள் செத்து கொண்டுறுக்க, என்ன செய்தார்கள் இவர்கள்?
 
 
 
தமிழ் மொழிக்காக வாழ்கையில் என்ன செய்திருப்பார்கள்? அடுத்தவர்களை குற்றம் சொல்வதை தவிர?
 
 
 
 
எதுக்கு எடுத்தாலும் குறை.
 
எப்படித்தான் மதத்தை எல்ல விசயத்திலும் முடித்து போடுவார்களோ?
 
அது எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுகிறது?
 
தமிழை யாரும் இங்கு வாழ வைக்க வேண்டாம்.
அதுதான் பல பேரை இங்கு வாழ வைத்து கொண்டிருக்கிறது.

Sep 28, 2009

மனித நீதி தண்டனை

மறுபடியும் தண்டனை பற்றிய ஒரு பதிவு.  முந்தைய பதிவு இங்கே


இதை எழத தூண்டியது தருமியின் GO TO HELL ! பதிவுதான்.


அதாவது, அப்பதிவை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது எல்லாம், "மனித நீதி தண்டனை" பற்றிதான். மனித நீதி தண்டனை என்றால் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.

தண்டனை என்றாலே அது மனிதாபமற்றதாத்தான் இருக்கும். இதில் எப்படி வரும் மனித நீதி?



 முதலில் தண்டனை என்பதை மறுபடியும் கூறுகிறேன், ஒரு தவறு செய்கிறவர் அதை மீண்டும் செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, இதைத்தான் நான் விளங்கி கொண்டது.

ஒருவன் ஒருவரிடம் இருந்து 1000 பணம் திருடியதாக வைத்துகொள்வோம், மனித நீதி தண்டனையின் படி "எப்பா இவன பார்த்தா பாவமா இருக்கு! ஜெயில் தண்டனையிலாம் கொடுக்கிறது மனித நீதிப்படி தப்பு,  செல்லமா கன்னத்துல ரெண்டு அடி போட்டு விட்டுடுங்க."  இப்படி ஒரு தீர்ப்பு/தண்டனை இருந்தா அவன் மீண்டும் 1000000 திருடினால் அதற்கு காரணம் இந்த மனித நீதி தண்டனையாத்தான் இருக்கும். ஒரு தவறு செய்கிறவன் மீண்டும் அதை செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, அதை ஊக்கிவிக்கவா மனித நீதி தண்டனை???

மனித நீதி, மனித நீதி சொல்லி சொல்லி... பல நாடுகளில் தூக்கு தண்டனை இல்லாமல் செய்தாயிற்று, இப்ப எதுக்கு மற்ற தண்டனையும், தண்டிக்கிறது பாவம், விட்டுடிவோம் இப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

நான் தருமியின் பதிவை மட்டும் வைத்து சொல்லவில்லை. பல்வேறு நாடுக்களில் உள்ள பல அறிவுஜீவிகள் இப்படிதான் கூறுகிறார்கள்.

அதாவது தவறு இழைத்தவர்களை தண்டிக்க கூடாதாம். இதுதான் மனித நீதி தண்டனையாம்.

இதைப்பற்றி பேசுபவர்கள் தவறு செய்பவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது, ஏதாவது நடந்து பிறகு தவறு செய்தவனை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து விடலாம் என்றால் அது சரியான முறை. இங்கு தவறிழைத்தவருக்கும் தவறிழைக்கப்பட்டவருக்கும் இவர்கள் எவ்விதத்திலும் சம்பந்த படாதவர்கள்.

ஒருத்தன் ஒரு பெண்னிடம் தவறாக நடந்தால் அல்லது அப்பெண்னை கெடுத்து விட்டால், என்ன தண்டனை கொடுக்கும் இச்சமுதாயம்? சில காலம் ஜெயில் தண்டனை. ஆனால் அப்பெண்னின் வாழ்க்கை??? இதே நேரத்தில் அவனின் உறுப்பை வெட்டினால், யாருக்காவது மீண்டும் இதை போல் செய்ய தோண்டுமா?  இவ்விசயத்தில் அனைவரும் பயப்படுவர்கள்.

பாதிக்கப்பட்டவனுக்குதான் வலி தெரியும், குஜராத் கலவரத்திலும், மும்பை குண்டு வெடிப்பிலும் தனது சொந்த பந்தங்களை இழந்தவர்களுக்கும் தெரியும் வலியும் வேதனையும்,  இவர்கள் இப்படி சொல்லி சொல்லியே அஜ்மல் கசாப்பை விடுதலை செய்ய வைத்து விடுவார்கள்.
 
சிங்கப்பூர் இப்போது பணக்கார நாடுகளில் ஒன்று, மலேசியாவை விட்டு பிரிந்து வரும்போது ஒரு சாதாரன நாடுதான் அது, எப்படி ஏற்பட்டது இவ்வளர்ச்சி? சும்மா இல்லை ஆரம்பத்தில் தவறிழைத்தவர்களையும் லஞ்சம் ஊழல்களில் மாட்டியவர்களை தயவு தாட்சனை இல்லாமல் தண்டித்தார்கள், இப்போது அவ்வாறே உள்ளது சிங்கப்பூர். இங்குதான் எது என்றாலும் கொடியை பிடித்து வந்து விடுகிறார்கள்.

அதிப்படியான தண்டனைகளே குறைவான குற்றங்களுக்கு வழிவகுக்கும்.

தண்டனைகள் அதிப்படுத்த வேண்டும் என்று போராடிகொண்டிருக்க, தண்டனைகளே நீக்க வேண்டும் என்று போராட்டம்...... ம்ம்ம்ம் என்ன செய்வது ஒரு விதமா நோய் இவர்களை பிடித்து ஆட்டுகிறது.

Sep 19, 2009

ரமலான் வாழ்த்துக்கள் | EID MUBARAK | عيد مبارك

ரமலான் வந்தாலே மிகவும் சந்தோசம்தான்.


அந்த மாதம் முழுவதும்...


