Showing posts with label அட்வைஸ். Show all posts
Showing posts with label அட்வைஸ். Show all posts

Jun 27, 2012

*.blogspot.in to *.blogspot.com

கூகுள் சமிபத்தில் பிலாக்ஸ்பாட்டின் டாப் லெவல் டொமயின் URL மாற்றி விட்டது, அந்த அந்த நாடுகளுக்கு தகுந்தது போல் மாற்றிவிட்டது, இதை பற்றி எந்த ஒரு முன்அறிவிப்பும் இல்லை... இதனால் நமது தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் உள்ள வோட்டிங் பட்டன் வேலை செய்யாமல் போய்விடும்.

இதற்கு தீர்வு, கீழே உள்ள கோடிங்தான்...
<script>
if ((window.location.href.toString().indexOf('.com/'))=='-1') {
  window.location.href =window.location.href.toString().replace('.blogspot.in/','.blogspot.com/');
}
</script>
கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள், உங்களது பிலாக்கர் அக்கவுண்டுக்கு சென்று Design -> Edit HTML செல்லவும், பிறகு Expand Widget Templates என்ற செக்பாக்சை செலக்ட் செய்யவும்,



இப்போது பேஜ் மறுபடியும் லோடு ஆகும், CTRL + F (தேடும்) </head> என்று தேடி அதற்கு மேல் காப்பி செய்து விடுங்கள், பிறகு "SAVE TEMPLATE" எனும் பட்டனை கிளிக் செய்து சேவ் செய்துவிடவும். உங்களது பிலாக் இனி எப்போதும் blogspot.com ஒபன் ஆகும்.

Jun 16, 2012

ஆட்டுக்கு தாடியும் நம் நாட்டுக்கு குடியரசுதலைவரும்

தேவை என்பது எவ்வளவோ இருக்க, எதுக்குதான் ஆட்டுக்கு தாடியை வளர்க்க பாடு படுகிறோமே???  ஆட்டை மேய்ப்பவர்கள் எப்படி பெருமைபடுவார்களோ அப்படி நாமும் நன்றாய் பெருமைபடலாம், அட அவ்வளவு ஏன் ஆடே தன்னுடைய தாடியை பார்த்து பெருமை பட்டு கொள்ளும்... அடடா எவ்வளவு பெருசா இருக்கு, எவ்வளவு கருப்பா இருக்கு என்று. ஆனா என்ன தாடி வைப்பதுற்க்கு அடிக்கடி 23 கோடி, 205 கோடின்னு செலவு செய்ய வேண்டியது வரும்.


அடப்போங்ப்பா லட்சத்துகோடி கணக்குல செலவு செஞ்சவங்களையே கண்டுக்க மாட்டோம், வெறும் பிசாத்து 205, 200, 23 கோடிதானே, ஆட்டுக்கு தாடி நல்லதுதானே, எல்லாருட்டையும் நல்லா சொல்லிக்கொள்ளலாம்... பாருங்க எங்க ஆட்டுக்கு தாடி இருக்கு,  ஆட்டை வெட்டும்போது  அந்த தாடிதான் விலை அதிகமா போகும், அந்த தாடிதான் எங்க நாட்டையே பாதுகாப்பாகவும், சந்தோசமாவும் வச்சுருக்கு...


நடக்கும் ஒவ்வொரு செயல்களும் எனது விரக்தியை அதிக படுத்தவே உதவுகின்றது... ரப்பர் ஸ்டாம்ப் என்கிற பதவி எதற்கு நமது நாட்டிற்கு? மற்ற நாடுகளில் ஜனாதிபதிக்குதான் எல்லா அதிகாரமும் இருக்கும், நல்லதோ கெட்டதோ, ஏதாவத அவர் தனது நாட்டு மக்களுக்கு செய்வார். தலைமை சக்தி உள்ளவராக இருப்பார், நம்ம நாட்டுல??? எங்க அது இருக்குன்னே தெரியலை இல்லையா?


கீழே உள்ள லிங்கை பாருங்கள், அவை கடந்த இரண்டு மாதம் உள்ள செய்தி ஆகும், சும்மா படிச்ச் உடனே வயிறு எரிய ஆரம்பிக்கும்...

