Nov 25, 2009

லிபரான்: அரசியல்வாதிகளின் பொய்முகம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பலவருடங்களையும், அரசாங்கத்தின் கஜானவையும் சேதப்படுத்தி வந்திருக்கும் லிபரான் கமிஷன் அறிக்கை, என்ன முடிவுகளை கொண்டுவந்திருக்கிறது என்றால்... பெரிய ஒரு வெற்றிடம்தான் மிச்சம்.




எதற்காக நாடாளுமன்றத்தில் இதை சமர்க்கப்பட வேண்டும்? இதை சமர்பித்த அரசாங்கம் யார் மீதும் குற்றம்யில்லை, சூழ்நிலையால் குற்றவாளியாக ஆக்கபட்டுள்ளனர் எனும் அர்த்ததில் சமர்பித்துள்ளது. யார் மீதும் குற்றம்யில்லை என்றால் எதற்கு ஒரு கமிஷன், எதற்கு இவ்வளவு நாட்கள்? ஏன் நமது வரிப்பணம் இவ்வளவு வீணடிக்கபட்டது? அதை விட முக்கியமானது இக்கமிஷன் கூறியிருக்கும் எவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை இல்லையாம். நடவடிகை எடுக்க வில்லை என்றால் இதை சமர்பிக்கனும்? இக்கமிஷனே யார் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பரிந்துரைக்கவில்லை.

லிபரான் கமிஷன், மிகப்பெரிய உண்மையை மறைந்த்துள்ளது, அது காங்கிரஸுக்கு எந்த விததிலும் பாபர்மசூதி இடிப்பில் தொடர்பில்லை என்பதை... இந்த உண்மையை கண்டுபிடித்தது லிபரான் கமிஷனா, அல்லது அறிக்கையை தாக்கல் செய்த அரசாங்கமா தெரியவில்லை? பாபர்மசூதி இடிக்கபட போகிறது என்று அன்று ஆண்டுகொண்டிருந்த நரசிம்மராவுக்கு எதுவுமே தெரியாதாம், அவரும் காலையில் பேப்பர் பார்த்துதான் இச்செய்தியை தெரிந்து கொண்டாராம், இதை நான் சொல்லவில்லை லிபரான் அறிக்கை சொல்கிறது, இல்லை இல்லை தாக்கல் செய்த அரசாங்கம் கூறுகிறது. பாபர்மசூதி விவகாரத்தின் ஆணிவேர், காங்கிரஸ் கையிலே உள்ளது, அனைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தி ராமர் சிலையை அங்கு நிறுவ அனுமதியளித்தது அன்றய காங்கிரஸ் அரசாங்கதான். இடித்தது வேண்டும் என்றால் இந்துத்துவா, அதற்கு துனை நின்றது காங்கிரஸ் என்றால் மிகையில்லை. காங்கிரஸ் கட்சிய சேர்ந்த (சங்கர் சிங் வகேலா) அமைச்சரும் இதில் குற்றம் சாற்றபட்டவர் ஆவார்.

அரசியல்வாதிகளுக்கும், நான்காம் தூணுக்கும் மிக நல்ல ஒரு விசயம் மாட்டிகொண்டது. அரசியல்வாதிகள் நன்கு அடித்துகொள்வதற்கும், ஓட்டு வங்கியை பலப்படுத்தவும் லிபரான் கமிஷன் உதவபோய்கிறது. இப்பவே நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்திவுள்ளது. பாஜாக உறுப்பினர்களும் சமாஜ்வாடி உறுப்பினர்களும் தாக்கி கொள்ளாத அளவிற்கு கூச்சல் இட்டு கொண்டனர், மகராஷ்ட்ராவில் உள்ள தொடர்ச்சி போல்...  வேறு ஒரு பரபரப்பு செய்தி வரும் வரை இச்செய்தி ஓடும்.