காலையில் 3 மணிக்கு எழுந்து, சாப்பிட்டு விட்டு, பிறகு தொழுதுவிட்டு காலாற காற்று வாங்க நடந்து கொண்டு வீட்டுக்கு வருவேன்.




பக்கத்தில் எல்லாம் இருந்து சாப்பிட முடியாமல்... தண்ணீர் கூட குடிக்காமல்; இரவு 6:30 வரை பொருந்திருந்து உணவு உண்பது... அல்ஹம்துலில்லாஹ்.


நோன்பு நேரங்களில் தான் அதிகம் தண்ணீர் தாகம் எடுக்கும். நமக்காக ஏதாவது சோதனை நடக்கும், எல்லாவற்றையும் அடக்கு கொண்டு. 30 நாட்கள் பிடிக்கும் நோன்பு, எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.


இதுவரை நான் 30 நோன்புகளை பிடித்ததே இல்லை :( நானும் ஒவ்வொரு தடவையும் முயற்சி செய்கிறேன், ஏதாவது ஒரு விதத்தில் தட்டி போய் விடுகிறது. இந்த தடவை எனக்கு காய்ச்சல் வந்ததால் 4 நோன்பு விட்டுவிட்டேன்.  இன்ஷா அல்லாஹ் அடுத்த வருசமாவது பிடிக்கனும்.


30 நாட்களும் கழிந்தவுடன் கொண்டாடும் மகிழ்ச்சி இருக்கிறதே அது எதற்கும் ஈடு ஆகாது. ஒரே சந்தோசம் தான். இனிமேல் தொடர்ந்து சாப்பிடலாம் என்ற எண்ணம் கூட காரனமாய் இருக்கலாம், ஹிஹி..





Sep 17, 2009

மழலைச் சொல் கேளாதவர்

இப்பதிவு நான் எழதுவதற்கு காரணமே எனது நண்பன்தான்.


அவனேடு நான் சொன்னவைதான் இங்கு உங்களுடனும் பகிர்ந்துகொள்ளனும்னு தோனுச்சு அதான் "மழலைச் சொல் கேளாதவர்", அப்படி என்ன அட்வைஸ் மழையா பொழியப்போறான்னு நென்ச்சு டெர்ரர் ஆகாதீங்க தெரிச்சு ஓடாதீங்க


பதிப்பின் தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சமாவது கெஸ் பண்ணீருப்பீங்க...


அவசரப்படாதீங்க! பொறுமை பொறுமை... :)


நீங்க நினைக்கிறது கிடையாது.. இது டோட்டல் வேற..


நான் பேசப் போறது வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களை பற்றிதான்.


எனது நண்பன் துபாய்ல குப்பை கொட்டுகிட்டு இருக்கான், கொஞ்சம் வருசமாத்தான் அங்க போய் குப்பயை கொட்டுறான்... ஊருக்கு வந்தா அதிக பட்சம் ஒரு மாசம்தான் அதுக்கு மேல ஒரு நிமிசம் கூட இருக்க மாட்டான், இருந்தா ஆப்பு அடுச்சுருவாங்க...


போன வருசம்தான் அவனுக்கு கல்யாணம் ஆச்சு, அதுக்கும் தலைவர் வந்து இருந்தது 30 நாள்தான், சமிபத்தில் அவனுக்கு குழந்தை பிறந்தது... அவன் குழந்தைய பாக்க வருவான்னு பார்த்தால், வரவே இல்லை, கூப்பிட்டு கேட்டான் "வேலை பிசிடா இப்ப வர முடியாது",  இந்த எழவு பதிலத்தான் எப்பவும் சொல்லுவான்.

ம்ம்ம்ம்ம்ம்ம்...

பெத்த புள்ளைய பாக்கம கூட அப்படி என்ன வேலை,  ரெண்டு நாளைக்கு ஊருக்கு வந்துட்டு போய்ட்டாத்தான் என்ன,  உலகத்தில் எவ்வளவே பேர் என்னனெமே செஞ்சும் குழந்தை பாக்கியம் இல்லாம இருக்காங்க, இவனுக்கு இறை அருளால் சீக்கிறமா கிடைச்சுடுச்சி, இவன் இப்படி இருக்கானே இப்படியே மனசுக்குள்ள வருந்தினேன்.  நான் போயி குழந்தையே பார்த்தேன், அப்படியே பூப்போல... கடவுள் அற்புதமானவன்... எவ்வளவு அழகாக படைத்திருக்கிறான். குழந்தைகளை ரசிக்காதவன் மனிதனே இல்லை.

இல்லையா?




இவன் உண்மைதான் சொல்கிறானா, இல்லையான்னு உளவு பாக்கனும்னு,  துபாய்ல இருக்குற என்னோட வேற ஒரு நண்பன்கிட்ட இதப்பத்தி சொல்லி நல்ல விசாரிச்சு சொன்னேன், அவன் சொன்னது "இவனுக்கு இப்ப லீவு கிடையாதாம்!" .

எனக்கு தோனியதெல்லாம், இப்படியெல்லாமா இருக்கனும். ஏன் நம்ம நாட்டில் வேலை  தேடிக்கொண்டு இங்கே குடும்பத்துடன் வசித்தால்தான் என்ன? மிகவும் பாவம் தனது குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள். :( ஏதாவது ஒரு துக்கம்னா உடனடியா வர முடியாமல், சந்தோசம்னா யாருடனே சேர்ந்து கொண்டாடிக்கொண்டு...  சே

பணம்தான் வாழ்க்கையா?

ஒரு சில விசயங்களை கடந்து விட்டால் என்ன முயற்சி செய்தலும், கோடி கோடியா பணத்தை திரும்ப கொட்டினாலும் திரும்ப பெற முடியாது.