அட ரெண்டு மூனு மாசத்துக்கே இப்படி,  கடந்த 4.5 வருசத்துல நமது குடியரசுதலைவர் என்ன ஆட்டம் போட்டுருப்பார்??? அந்தம்மா சாகுற வரைக்கும் பெரிய வீடு கொடுத்து அரசாங்கம் கஞ்சி ஊத்தும், என்ன செய்ய விதியேன்னு போகவேண்டியதுதான்...


அப்துல் கலாம், மிகவும் நல்லவர்தான், என்ன செய்ய?? 5 வருசமா இருந்து என்ன செஞ்சுட்டாரு?? சொந்த ஊருக்கு ஏதாவது செஞ்சாரா? சொந்த மாவட்டதுக்கு ஏதாவது செஞ்சாரா? சொந்த மாநிலத்துக்கு ஏதாவது செஞ்சாரா?முடியாது,  முடியவே முடியாது; எங்க மாவட்டம் இன்னும் அப்படிதான் இருக்கும், அதே சாக்கடை, அதே கொசு, அதே தண்ணி பிரச்சனை... பவர் இல்லதா ஒன்னு, பாவம் அவர் கூட ஆசைப்பட்டுருப்பாரு நம்மல போல, என்ன செய்றது,  ஆனா 5 வருசமும் நல்லா அனுவிக்கலாம், ராஜா போல இருக்கலாம், ஆனா யாருக்கும் எதுவும் செய்ய முடியாது.

நாட்டுடைய முதல் குடிமகன், எந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் வந்தால் பிடிவாதமா முதல் குடிமகனைதான் சந்திக்க போறாங்களா? புதுசா ஏதாவது சட்டம் இயற்ற முடியுமா? பாராளுமன்றம் பரிந்துரைக்கும் அமல்களை மூன்று முறைக்குமேல் நிராகரிக்க முடியமா? தூக்கு தண்டனைய முதல் குடிமகன் நினைத்தால் நிப்படி விடலாம் என்பார்கள்? இதுவரை அப்படி ஏதாவது கேள்விபட்டதுன்டா???


இப்படி கேட்டுகிட்டே போகலாம், இப்படி பட்ட பதவி தேவையா? ஆட்டுக்கு எதுக்கு தாடி? சும்மா டம்மியா ஒருத்தர் இருப்பதுனால் என்ன பலன்?


இதெல்லாத்தைம் விட கொடுமையான ஒன்னு காங்கிரஸ் யாரை நிறுத்துனாலும் பிஜேபி ஆதரிக்குமாம், கொடுரமான கூட்டம் போட்டு இதை அறிவிச்சுருக்காங்க, என்ன காரணம்னா, துணை குடியரசுதலைவர் பிஜேபிக்கு கிடைக்குமாம்... என்ன ஒரு அண்டர்ஸ்டாடிங்...

Apr 14, 2012

இலவசக் கல்வி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த செய்தியை எவ்வளவு பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை, எதுவும் பரபரப்போ அல்லது நடிகை பற்றிய நிகழ்ச்சியே என்று யாரும் கண்டுகொள்ளாமல் கூட போய்விடலாம். பொதுவா இப்படிதானே நடக்குது.

அதாவது உச்சநீதிமன்றம் மிகவும் வரவேற்க்க கூடிய தீர்ப்பை கூறி இருக்கிறது, ஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு, 

தட்ஸ்தமிழில் வந்த செய்தியை பாருங்கள்.

http://tamil.oneindia.in/news/2012/04/13/india-sc-stamp-on-right-education-poor-students-to-study-free-aid0174.html

கல்வி என்பது மாபெரும் வியாபரமாக போய்விட்ட நமது நாட்டில், கல்வி என்பது இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்பாடி ஏற்படும்? 1000 ருபாய் முதல் போட்டவர்கள் 100 ருபாய் லாபம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் கல்வி வியாபரத்திலே முதலே போடாமல் லாபம் மட்டும்தானே, லாபத்தில் குறை ஏற்பட்டால் விடுவார்களா?



