Jun 28, 2011

தியாகராய நகர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பல நாட்கள் ஆகிவிட்டது பதிவு எழுதி... நம்ம என்னத்த எழுதி அப்படீன்னு விட்டுறது; ஒரு சோம்பேறித்தனம் தான், வேறேன்ன

சமிபத்தில் சென்னை டி நகருக்கு ஷாப்பிங் செய்வதற்காக சென்றிருந்தேன், என்ன ஒரு கூட்டம், என்ன ஒரு கூட்டம், எங்கிருத்துதான் இந்த மக்கள் வருகின்றனோ??? எப்பவுமே இப்படிதான் போலெ, அப்படி ஒரு கூட்டம். ரங்கனாதன் தெருவில் ஒவ்வொரு அடியாகத்தான் நடக்க வேண்டிததிருந்தது, கொஞ்சம் வேகம நடக்கவே முடியாது... எப்படியும் யாரோடவாவது மோதிகொண்டே செல்ல வேண்டும் அவ்வளவு மக்கள் கூட்டம்.

ரங்கனாதன் தெருவில் இரு பக்கமும் இருக்கும் கடைகள் பாதி சாலையை அடைத்தார்கள் என்றால், சாலையோரம் வியாபரம் செய்வபவர்கள் மீதி இடத்தையும் ஆக்கிறமிப்பு செஞ்சு மக்கள் நடக்க வழி இல்லாமல் செஞ்சுடுறாங்க...

மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இருந்து,ரங்கனாதன் தெரு வழியாக உஸ்மான் சாலை அடைய குறைந்தது 10 நிமிடம் ஆகும்.






அவ்வளவு கூட்ட்ட்டமா இருக்கு.

இவ்வளவு மக்கள் வந்து செல்கின்றனரே? ஏதாவது நல்ல உணவு விடுதி இருக்கா? சரவண பவன் இருக்கு, அங்கு போய் சாப்பிடனும்னா, குறைந்தது 30 நிமிடம் பொறுக்கனும்... வேறு நல்ல ரெஸ்டாரன்ட்?

ஹும்ம்ம்ம்... சரவணபவனில் சாப்பிட 61 அல்லது 75 ருபாய், இதே ஏசி என்றால் 150, 180 ருபாய் உஸ்ஸ்ஸ்ஸ்... ஏன்தான் இவ்வளவு விலையோ? எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை என்று சரவணபவனை மொய்க்கும் கூட்டம் ஒருக்கும் வரை விலை குறைய சான்ஸே இல்லை.

அதேபோல் கழிப்பிட வசதி? இவ்வளவு பேர் வந்து செல்லும் இடங்களில் கழிப்பிட வசதி இருக்க வேண்டாம்? பாவம் பெண்கள். வருந்துவதை தவிர என்ன செய்ய

நான், ரங்கனாதன் தெருவில் இருக்கும் பல கடைகளுக்கும், மேலும் உஸ்மான் சாலையில் இருக்கும் பல கடைகளுக்கு சென்று வந்தேன்... எல்லா இடத்திலும் கூட்டம், கூட்டம், கூட்டம்... எல்லா வியாபரிகளும்

பணம்தான் குறிக்கோள், ஆனால் மக்களை பற்றிய கொஞ்சமாவது கவலை? சுத்தமாக கிடையாது. இவ்வளவு மக்கள் கூடும் இடங்களில், பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும்? பாதுகாப்பா அப்படீன்னா? வியாபரிகளும் கண்டு கொள்வதில்லை, அரசாங்கமும் வாங்கியதை வாங்கி கொண்டு அமைதியாகி விடுகிறது. 5 மாடி உள்ள கட்டடத்தில் 4 மாடியில் தீப்பிடித்தி விடுகிறது என்றால், ஆவசரமாக வெளியேறுவதற்கு Fire Exit கிடையாது, இருக்கும் ஒரே படி வழியாகத்தான் இறங்கி வரவேண்டும்... வருவதற்குள் தீ நம்மளை தின்றுவிடும். சாதரனமாகவே ஒரு கட்டிடம் கட்டும் போது, பல்வேறு விசயங்களை கடைபிடிக்க வேண்டும், அதுவும் இப்படி அதிகம் மக்கள் கூடும் இடங்களில் மூன்று மடங்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்... டி நகரில் எங்கும் இது கடைபிடிக்கவே இல்ல.

அரசாங்கம் எப்போதுதான் கண்டு கொள்ளபோய்கிறதோ??? எப்போதுமே பெரிய அளவில் விபத்து நடக்கிறதோ, அப்போதுதான் அரசாங்கத்தின் பார்வைக்கு வருமோ?

5 comments :

தமிழ் மீரான் said...

நல்ல பதிவு! வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

சிந்திக்க வேண்டிய ஆதங்கம்தான் .

Raghu said...

வரும்முன் காப்போம்’லாம் ஊருக்குத்தான் போல!

Anonymous said...

useful post ,May government take action it is useful for public.








Memi

Anonymous said...

Arumaiyana pathivu, Arasangam kandukolluma avargalukae velicham





Memi