ஆயிரம்தான் இருந்தாலும், கல்யாணம் ஆவதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தாலும். கல்யாணத்திற்கு பிறகு கண்டிப்பாக தனது துனைவியருடன் தான் இருக்கனும். ஒரு சந்தோசம்னா பகிர்ந்து கொள்ள துக்கம்னா கூட பங்கெடுக்க இணை எப்போதும் வேண்டும்.  தன்னுடைய குழந்தை வளருவதை பக்கதில் இருந்து அனு அனுவாக ரசிக்க வேண்டும்.

வள்ளுவர் கூட
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலை சொல் கேளாதவர்.


அதாவது,  குழல் இசைதான் சிறந்தது, யாழ் இசைதான் சிறந்ததுன்னு சொல்வார்களாம் சிலர், அவர்கள் யாரென்றால் தனது மழலை பேச்சை கேக்காதவர்களாம்.

Sep 15, 2009

உங்கள் பிலாக்கை பிரபலமாக்க

பிரபலமாக்கனுமா?

வழி #1 
முடிந்த அளவு அனைத்து தமிழ் திரட்டிகளிலும் உங்களின் பதிவு வெளியுடுமாறு செய்யவும், அதாவது தமிழ்மணம், தமிழ்ஸ்... இப்படி.

வழி #2 
நீங்கள் வெளியிடுவது அனைத்து மக்களுக்கு போய் சேர சர்ச் இஞ்சினின் உதவியும் வேண்டும். அதாவது நமக்கு ஏதாவது தேவை என்றால் கூகுள் வெப்சைட்டில் சென்று தேடுகிறோம், அதே போல்  உங்களது பதிவு கூகுள் சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், கூகுள் மட்டும் அல்ல பல சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், சில மாற்றம் செய்ய வேண்டும்.  பிலாக்ஸ்பாட் இயல்பாகவே இவ்வசதியை மறைத்து வைத்துள்ளது.

அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு
Dashboard -&gt; Layout -&gt; Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து. 









இப்படத்தில் இருக்கும் 'nofollow' என்பதை 'follow' என்று மாத்திவிடவும். பிறகு சேவ் செய்து விடவும்.


வழி #3
முதலில் கூகுள் அனலையிக்ஸ் என்ன என்று பார்த்து விடுவோம். நீங்கள் சொந்தமாக பிளாக் அல்லது வலை வைத்திள்ளீர்களா?   அவ்வலைக்கு வருகை தரும் பார்வையாளர்களின் சாரசரி பற்றி அறிய நினைக்கிறீர்களா?  நாம் இதற்காக மற்ற நிறுவனம் தயாரித்தவகைலையே உபயோகப்படுத்துகிறோம். இப்போது கூகுள் முற்றிலுமாக இலவசமாக இதை தருகிறது. 

இதை உபயோகப்படுத்துவதினால் 
1. கூகுள் SEO  நம்மை இனைத்து கொள்கிறது.
2. நமக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும்
3. வருகைதருபவர்கள் எங்கிருந்து வந்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளளாம்
4. வருகைதருபவர்கள் எண்ணிக்கையும் பிறகு அவர்களால் படிக்கப்பட்ட பதிவும் எவை எவை என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
5. தேதி வாரியாக அறிந்து கொள்ளலாம்.
இன்னும் பலவேறு பலன்கள் உண்டு.

இதை நடைமுறை படுத்த

1. http://www.google.com/analytics/ உங்களை பற்றி பதிவு செய்யுங்கள்

கீழ்வரும் படங்களில் உள்ளது போல் தொடர்ந்து செய்யவும்












முதலில் பதிவு









உங்கள் தளத்னைப் பற்றிய தகவல்களை தரவும்.









உங்களை பற்றிய தகவல்களை தரவும்.



"Yes, Agree" என்ற டிக் மார்க்கை டிக் செய்து விட்டு "Create New Account" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

சரியான முறையில் உங்கள் கணக்கு பதிவாகிவிட்டால்







இப்படி ட்ராக்கிங் பேஜ் கமிக்கபடும்.

இதுதான் மிகவும் முக்கியம்.

இதில் உள்ள கோட் காப்பி செய்து

உங்களது பதிவில் போடவேண்டும்.





அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு

Dashboard -&gt; Layout -&gt; Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து.






என்று இருப்பதை தேடி அதற்கு முன்பு அக்கோட போடவேண்டும்.






 






பிறகு சேவ் செய்து விடுங்கள்.

உஸ் அப்பாட... அவ்வளவுதான் முடிந்தது.

பிறகு நீங்களும் சொல்லலாம் "நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்" :D

நீங்க விரைவில் மிகவும் பிரபலமடைய வாழ்த்துக்கள்.



கடைசியா ஒன்னு...:  பிலாக்கை பிரபலமாடைய வைக்க,  அடிக்கடி பதிவிடுதலும், பின்னூட்டத்துக்கு பதிலளித்தலும் முக்கியம். ரெம்ப பெரிய எழுத்து திறமைலாம் தேவையே இல்லை. அட, எந்த திறமையும் தேவையே இல்லை. பல பேரு இப்படிதானே இங்கே குப்பை கொட்டுறாங்க.


கட்ட கடைசியா இன்னும் ஒன்னு...: உங்களின் புரோபைலின் பெயர் பெண்பாலில் வைத்து இருந்தால்... ஹிட்டோ ஹிட்டுதான்.

Sep 14, 2009

அரசு ஊழியர்களின் மட்டும் குற்றவாளிகளா?

சமிபத்தில் ஒரு முக்கியமான அதுவும் மிகவும் வரவேற்க்க கூடிய கருத்து தெரிவித்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள்.
அக்கருத்து இதுதான் (கவனிக்கவும் கருத்துதான் தீர்பு அல்ல)


ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.



ஊழல் குற்றங்களை ஒழிப்பது தொடர்பான மாநாட்டில் அவர் பேசுகையில்,


பொது மக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கி குவிக்கும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது நியாயமானதே. லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு உரிய சட்டம் கொண்டு வர வேண்டும்.


அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்து அதன் மூலம் சொத்துக்களை குவித்திருந்தால் அவரிடம் உள்ள சொத்துகளை ஜப்தி செய்யும் பொறுப்பு அம்மாநில அரசுக்கு உண்டு.