என்ன மனது இருந்தால் ஏழை குழந்தைகளுக்கு கல்வி தர முடியாது என்று நீதிமன்றம் சென்றிருப்பார்கள். அதுவும் 25 சதவீதம்... மீதி 75 சதவீதம் தாரளமாக கொள்ளை அடிக்கலாமே, யார் தட்டி கேட்க முடியும், அதுவும் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற பெயரால், இவர்களால் சிறுபான்மை மக்களுக்க் நன்மை என்றால் அதுவும் கிடையாது.  ஒரு சிலர் வளரத்தான் எங்கும் எப்போதும் "சிறுபான்மை" என்ற சொல் பயன் படுது, இதை பற்றி தனியே தொடர் கட்டுரையே எழுத் முடியும். பிறந்தவுடனே ஸ்கூலில் சேர்க்கிற அவலம் நமது நாட்டில்தான் உள்ளது, ஏன்னா அப்பத்தான் நல்லா படிக்க முடியுமாம், ஆமாம் அப்படியே எல்லாரும் விஞ்ஞானிகளை உருவாக்கிறார்கள் பாருங்கள், நினைக்க நினைக்க மிகவும் எரிச்சாலத்தான் இருக்கு...

என்னுடைய எண்ணம் எல்லாம், அனைவருக்கும் சமமான இலவச கல்வியை கொடுக்க வேண்டும், ஏழை, நடுத்தர வகுப்பு, பணக்காரன் என்ற பாகுபாடு கல்வியில் இருக்கவே கூடாது,  எல்லாரும் சமம் என்ற நிலை கல்வியில் இருந்துதான் வரவேண்டும். அரசாங்கத்தின் கேவலமான நிலைப்பாடால், கொள்ளை அடிப்பவர்கள்தான் அதிகமாகி கொண்டே செல்கின்றனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்க்க கூடியது.

Feb 23, 2012

மின்வெட்டு, என்னதான் செய்யலாம்?

மிகவும் ஒரு வேதனையான, குழப்பமான இன்னும் சொல்ல முடியாத  நிலையாகி கொண்டிருக்கிறது மின்தடை, சென்னையில் 2 மணிநேரமும்; பிற பகுதிகளில் 5 மணிநேரமும் மின்வெட்டு; இல்லை இல்லை சென்னையில் 3 மணிநேரமும் மற்ற பகுதிகளில் 6 மணிநேரமும் என்று, அரசாங்கமே ஒரு முடிவில்லாத அறிவிப்பு செய்ய கொண்டிருக்கிறது. மின்வெட்டு எவ்வளவு நேரம் என்று இன்னும் தீர்மானிக்கபடவில்லை.



எதுக்கு எங்கும் பாரபட்சம் பார்பானே, மொத்தமாக எல்லாபகுதிக்கும் 24 மனிநேரமும் வெட்டிடலாம் என்று கூட நினைக்கலாம்,  எதுவேன்னா நடக்கலாம்,  ஏன்னா எந்த வழியிலும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வராவே போவதில்லை...  ஏப்ரல், மே மாதங்களில் இதன் தேவை அதிகமா ஆகும் பொழுது; கண்டிப்பாக கொடுரமான மின்வெட்டை எதிர்பார்க்கலாம்...

அரசாங்கம்,, எவன்டா கை நீட்டி பேசுறது, இப்ப யார புடுச்சு ஜெயிலில் போடலாம் என்றும், அரசியல்வியாதிகளுக்கும், அரசாங்க உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தடையில்லா மின்சாரமே கிடைக்கும் பொழுது, இதை பற்றி நினைக்க நேரம் ஏது? 