லிபரான் கமிஷனால் குற்றவாளிகள் என்று கூறப்பட்டிருக்கும் சிலபேரில் மிகவும் பிரபலமான முகங்கள்... இவர்களை சட்டம் என்ன செய்துவிட முடியும்? பாபர்மசூதி இடிப்பிற்கு மிகவும் பெருமைபடுவதாக உமாபாரதி கூறுகிறார்,  சட்டம் அனைவருக்கும் பொதுதான் என கூறுவோம் நாம் சட்டதை பற்றி தெரியாதவரை... மிகப்பிரபலமானவர்கள் மீது சட்டம் என்ன கடமையை செய்யும்? மாபெரும் கேள்விகுறி!!! தன்னை மிதவாதி என்று கூறிகொண்ட வாஜ்பாயி, பாபர்மசூதியை இடுத்தது தவறு என்று வேறு நாடுகளுக்கு போய் ஒப்பாரிவைக்கும் அத்வானி போன்ற பொய்முகம்கள் அதிககதிகம் உள்ளன.
 
தெரிந்த முகங்கள் 
  • வாஜ்பாய் (BJP)
  • அத்வானி (BJP)
  • அசோக் சிங்கால் (VHP)
  • பால் தாக்கரே (Sivasena)
  • ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (VHP)
  • உமா பாரதி(BJP)
  • கோவிந்தாச்சார்யா (RSS)
  • கல்யாண் சிங்(BJP)
  • முரளி மனோகர் ஜோஷி(BJP)
  • பிரவீன் தொகாடியா(பஜ்ரங்தள்)
  • வினய் கத்யார்(RSS)
மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது,  பெரிய பொறுப்பில் இருக்கு அரசு அதிகாரிகளும் நேரம் கிடைத்தால் கொடிய முகத்தை காட்ட தயங்கமாட்டர்கள் என்பதுதான். லிபரான் கமிஷனால் கூறப்பட்டிருக்கும் மிகக்குறைந்தவர்களின் எண்ணிக்கை. மிகப்பெரிய தலைமை பொறுப்பில் இருந்த இவர்களின் கீழ் வேலை பார்த்த பலபேர்களை மனமாற்றம் செய்திருப்பார்கள் என்பதுதான்.   எவ்வளவு பேரிடம் விசத்தை விதைத்திருப்பார்கள்? முதலில் தண்டிக்க வேண்டியது உயர் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகளைதான். கீழ் உள்ள இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்று ரிட்டயர் ஆகி இருப்பார்கள் அல்லது ஏதாவது அரசியில் கட்சியில் சேர்ந்து தொண்டு ஆற்றுவார்கள்.

அரசு அதிகாரிகள்
  • ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)
  • அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)
  • அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)
  • டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)
  • ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)
  • கெளர் (மாவட்ட ஆணையர்)
  • திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)
  • பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)
அமைதியானவர்கள், சாதுக்கள் என்று மக்களால் நினைக்கபட்டவர்கள், எப்படி வந்தது இந்த கொலைவெறி???

சாதுக்கள் என்று அறியபட்டவர்கள்
  • சுவாமி சின்மயானந்த்
  • சுவாமி சச்சிதானந்த சாக்ஷி
  • சாத்வி ரிதாம்பரா

அறிந்தது தெரிந்தது குறைந்த அளவே. தெரிந்தவர்களையாது சட்டம் தண்டிக்கிறதா என்று பார்ப்போம்.  தர்மம் என்றாவது ஒரு நாளைக்கு வெல்லும். நம்பிக்கையுடன் 17 வருடத்தையும் எதிர்கொள்வோம்.

4 comments :

அன்புடன் மலிக்கா said...

நீண்டுகொண்டே போகிறது வழக்கின்பயணம்
நிச்சியம் ஒருநாள் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாமும்..

vijay said...

still you people beleive this?

ஹுஸைனம்மா said...

இப்பத்தான் வந்தே மாதரம் ஓய்ஞ்சுது. இப்ப இதுவா என்ற ஆயாசம்தான் வருகிறது. இந்த அறிக்கையினால் என்ன பயன் ஏற்படப்போகிறது, ஊடகங்களுக்கு சில நாள் தீனி என்பதைத் தவிர?

சில வருடம் முன் கிருஷ்ணா அறிக்கையில் தாக்கரேயைக் குற்றஞ்சொல்லியிருந்தது. இதோ அவர் இன்னும் ஜாலியாத்தான் இருக்கார் வெளியில.

பாத்திமா ஜொஹ்ரா said...

கவலைப்பட வேண்டாம்,அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.லா தஹ்சன் இன்னல்லாஹா ம அனா