லஞ்ச-ஊழல் தடுப்பு புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்துள்ள சுமார் 9,000 வழக்குகள் நீதிமன்ற பற்றாக்குறை காரணமாக நிலுவையில் இருந்து வருகின்றன.


வழக்கு தொடருவதற்கு உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வழங்குவதன் மூலமும் தாமதத்தை தவிர்க்க முடியும்.


ஒரு அரசு அதிகாரி மீது லஞ்ச ஊழல் புகார் எழுந்தால் அதை விசாரிக்க அனுமதி வழங்குவதற்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை ஆகிறது. இப்படி காலதாமதமானால் விசாரணையை எப்படி நடத்த முடியும்?.


ஊழல் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்கு சிறப்பு வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் இத்தகைய வழக்குகளைச் சிறப்பாக நடத்த முடியும்.


மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அரசு வழக்கறிஞர்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதற்குப் பதில் குறிப்பிட்ட வழக்கறிஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் இந்த வழக்குகளை அவர்கள் திறமையாகக் கையாள முடியும்.


ஊழல் வழக்குகளில் அதிக எண்ணிக்கையில் சாட்சிகளை சேர்ப்பதில் தான் சிபிஐ கவனம் செலுத்துகிறது. அதற்குப் பதில் வலுவான ஒரு சில சாட்சிகள் மூலம் வழக்கு விசாரணையை விரைவிலேயே முடிக்க முடியும். வழக்குகளை 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை இழுக்க வேண்டிய அவசியமிருக்காது. 10 சாட்சிகளை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதை விட ஒரே ஒரு உறுதியான சாட்சியை முன்னிறுத்தி வழக்கை சிறப்பாக நடத்தலாம்.


ஊழல் வழக்கு களை விசாரிப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பிட்ட அரசு அதிகாரி லஞ்ச ஊழல் புரிகிறார் என்பதற்கு உரிய ஆதாரங்களை அளித்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வழக்கு பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.


மத்திய அரசின் முன்னோடி திட்டமான கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் பட்டியல்கள் போலியாக தயாரிக்கப்பட்டு எந்த வேலையும் செய்யாத இடைத்தரகர்கள் ஊதியம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதேபோல் அத்தியாவசிய பொருட்களை பொது மக்களுக்கு வழங்கும் பொது வினியோக திட்டத்திலும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்றார் பாலகிருஷ்ணன்.

நன்றி தட்ஸ்தமிழ்


இது மிகவும் சந்தோசமடைய கூடிய ஒன்றுதான், நமது நாட்டில் இப்படி சிந்திக்க கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது மிகவும் அதிசியம்.

சட்டம் எல்லாரும் பொதுவாகவா இருக்கிறது?  சட்டம் என்பது வாதாடும் வழக்குறைஞரின் வாத திறமையால் முடிவு செய்ய படுகிறது. பணம் உள்ளவன் சிறந்த வழக்குறைஞரை தேர்வு செய்து வழக்கில் இருந்து விடுவித்து கொள்கிறான், இல்லாதவனுக்கு கோவிந்தாதான்...  நீதியை ஒலிக்க வேண்டிய சட்டம் பணம் உள்ளவனிடம் ஒளிந்து கொள்கிறது அல்லது பணத்தால் ஒழிந்து போய்கிறது.

அரசு ஊழியர்கள் தவறு செய்தால்  உச்ச பட்ச தண்டனை, இடமாற்றம்தான், அதுவும் குறிகிய காலம்தான்... பிறகு அவர்கள் ஏதாவது (?) செய்து பழைய இடத்தை அடைந்து விடுவர்கள்.

அரசு ஊழியர்களின் தவறுக்கு அவர்களின் சொத்துக்க்ளை பறிமுதல் செய்வதை விட, அதற்கு தூண்டு கோலாக இருக்கும் அரசியல்வதிகளின் சொத்தை பறிமுதல் செய்யலாம்.  ஏனெனில் வெற்றி பெற்ற மனிதனின் பின்னால் ஒரு பெண் இருப்பது போல், தவறு செய்யும் அரசு ஊழியர்கள் தவறுக்கு பின்னால் அரசியல்வதிகள் இருக்கின்றனர்.

நமது அரசாங்கமும் அரசு ஊழியர்களின் தவறுக்கு பாதிப் பொறுப்பு எடுத்து கொள்ளலாம், ஏன் என்றால்... அரசாங்க வேலை செய்யும் ஊழியர்களில் சிலருக்கு மிக அதிக மிக மிக அதிக சம்பளமும் சிலருக்கு மிகக்குறைவன சம்பளமும் கொடுக்க படுகிறது.   இவ்விசயத்திலே அரசாங்கம் சரியான விதி முறைகளையும் அனைவருக்கும்  நல்ல சம்பளமும் வழங்கினால், ஏன் தவறு செய்ய போகிறார்கள். 

1947 எழுதிய சட்டத்தை வைத்துக்கொண்டு அழுவதை விட, காலத்திற்கு தகுந்தார் போல் சிறந்ததை உருவக்கி கொள்ளலாம்.

டிஸ்கி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குன்னு இவங்களே கேச பைல் செஞ்சு விசாரிப்பாங்களே,  அதப்போல ஊழல் செய்பவர்களுக்கு எதிரா ஏன் செய்யவில்லை? சும்மா தோனுச்சி அதான் டிஸ்கில...

Sep 9, 2009

சென்னை 2020

வாவ்வ்வ்வ்வ்வ்வ்....


வாவ், வாவ், இப்படி ஆரம்புச்ச ராஜுதான் வீடு வந்து சேர்கிற வாவ், வாவ்வ்வ்வ்வ்வ்வ் இவைகளை விடவே இல்லை.


ராஜு என்னோட பிரண்டுதான் இப்பதான் அமெரிக்கவிலிருந்து வாறான்.


அவன் அமெரிக்கா போனத இப்ப நினச்சாலும் காமடியா இருக்கும்.