சரி என்னதான் செய்யலாம்???
  • மின்திருட்டை தடுக்க வேண்டும், எங்காவது எந்த கட்சி பொதுகூட்டம் நடக்கும் போதும் சரி, கல்யாணம், ஊர் பொதுவிழா (திருவிழா) நடக்கும் போதும் சரி 90% மின் திருட்டுதான் நடக்குது.
  • 220~240 வோல்டேஜ், 110~120 வோல்டேஜ் மாறவேண்டும், ஏன் என்றால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின்கடத்தல்(?) ஆகும் போது அதிகமாக வீணாகுது.
  • கட்டுபாடான மின்வினியோகம்சென்னை போன்ற நகரங்களே அதிக அதிக மின்சாரத்தை உருஞ்சுகின்றனர்; அதுவும் பணக்கார வீடுகளில் நாய் கக்கா போகும் இடங்களில் கூட ஏசிதான் இருக்கும், இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் மிகஅதிகப்ட்சம் இவ்வளவுதான் என்று மாற்றவேண்டும்.
  • கடைகளின் பயன்பாடு, சில கடைகள், MNC நிறுவனங்கள் ஜொலிக்குதே ஜொலிஜொலிக்குதே என்று தடையில்ல மின்சாரத்தை பயன்படுத்துவதை தடைசெய்யவேண்டும்
  • சோலார் திட்டம், அராசாங்கம் மானியம் கொடுத்து வீடுகளில் சேலார் மின்சேமிப்பு திட்டத்தை கொண்டுவரலாம்.
  • கூடங்குளம், மிக கண்டிப்பா செயல்படுத்த வேண்டும்.

 இதை நான் எழுதும் போது கூட இருட்டில் இருந்தே எழுதினேன் :)

Jun 28, 2011

தியாகராய நகர்

பல நாட்கள் ஆகிவிட்டது பதிவு எழுதி... நம்ம என்னத்த எழுதி அப்படீன்னு விட்டுறது; ஒரு சோம்பேறித்தனம் தான், வேறேன்ன

சமிபத்தில் சென்னை டி நகருக்கு ஷாப்பிங் செய்வதற்காக சென்றிருந்தேன், என்ன ஒரு கூட்டம், என்ன ஒரு கூட்டம், எங்கிருத்துதான் இந்த மக்கள் வருகின்றனோ??? எப்பவுமே இப்படிதான் போலெ, அப்படி ஒரு கூட்டம். ரங்கனாதன் தெருவில் ஒவ்வொரு அடியாகத்தான் நடக்க வேண்டிததிருந்தது, கொஞ்சம் வேகம நடக்கவே முடியாது... எப்படியும் யாரோடவாவது மோதிகொண்டே செல்ல வேண்டும் அவ்வளவு மக்கள் கூட்டம்.

ரங்கனாதன் தெருவில் இரு பக்கமும் இருக்கும் கடைகள் பாதி சாலையை அடைத்தார்கள் என்றால், சாலையோரம் வியாபரம் செய்வபவர்கள் மீதி இடத்தையும் ஆக்கிறமிப்பு செஞ்சு மக்கள் நடக்க வழி இல்லாமல் செஞ்சுடுறாங்க...

மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இருந்து,ரங்கனாதன் தெரு வழியாக உஸ்மான் சாலை அடைய குறைந்தது 10 நிமிடம் ஆகும்.






அவ்வளவு கூட்ட்ட்டமா இருக்கு.

இவ்வளவு மக்கள் வந்து செல்கின்றனரே? ஏதாவது நல்ல உணவு விடுதி இருக்கா? சரவண பவன் இருக்கு, அங்கு போய் சாப்பிடனும்னா, குறைந்தது 30 நிமிடம் பொறுக்கனும்... வேறு நல்ல ரெஸ்டாரன்ட்?

ஹும்ம்ம்ம்... சரவணபவனில் சாப்பிட 61 அல்லது 75 ருபாய், இதே ஏசி என்றால் 150, 180 ருபாய் உஸ்ஸ்ஸ்ஸ்... ஏன்தான் இவ்வளவு விலையோ? எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை என்று சரவணபவனை மொய்க்கும் கூட்டம் ஒருக்கும் வரை விலை குறைய சான்ஸே இல்லை.

அதேபோல் கழிப்பிட வசதி? இவ்வளவு பேர் வந்து செல்லும் இடங்களில் கழிப்பிட வசதி இருக்க வேண்டாம்? பாவம் பெண்கள். வருந்துவதை தவிர என்ன செய்ய

நான், ரங்கனாதன் தெருவில் இருக்கும் பல கடைகளுக்கும், மேலும் உஸ்மான் சாலையில் இருக்கும் பல கடைகளுக்கு சென்று வந்தேன்... எல்லா இடத்திலும் கூட்டம், கூட்டம், கூட்டம்... எல்லா வியாபரிகளும்

