"நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும், பெற்றோருக்காவும், உறவினருக்காவும், அனாதைகளுக்காவும், ஏழைகளுக்காவும், நாடோடிகளுக்காவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையை செய்தாலும் அல்லாஹ் அதை நன்கு அறிந்தவன்"
குர் ஆன் (2: 215)







நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ விசேசமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.







ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்...
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

Dec 30, 2009

வெளிவந்துகொண்டிருப்பது பூனைக்குட்டியா ஓநாயா?

இப்போதுதான் அதிக அதிக பூனைக்குட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது... மிகவும் பக்கத்தில் பார்க்காமல் விட்டதினால் தெரியவருகிறது அது பூனைக்குட்டி இல்லை, ஓநாய் என்று. இவ்வளவு நாள் அடிமனதில் தேக்கிவைத்திருந்தவை இப்போதுதான் வெளிவருகின்றன. அது கூட அதிகம் பழகிவருக்கே அது தெரியவில்லை பூனைக்குட்டியா அல்லது வேறு எதுவுமா என்று... ஓநாய் எதற்கு வரும், இரத்தம் தேடிதான் ஓநாய் வரும். இரத்த்தை பார்க்காமலும் இறந்த மனித உடலை பார்க்காமலும் கண்டிப்பாக ஓநாய் செல்லாது.




விதைப்பது விஷம் என்றே தெரியாமல் சிலபேர்,
நட்பை அசிங்கபடுத்தியிம்,
உறவை கொச்சைபடுத்தியும்..
இதுதானா அவர்கள் விருப்பம்?
அசிங்கத்தை பார்த்து விட்டால்
சிங்கத்தை எதிபார்க்கும் கூட்டம்...
இதுதான் இறுதி,
இதுதான் முடிவு என்றும் சிலபேர்...
அய்யோ பாவம்...
கொடுப்பதுதான் கிடைக்கும் அறியாதவர்களா அவர்கள்?
பரவட்ட்டும் தீ...!


இதற்கு மேலும் இதை பற்றி எழுத விரும்பவில்லை, புரியவேண்டியவர்களுக்கு புரிந்தாலும் சரி தொலைந்தாலும் சரி, நான் ஒரு பிரபல எழுத்தாளன் இல்லை பிரபல எழுத்தாளர்கள் படிப்பதற்கு, ஒரு சராசரியின் உள்ள கூக்குரல்தான் இது.

தீ பரவ வேண்டுமா அல்லது அனைக்க வேண்டுமா.
இப்பதிவு தடவை படிக்கபட்டுள்ளது



Share

10 பின்னூட்டம்:

Anonymous said...

what do you want to tell?

Barari said...

purikirathu mastaan.ippothaavathu neengal unarnthu kondathu patri makizchi

பீர் | Peer said...

வெளிவந்த பின்பு அனைத்தும் ஓ..நாய் தான்.

வெளியே வருவதற்கான சூழலை ஏற்படுத்தாதிருத்தலே நலம்.

மகா said...

நீங்களும் இதுல ..... அசிங்கத்த கண்டு நாம்தான் ஒதுங்கி போகணும் ....

Anonymous said...

rendu pakkamum pirunchu aduchukiranga pakka pavama irukku.. enna seirathu. koduma, ivanga eppa mathatha vittu varangalo appathan ellarukkum nimathi kidaikkum.

வால்பையன் said...

மகா said...
நீங்களும் இதுல ..... அசிங்கத்த கண்டு நாம்தான் ஒதுங்கி போகணும் ....

ama, true

சகோதரி said...

உங்கள் வலி புரிகிறது. ஊதிபெரிதாக்குவதால் யாருக்கும் லாபம் இல்லை.நாம் அடிபடையில் மனிதர்கள். அதன்பிற்குதான் .மதம். எல்லோருக்கும் ரத்தம் சிவப்புதான். அமைதியை விதைப்போம். தீயை அணைக்கத்தான் முயற்சிக்கவேண்டும்.அதில் முதல் ஆளாக நிற்போம்.பற்ற வைத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி.அமைதியை பரப்புவோம்.

Anonymous said...

//
சகோதரி said...
உங்கள் வலி புரிகிறது. ஊதிபெரிதாக்குவதால் யாருக்கும் லாபம் இல்லை.நாம் அடிபடையில் மனிதர்கள். அதன்பிற்குதான் .மதம். எல்லோருக்கும் ரத்தம் சிவப்புதான். அமைதியை விதைப்போம். தீயை அணைக்கத்தான் முயற்சிக்கவேண்டும்.அதில் முதல் ஆளாக நிற்போம்.பற்ற வைத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி.அமைதியை பரப்புவோம்.
//

சூப்பரு

கோவி.கண்ணன் said...

என்ன ஆச்சு !

சவுக்கு said...

ஒன்னுமே புரியல பாஸ்