அவன் காலேஜ் படிக்கிற போது ஆங்கிலத்துக்கு எதிரியா இருந்தான், எதிரினாலும் எதிரி காட்டு எதிரி... அவனுக்கு எதுக்கு ஆங்கிலமேல கடுப்பு வந்துசுச்சுன்னா, எல்லாரும் ஒரு பிகருக கூட சுத்திக்கிட்டு இருக்க, இவன் எவ பக்கதுல போனாலும் தஸ்புஸ்ஸுன்னு ஆங்கிலத்துல பேசுனவுன்னே, அவனுக்கு அவளுகளுக்கு பதில் சொல்ல முடியாததுக்கு காரணம் ஆங்கிலம்தான்னு முடிவு செஞ்சு; ஆங்கிலத்தையே ஜென்ம விரோதியக்கிட்டான், ஆங்கிலம் யாராவது பேசினாலே அவங்க அவனுக்கு எதிரிதான் அதுமட்டும் இல்ல, நானும் அவங்களுக்கு எதிரியாடனும்.




இப்படி இருந்த ராஜு வாழ்கை, விதியின் வசத்தால ஆங்கிலம் கத்துகிற சூழ்நிலை வந்துடுச்சு. நாங்க எல்லாரும் படிச்சுட்டு வேலை தேடிக்கிட்டு இருக்க, தொரை ராஜு மட்டும் வேலை தேடாமல் எல்லாத்துக்கு இந்தியாதான் காரணம், இங்க இருக்குறுவங்க உருப்படவே மாட்டாங்க இப்படி சொல்லி சொல்லியே அவனுக்கு இந்தியா வெறுத்து, அமெரிக்கா மேகம் ஆட்டியது.




அமெரிக்கா போறதுக்கவே ஆங்கிலம் கத்துக்கிற ஆரம்புச்சான், கடைசில கத்துகொடுத்தவருக்கு எல்லாம் மறந்து இவன் தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசி கஷ்டப்பட்டு அமெரிக்கவுக்கு ஜுன் 5, 2005 போய்ட்டான்.


அங்க போனாலும் அடிக்கடி எனக்கு போன் பேசுவான்.


அங்க ஒருத்திய கல்யானம் பன்னிக்கிட்டதா தகவல் சொன்னான், அடுத்த 2 வருடத்துல டைவர்ஸ் ஆச்சுங்கிற விசயதயும் சொன்னான்....


இடையில் இந்தியா வரவே இல்லை.


அவன் போயி 15 வருசம் ஆச்சு, இப்பதான் ஆகஸ்ட் 15, 2020 கரெக்டா இந்தியா சுதந்திரதினம் அன்று திரும்ப வந்துட்டான். நாந்தான் சென்னை அண்ணா விமான நிலையம் 22வது டெர்மினல் 159 கேட்டில் வெயிட் செஞ்சு கூட்டி வந்தேன். கூட்டிவரும்போதுதான் அவன் கூறிய வார்த்தைகள்தான் ஆரம்பத்தில் இருந்தவை.




விமான நிலையத்தில் வாய ஆன்னு பிளந்தவந்தான்... சென்னை மெட்ரே ரயில், எலக்ட்ரானிக் சிட்டி,  சென்னை நகரம் முழுமைக்கும் ஏசி, உலகத்தின் உயரமான கட்டிடம், மிகப்பெரிய விளையாட்டு திடல், பறக்கும் கார்கள் அதுவும் அன்று சுதந்திரதினம் சென்னையே விழாக்கோலம் பூண்டிருந்தது இப்படி எல்லத்தையும் பார்த்து வியந்தான்


வீடு வரும் வரை வாவ்தான். எனக்கு காதுல இருந்து ரத்தமே வந்துடுச்சுன்னா பாத்துக்குங்களேன்.




வீடு வந்தவுடன் ஒரே புலம்பல்தான்....



அமெரிக்கா சரியில்லடா, ஜார்ஜ் z புஷ் நிர்வாகமே வேஸ்ட்டா. அமெரிக்கா காரனுக்கு எத கண்டாலும் பயம், இப்பவுலாம் அமெரிக்கவுல வேலை இல்ல திண்டாட்டம் அதிகமாய்டே போகுது,  அமெரிக்காககாரன் (அவனே அமெரிக்காக காரன்தான்) வேலை பாக்காதா நாடே இல்லைனு ஆயுடுச்சு,  உலகத்துல எல்லா இடத்திலயும் அமெரிக்கா காரன் இருக்கன், இப்பவுலாம் அமெரிக்கா காரனுக அதிகமா இந்தியாவுக்குதான் வேலைதேடி வாராங்க,  அதான் நானும் வந்துட்டேன்.




எனக்கு மனசுக்குல்லே ஒரே ஆனந்தம், மவனே இந்தியா புடிக்கலைன்னு போனே. இப்ப பத்தியா இந்தியாவுக்கே திரும்ப வந்துட்டே...வாடா வா அப்படின்ன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டு

ஆமாம் ராஜு நீ சொல்லுறதும் சரிதான். இப்ப இந்தியாதானே உலகத்தின் வல்லரசு, அப்துல் கலாம் ஆசைப்பட்ட இந்தியா 2020 அடைந்து விட்டது. பக்கதில இருக்குற இருக்குற பாகிஸ்தான் நாமகிட்ட வாலட்டுறதே இல்லை, நாம சொல்லுறததான் ஐநா சபை கேக்குது, இந்தியா சொன்னதுக்கக சைனாமேலயிம், இலங்கைமேலயும் பொருளாதார தடை விதிச்சுருச்சு. இந்தியாவின் சக்திய பாத்த அய்ரோப்பாவெல்லாம் உலகத்தின் நாணயமா ருபாயை ஏத்துகிருச்சு, அவ்வளவு ஏன் சவுதிக்கே பயோ பெட்ரோலை இந்தியாதான ஏற்றுமதி செய்து.