பணம்தான் குறிக்கோள், ஆனால் மக்களை பற்றிய கொஞ்சமாவது கவலை? சுத்தமாக கிடையாது. இவ்வளவு மக்கள் கூடும் இடங்களில், பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும்? பாதுகாப்பா அப்படீன்னா? வியாபரிகளும் கண்டு கொள்வதில்லை, அரசாங்கமும் வாங்கியதை வாங்கி கொண்டு அமைதியாகி விடுகிறது. 5 மாடி உள்ள கட்டடத்தில் 4 மாடியில் தீப்பிடித்தி விடுகிறது என்றால், ஆவசரமாக வெளியேறுவதற்கு Fire Exit கிடையாது, இருக்கும் ஒரே படி வழியாகத்தான் இறங்கி வரவேண்டும்... வருவதற்குள் தீ நம்மளை தின்றுவிடும். சாதரனமாகவே ஒரு கட்டிடம் கட்டும் போது, பல்வேறு விசயங்களை கடைபிடிக்க வேண்டும், அதுவும் இப்படி அதிகம் மக்கள் கூடும் இடங்களில் மூன்று மடங்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்... டி நகரில் எங்கும் இது கடைபிடிக்கவே இல்ல.

அரசாங்கம் எப்போதுதான் கண்டு கொள்ளபோய்கிறதோ??? எப்போதுமே பெரிய அளவில் விபத்து நடக்கிறதோ, அப்போதுதான் அரசாங்கத்தின் பார்வைக்கு வருமோ?

Nov 29, 2010

கண்டிப்பாக செய்ய வேண்டிய சாலைவிதி

சாலைவிதி..., மாற்றம் செய்யவேண்டியது எவ்வளவோ உள்ளது, இன்னும் இதேபோல் தொடர்ந்து கொண்டிருந்தால் பெருநகரத்தில் இருப்பவர்கள் கடுமையான விரக்தி உள்ளாவர்கள்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் அதிகமாகி கொண்டே போகிறது, இப்போது கார் வாங்குவது என்பது ஒரு அவசியம் ஆகிவிட்டது, வரும்காலங்களின் கார் என்பது கட்டாயமாகிவிடும். ஆனால் சாலை வசதி மட்டும் மாறவே மாறாது, அப்படியே இருக்கும்... அதாவது போக்குவரத்து நெரிசல் தகுந்தார்போல் சாலையை மாற்ற மாட்டார்கள்... என்னதான் மெட்ரோ ரயில் விட்டாலும் கொஞ்ச நாளிலே போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்து விடும், இன்னும் 1900 போட்ட சட்ட திட்டங்களையோ கொண்டிருந்தால் வருங்காலத்தில் கண்டிப்பாக வருத்த படுவோம்.

சமிபத்தில் ஒரு சட்டம் போட்டிருக்கிறார்கள், என்னவென்றால் இ-சாலன் முறை, இ-சாலன் முறை வந்தால் மட்டும் திருந்திட போகிறார்களா என்ன? அவர் தொடர்ந்து தவறு செய்து கொண்டிருந்தால் அவரின் அத்யாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை தடை செய்ய வேண்டும், அப்போது ஓரளவுக்கு தவறுகள் மட்டுபடும்.

சென்னை போன்ற பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் தனிமனித ஒழுக்கமின்மையாகும், எல்லாருக்கும் எங்கும் அவசரம்தான். ஒரு பகுதி ஒரு வழி சாலையாக இருந்தால் அதில்தான் தவறாக போக முயற்சிப்பார்கள், இதில் ஆட்டோ ஓட்டுனர் ஆகட்டும் அல்லது இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் ஆகட்டும்.... அனைவரும் தவறிலைப்பதில் குறைந்தவர்கள் அல்ல.

நான் பார்த்த வரை, சென்னையின் மற்றும் அனைத்து மாநகரங்களின் போக்குவரத்துக்கு மிக தேவையான ஒன்று, மஞ்சள் பெட்டி பகுதி (Yellow Box System) கொண்டுவருவதாகும். இது எதற்கு என்றால் நான்கு ரோடு சந்திக்கும் பகுதி என்றால் நேராக செல்பர்கள் குறுக்காக செல்பவர்களுக்கு தோதாக நிற்க வேண்டும், அதாவது மஞ்சள் ஒளிந்தவுடன் நிற்க ஆரபித்து, சிவப்பு ஒளிரும் போது நின்றுவிட வேண்டும் அதுதான் முறை, ஆனால் என்ன நடக்கிறது என்றால் ஒருவர் சீக்கிறமாக சென்றுவிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் செல்லும் வழியை அடைத்து கொள்வார்கள்.


