Aug 23, 2009

ஹாய் நண்பர்களே

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...


நானும் பிளாக் ஆரம்புச்சுட்டேன், ஆரம்புச்சுட்டேன், ஆரம்புச்சுட்டேன்...

இவன் என்னடா எழுதி கிழிக்க போறான்னு நினைக்கலாம்,  அட நானே இதத்தான் நினைச்சேன், பல இடத்துல பின்னுட்டம் போடுறோம், எத்துன நாட்களுக்கு பின்னூட்டமா போடுறது, இனிமேல் முன்னோட்டம் போடலாம் முடிவு எடுத்துட்டேன்.  சரி பல நாள் ஆசை, தமிழ் மக்களுக்கு ஒரு கொடுமை நடக்கனும்னா யாரால என்ன பண்ண  முடியும் :) உங்க விதி அவ்வளவுதான் ஹிஹி. 

எழுத்துல தப்பு இருந்துச்சுன்னா சுட்டி காட்டுங்க, எழுத்தே தப்பா இருந்துச்சுன்னா குட்டி காட்டுங்க. (அதிகமா டி.ஆர் படம் பாத்த எபெக்ட் ஹி ஹி).  இங்க நான் எழுத்போறது, என்னை பாதித்தவை பற்றியும் என்னால் பாதிக்ப்பட்டவை பற்றியும். யாருக்கும் ஒரு தீங்கு கூட நினச்சதுல்லை... எல்லாரும் எல்லாம் பெற்று வாழனும்தான் நினைப்பேன். எனக்கு எனது மார்க்கம் பிடிக்கும் அதேநேரத்தில் மதம் பிடிக்கவில்லை,  நல்ல ஒரு  முஸ்லீமா வாழ  முயற்சி செய்திக்கிட்டு இருக்கேன். மற்றவர்களை மதிக்காதவன் மனிதனே இல்லை. கணினி பற்றி ஏதோ தெரியும் என்பதால் அதைப்பற்றி பதிவும் இடுகிறேன். கணினி ஏதாவது சந்தேகம்னா எஸ்கேப் ஆயிக்கிற்றேன் ஹிஹி :D .  எனக்கு பல விசயத்துல ஆசை இருக்கு... திரைப்படங்களில் நடிக்கனும்னு, பல மொழி கத்துக்கிறனும்,  ஊர் நல்லா சுத்தனும்னு,  கணினி உலகத்துல இந்தியாவுக்கு பேரு வாங்கி தாறது போல ஏதாவது சாதிக்கனும்னு,  என்னுடை அம்மா அப்பவை ஹஜ் அனுப்பணும்னு இப்படி பல ஆசை இருக்கு... இன்ஷா அல்லாஹ் நிறைவேறணும்...   எல்லாருக்கும் தான் எல்லா ஆசையும் இருக்கீங்களா? சரிதான். தமிழ் ரெம்ப புடிக்கும் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.  இதுதான் என்னோட பயோகிராப். ஏதாவது தெரியனும்னா mmastanoli@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.


என்ன பற்றி ஒரு சிறு அறிமுகம்


பெயர்:  மஸ்தான் ஒலி
இருப்பது: சிங்கார சென்னை
படிப்பு: MSc [IT]
வேலை: கணினி பொறியாளர் (கற்றது கையளவு)
தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் (பெண்கள் பேசுகிற மலையாளம் அழகோ அழகு)
பொழுது போக்கு: ஊர் சுற்றுறது, பாட்டு கேக்குறது, புத்தகம் படிக்கிறது, படம் பாக்குறது, சாட் பன்னுறது, இனிமேல் இப்படி எழிதி உங்களை கொல்லுறது :)


கொஞ்சம் கொஞ்சமா எழுதுறேன்... அடிக்கடி வாங்க. ஊக்குவீங்க.




கடைசியா ஒன்னு...
ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்...  மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

19 comments :

Anonymous said...

welcome, keep writing. all the best. and pls remove that word verfication.

Unknown said...

Thanks Mayil. :)

you are my first visiter...

Admin said...

வாழ்த்துக்கள் தொடருங்கள் அடிக்கடி வந்து போகிறோம்

Unknown said...

Thanks சந்ரு

george ananth said...

hi

Unknown said...

Hi george

ஜியா said...

salaam.. kalakunga.. welcome to Blog world...

Unknown said...

ஸலாம் ஜியா,

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Laksha said...

Keep rocking dear!!

Unknown said...

dei mastan enda ipdi elarum kolrey.i thing enay matumdan kolreyndu ipo orye kadichu kolla poriya ..keep kadi..

shabir said...

nice bro....!!!

shabir said...

nice bro...

Unknown said...

வாழ்க
Mastan Keep the good work going.,
stay in touch.
Prabhu

mohamedali jinnah said...

இங்கும் பாருங்கள் . என்னையும் பாருங்கள்
#
Blogroll

* நீடூர் சீசன்ஸ் (ப்ளாக்)NIDUR SEASONS
* Nidur Seasons.com
* seasonsali
* SEASONSALIwordpress.com
* seasonsnidur
* seasonsnidursite

mohammad ali jinnah said...

assalamu alaikkum,
welcome masthan oli, this is jinna from saudi, i am very happy to see your blog. your hints all are nice, all the best keep rocking for the tamil world,

mohammad ali jinnah said...

hi masthan oli , keep in rock all the best bhai...............

Unknown said...

சலாம் வாழ்த்துக்கள் அண்ணன்
Thasleem

Unknown said...

assalamu alaikkum.good thoughts keep it up

நிலாமதி said...

வலை உலகுக்கு உங்கள் வரவு நல் வரவாகுக. ரொம்ப் late ஆக சொல்லிடேனா?. பரவயில்லையா? சரிங்க.