இப்படி இந்தியாவின் அருமை பெருமைகளை நண்பனிடம் கர்வத்துடன் சொன்னேன். அப்பத்தான் வாசலில் இருந்து ஒரு குரல்




"அய்யா, சாமி, சாப்புட்டு ரெண்டு நாளாச்சு, ஏதாவது சாப்பாடு போடுங்க சாமி"






================






இந்தியா 2020ல் எப்படி இருக்குனு நினைப்பேன். அதான் இப்படி வந்துருக்கு இது என்னுடைய முதல் கதை, அடிக்கடி சுஜாத்தவுலாம் எட்டிப்பாப்பாங்கா. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.


நட்புடன்
மஸ்தான் ஒலி

Sep 7, 2009

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

தாங்களின் சேவைகளை பெற்று பலனடைந்து கொண்டுருக்கும் பல்லாயிரம் பேர்களில் நானும் ஒருவன். முகமறியா நண்பர்களை தொடர்பு கொள்ளவும், பல விசயங்களை பற்றி தெரிந்து கொள்ளவும் தாங்கள் ஆற்றிவரும் சேவை மிகப் பெரியது.

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

நான் அடிக்கடி தமிழ்மணத்தில் கவனிக்கும் ஒரு விசயம் "மறுமொழிகள்" பகுதி. நான் மட்டும் அல்ல தமிழ்மணத்தில் இளைப்பாரும் பலபேர்கள் 'ம' திரட்டியல் திரட்டபடும் "மறுமொழிகள்" பகுதியை பார்த்துதான் மேலும் பின்னூட்டம் இடப்படும் பதிவாளர் பதிவை அதன் மொத்த பின்னூட்டம் எண்ணிக்கை பொருத்தே அதனின் வாசகர் விரும்பிபடிக்கும் பகுதி / சூடான இடுகைகள்  என்று நம்ப படுகிறது... அதாவது நம்பவைக்க்கப்படுகிறது.

'ம' திரட்டி மிகவும் சிறந்த ஒன்று.

ஒரு பர பரப்பான பதிவை அதாவது அதிக எண்ணிக்கையில் பின்னூட்டம் வாங்கிய சூடான இடுகைகள் பதிவை திறந்து பார்தோம் என்றால், ஒன்று அப்பதிவின் உரிமையாளர் அதிகமாக எல்லோருக்கும் பதில் அளிந்துருப்பார் அல்லது சில நபர்களே திரும்ப திரும்ப அப்பதிவில் பங்கு பெற்று அப்பதிவின் பின்னூட்ட எண்ணிக்கையை உயர்த்த பாடுபட்டிருப்பார்.

நான் அனைத்து பதிவுகளையும் அவ்வாறு கூறவில்லை... சில பதிவுகள் அவ்வாறு உள்ளன...

எனது எண்ணப்படி,  இதை ஆலோசனை என்றே வைத்துக்கொள்ளலாம்

  1. ஒரு பதிவில் பின்னூட்டம் ஒரு வாசகரால் இடப்பட்டால், தமிழ்மணம் அவரின் பின்னூட்டத்தை எண்ணிக்கையில் சேர்த்துகொள்ளலாம், அப்பதிவில் மீண்டும் அவரால் பின்னூட்டம் இடப்பட்டால் தமிழ்மணம் அவரின் பின்னூட்டத்தை சேர்க்காமல் விட்டு விட வேண்டும்.
  2. பதிவின் உரிமையாளர் இடப்படும் பின்னூட்டம் தமிழ்மணம் கணக்கில் சேர்க்காமல் விட்டுவிடலாம்.
  3. அனானியாக பின்னூட்டம் இடுபவரின் IP எண்னை பொருத்து தமிழ்மணம் அவரை சேர்க்கலாம்/நீங்கிவிடலாம்.

அதாவது ஒரு பதிவில் ஒருவர் எவ்வளவு முறை பின்னூட்டம் இட்டாலும் ஒரு முறை மட்டும் (unique) பின்னூட்டம் இட்டவராக கருதப்படவேண்டும்.


நன்றி மற்றும் நட்புடன். 
மஸ்தான் ஒலி

Sep 6, 2009

நன்றிகள் பல...

நானும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், ஏதாவது தப்பு வந்துடுது... :(  ஒரு வார்த்தைகளை டைப் செய்து அதை சரிய இல்ல தப்பா இருக்குமோன்னு நான்  கவலைப்படுவது இருக்கே உஸ்ஸ்ஸ்.. அது கொடுமை, வருங்காலம் என்னை பழிக்குமே, எனது தமிழையும் அல்லவா தவறாக பழிக்கும் (ஹிஹி) எனற காரணத்தினாலே  இலக்கண தவறு இல்லாம முயற்சி செய்கிறேன்,  என்ன என்ன்வே பண்னுனாலும் தப்பு வந்துடுறது... என்ன பண்னுறது, முயற்சி செய்கிறேன் முற்றிலுமாக சரி செய்வதற்கு.

நீங்கள் எனது எண்ண  எழுத்தில் ஏதாவது வண்ணப்பிழை கண்டால் தயங்காமல் சுட்டி காட்டவும், தவறுகள்தான் சரியான பாதைக்கு வழிவகுக்கும்.

இதுவரை நான் சில இலக்கணப்பிழைகளை செய்துள்ளேன்... (இப்ப சரி செஞ்சுட்டேன் :) )

முதலில் "எனது என்னங்க்கள்" என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன்.  ன ண வுக்கும் அவ்வளவு வித்தியாசமா?

ஆனாலும் அடங்காத எனது தமிழார்வத்தாலும் உங்களை துன்புறுத்துதல்  மகிழ்ச்சி ஏற்படுத்துவதாலும்  எழதுவதை மட்டும் நிப்பாட்டவில்லை. நல்லவேலை நான் அனானி பின்னூட்டுத்துக்கு அனுமதிக்கவில்லை... இருந்து இருந்தால் என்ன சாகடுச்சுருப்பாங்க இல்லையா? ஹிஹி

எங்கு ழ வரும் எங்கு ள, எப்ப ன இல்லை ண இப்படி ஒரே குழப்பமோ குழப்பம். :(  யாராவது இத சரி பண்னுவதற்கு பிலாக் போட்டா தேவலை.

எனது எண்ணத்துக்கு ஊக்கம் தந்து, சில தவறுகளை சரி செய்ய உதவிய நல்ல உள்ளங்களான பீர், கார்த்திக்கேயன் மற்றும் அலுவலக சகாவான் சாகதேவனுக்கும் நன்றிகள் பல.

இங்கு வந்து என்னை ஊக்கிவித்து கொண்டு  மற்றும் விக்காம இருக்கும் அனைவருக்கும் நன்றிகள் பல...




நட்புடன்
--மஸ்தான்

Sep 4, 2009

தண்டனைகள் அதிகப்படுத்த வேண்டுமா?

இப்போதுதான் நான் சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கியது உண்மையே! – நீதிமன்றத்தில் ஒப்புதல்.   பதிவை பார்த்தேன். அதில் கூறப்பட்டு இருக்கும் ஒரு விசயம் இன்னும் நாம் 1947 ஆண்டு உருவக்கிய சட்டத்தை  வைத்து அழுது கொண்டு இருக்கிறேம் என்பது உறுதியானது.  


நம்ம ஆட்கள் ரெம்ப மறதியானவங்க அவங்களுக்காக


சின்ன பிளாஷ்பேக்
இரண்டு வருடங்களுக்கு முன்பு இளஞ்செழியன் எனும் இலங்கை தமிழர் சரவணா ஸ்டோரில் பொருட்கள் வாங்க செல்லும் போது அவரின் மீது சந்தேகப்பட்ட சரவணா ஸ்டோர் உழியர்களால் தாக்கப்பட்டார், இவ் விசயம் கூட அனைத்து பத்திரிக்கைகளும் வெளியிட்டன, நாம் கூட இதை கவனித்து, எப்பவும் போல மறந்து இருப்போம்.





 இப்போதுதான் அதுக்கு தீர்ப்பு வந்துள்ளது... நீதி என்றாவது ஒருநாள் வெல்லும் என்பது உண்மையாகி விட்டது.


ஆனால்..


ஆனால்....


ஆனால்........




அடிப்பதற்கு காரணமாக இருந்த சரவணா ஸ்டோர் உழியர்களுக்கு தல 1500 ருபாய் தண்டனை என்று தீர்ப்பு வந்துள்ளது.  நான் தவறாக எழுத வில்லை இது ஆயிரத்து ஐநூறு இது ஆயிரத்து ஐநூறு இது ஆயிரத்து ஐநூறு ருபாய்தான் மட்டும்தான். என்ன ஒரு கொடுமை... இதற்க்க பாடுபட்ட இளஞ்செழியன்  எவ்வளவு மனம் நொந்திருப்பார், எவ்வளவு  பணம்  செலவளித்திருப்பார்.  அந்த உழியர்கள் ஈஸியாக பணத்தை கட்டிவிட்டு டாடா காமித்து சென்றுருப்பார்கள்.


ஒரு தண்டனை என்பது, தப்பு செய்தவரால் கால காலத்திற்க்கும் நினைத்து பார்க்கவும், எதற்க்கக தண்டனை பெற்றாறே அதை மீண்டும்  செய்யாதிருக்கத்தான்.


இப்போது கொடுத்திருக்கும் தண்டனை கொஞ்சம் கூட போதுமானதாக இல்லை. சரவணா ஸ்டோரில் வேலை பார்ப்பவர்கள் மிகவும் ஏழ்மையனவர்கள்தான், ஆனாலும் இதை மீண்டும் அவர்கள் செய்யாதிருக்க தண்டனை தொகையை அதிப்படுத்திருக்க வேண்டும். குறைந்தது ஒருவருக்கு ஒரு லட்சம் அபராத தொகையும், அதில பாதியை சரவணா ஸ்டோர் கட்டுமாறும் செய்திருக்களாம், கூடவே சிறிது காலம் சிறைத்தண்டனையும் வழங்கிருக்கலாம்.


பஸ்சில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தால், தண்டனை தொகை எவ்வளவு தெரியுமா? 500 ருபாய் மட்டுமே.


நமது சட்டத்தில்,  கொஞ்சம் மாற்றம் செய்து,  இப்போது உள்ள விலைவாசிக்கு தகுந்தாற் போல் மாற்றம் செய்ய வேண்டும்.


மாற்றம்னு சொன்னாலே குய்யோ முய்யோன்னு குதிக்கும் கூட்டத்தை அடக்கி விட்டுடுதான் ஏதாவது செய்யனும்.




படத்திற்கு நன்றி நுகர்வோர் நலன்


குற்றம் குறைய தண்டனைகள் அதிக்ப்படுத்த வேண்டும்.

Sep 3, 2009

ராஜசேகர ரெட்டியை பார்த்த அனுபவம்

ஒரு சிறந்த முதலமைச்சரை இழந்துள்ளோம்...

மிகவும் வருத்தமாக இருக்குறது.

இந்தியா டுடே வார இதழ் நடத்திய கருத்துகணிப்பில் இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக தேர்வாகிருக்கிறார். மிகவும் எமையானவர் கூட. நான் அவரை மிகவும் பக்கத்தில் இருந்து பாத்துருக்கிறேன். பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு தடவை நிஜாமபாத் சென்றிருந்த போது,  ஒரு பொது கூட்டம் நடந்தது, நானும் சென்றிருந்தேன். அப்போதுதான் நான் அவரை பார்த்தேன். அவர் பேச ஆரம்பித்தவுடன் அவ்வளவு நேரமும் சப்தமிட்டு கொண்டிருந்த கூட்டம் அப்படியே அமைதியாகி விட்டது. மிகவும் அழகாக, உணர்ச்சி பொங்க பேசினார், ஒரு ஆவலால் கூட்டத்திற்கு சென்ற நான் அவரின் பேச்சு தூண்டுதலால் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் செல்ல ஆரம்பித்தேன். ஒரு முழுமையான உரையாக அதுவும் ஒரு அரசியல்வாதியின் பேச்சாக நான் YSR பேச்சைத்தான் கேட்டேன், அதுவும் மிகவும் விரும்பி. அப்போது நடந்த ஒரு சம்பவம்,  ராஜசேகர ரெட்டி தனது உரையை  முடித்து கொண்டார், என் அருகில் நின்றிருந்த ஒருவர் அவரிடம் ஏதே பேச வேண்டுமோ அல்லது ஏதே மனு கொடுக்க வேண்டுமோ போல;  YSR மிக அருகில் செல்ல முயற்சிக்கிறார்... எவ்வளவே முயற்ச்சித்தார். போலிஸ் ஆட்கள் அவரை தடுத்து விட்டனர். ஒரே சோக மயமாக நின்று கொண்டிருந்தார். பாவம் என்ன கொடுமையோ என்ன கஷ்டமோ... கீழ் இறங்கிய YSR அவரை கூப்பிடுமாரு  ஒரு போலிஸ்காரரிடம் சொல்லியவுடன் அவரும் YSR பக்கதில் சென்றார்... எனக்கு என்ன ஆச்சிரியம் என்றால் அவர் அவ்வளவு கூட்டத்திலும் எப்படி அந்நபரை கவனித்தார் என்பதுதான்.   அப்போதிருந்து எனக்கு YSR  மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது













யாரையும் யாருடனும் ஒப்பிட கூடாது, இருந்தாலும் மனசி கேட்கலை... சந்திரபாபு நாயுடு நகரங்களை மட்டும் கவனித்தார் ஆனால் YSR நகரம் கிராமம் இரண்டயும் சரியாகவே கவனித்து வந்தார். இப்ப ஒரு முறை பதவிக்கு வருவதே மிக கஷ்டம், ஒரு முறை 5 வருடம் சிறப்பக ஆட்சி செய்து விட்டு, மீண்டும் வருவது என்பது Y ராஜசேகர ரெட்டிகாரின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த ஒரு நற்சான்றிதழ். ஆன கொடுமை ஆந்திரா மக்களுக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது... ஆந்திராவில் ஹெலிகாப்டர் மரணம் அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு பாலயோகி, நடிகை செளவுந்தர்யா இப்போது ராஜசேகர ரெட்டி.. மரணமே மிகவும் கொடுமையான ஒன்று, நாம் பக்கதில் இருந்து பார்த்தவர்களின் மரணம் கொடுமையிலும் கொடுமையா இருக்கும்.



ராஜசேகர ரெட்டிகாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். அவரின் இழப்பு இடுகட்ட முடியாதது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினர் மற்றும் ஆந்திரா மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.



வாழ்வதற்காக வருடங்களை எண்ணாதீர்கள். வாழ்ந்த காலத்தில் ஏழை மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை உங்களுக்கு நீங்களே அடிக்கடி கேட்டுக்கொள்ளுங்கள். அது தான் முக்கியம்.

--ராஜசேகர ரெட்டி

Sep 1, 2009

பா.ராகவனின் மாயவலை டவுன்லோடு

பா ராகவனின், எழுத்தை படித்திற்கிறீர்களா? சூப்பரா இருக்கும்.  மாயவலையில் தீவிரவாதம்,  அரசியல், மதம், அமெரிக்கா இப்படி பல்வேறு விசயங்களை பற்றி மிகவும் தெளிவாக இருக்கும்.
என்னிடம் சில தமிழ் இ-புத்தகம் உள்ளது...

அவைகளை நான் தொடர்ந்து அப்லோடு செய்கிறேன்.  இப்போது பா.ராகவனின் மாயவலை புத்தகத்தை அப்லோடு செய்து உள்ளேன். இது மிகவும் அருமையான புத்தகம். நான் மிகவும் விரும்பி படித்த ஓர் தொடர்தான் மாயவலை. பா.ராகவன் நான் மதிக்கும் மற்றும் மிகவும் விரும்பி படிக்கும் எழுத்தாளர்.  அவரின் டாலர் தேசம்இரண்டு இணங்களின்  ஈரம்  கனியாத சரித்திரம்நிலவெல்லாம் ரத்தம் அற்புதமான தொடராக குமுதம் ரிப்போட்டரில் வந்தது. மாயவலையும் குமுதம் ரிப்போட்டரில் 2 வருடமாக வந்ததுதான், நான் அதற்காவே குமுதம் ரிப்போட்டரில் வாங்கி படிப்பேன். மேலும் குமுதம் வெப்சைட்டிலும் அதை வெளியிட்டார்கள் ஆகயால் தொடர்ந்து இ-புத்தகமாக கொண்டுவர முடிந்தது. 



பாருங்களேன் பாலஸ்தீனம் எப்படி எப்படி எல்லாம் தனது நிலப்பரப்பை இழந்துள்ளது என்று.


இதை இங்கு வெளியிடுவதற்கு முன்பு பல தடவை என்க்கு நானே கேள்வி கேட்டு கொண்டேன், அதாவது, அப்புத்தகத்தின் பதிப்பு/மறுபதிப்பு குமுததிற்கே உரியது. நான் செய்வது தவறான செயல்.  இப்புத்தகத்தின் ஆசிரியர், பதிப்பளர் அல்லது சட்டபடி இதனுடன் தொடர்புடையேர் இதற்கு மறுப்பு தெரிவித்தால் நான் இப்பதிவை நீங்கி கொள்கிறேன். தமிழ் இ-புத்தகம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்ற லாப நோக்கமற்ற காரணத்தினாலே அப்லோடு செய்துள்ளேன்.


உங்களுக்கு மாயவலை பிடித்திற்கும் என நினைக்கிறேன். வேறு இ-புத்தகம் வேண்டும் என்றால் இங்கு பின்னூட்டம் இடவும், முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.

புத்தகம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்