மஞ்சள் பெட்டி என்பது நடுவில் போடப்படும் ஒரு மஞ்சள் கட்டம் ஆகும், எதற்கு என்றால் அந்த கட்டத்திற்குள் எந்த வாகனமும் அதிக நேரம் நிற்க கூடாது.

கிழே இருப்பதுதான் மஞ்சள் பெட்டி


இப்ப நான் நேரே செல்லவேண்டும் என்றால் பச்சை விளக்கு எரிந்தால் மேலும் மஞ்சள் கட்டத்திற்குள் சிக்காமலும் இருக்க வேண்டும்; மஞ்சள் கட்டத்திற்குள் சிக்க கூடாது என்றால் நான் போக வேண்டிய அளவு இடம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். கீழே உள்ள படத்தை பாருங்கள் 1ம் எண் வண்டி போவதற்கு பச்சை விளக்கு எரிந்தும் நிற்கிறது, ஏனேன்றால் 3ம் எண் வண்டி சென்றால்தான் அதனால் மஞ்சள் பெட்டியில் மாட்டாமல் செல்லமுடியும்; அதே நேரத்தில் 2ம் எண் வண்டி சென்று கொண்டியிருக்கிறது ஏனெறால் அந்த வண்டி எப்படியும் மஞ்சள் பெட்டி பகுதியில் நிற்க போவதில்லை. மஞ்சள் பெட்டியில் நின்றால் என்ன நடக்கும் மற்றவர்களின் (குறுக்காக செல்பவர்களின்) வழியை மறைத்து கொண்டிருப்பதினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.


இந்த முறை அனைத்து வெளிநாடுகளில் உள்ளது, நமது நாட்டில் இன்னும் வரவில்லை, வந்தால் மிகவும் நல்லது; மஞ்சள் பெட்டில் ஒரு குறிப்பிட்ட நேர அளவை தாண்டி நின்றால் போக்குவரத்து விதிகளுக்கு மாறு செய்தகாக நம்மீது ஃபைன் போடுவார்கள். அதை தொடர்து செய்தால் நமது ஓட்டுனர் உரிமம் கூட ரத்து செய்யபடலாம்.

எவ்வளவு நல்ல விசயம் அல்லவா? யாராவது இதை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து கொண்டு போங்களேன்.

Jun 6, 2010

புகையில்லா சென்னை

சமிபகாலமாக சென்னைவாசிகள் எங்கு பார்த்தாலும் "SMOKE FREE CHENNAI" என்ற வாசகம் காணப்படுகிறது.... ஸ்மோக் ஃபிரி என்பது சரிதான், ஆனால் சிகரட்டில் மட்டும்தான புகை காணப்படுகிறதா???



மாநகரங்களில் வசிப்பவர்கள் இழக்கவேண்டிய ஒன்று ஆரோக்கியம், ஆமாம் சென்னையில் ஆரோக்கியத்தை இழந்துதான் பணத்தை(?) சேர்த்துக் கொண்டிருக்கிறோம். சிகரட் மட்டும் மட்டும் புகை விடுது என்பவர்கள்...














பஸ்கள், லாரிகள் வெளியுடும் கரும்புகை


















சென்னையில் ஓடும் கார், ஆட்டோக்களின் புகை




















இண்டஸ்ட்ரீஸ் வெளியிடும் புகை






















பண்டிகையின் போது வெளியும் புகை


இப்படி புகையோ புகை, கண்டிப்பா இவை எல்லாம் நமக்கு பகைதான், ஆனால் எதிர்ப்பவர்கள் ஒன்றை மட்டுமே ஏன் எதிர்க்க வேண்டும்? புகையில்லா சென்னை என்பது, எங்கும் புகை இல்லாமல் இருப்பதை குறிக்கும் அல்லவா? சிகரட்டில் வெளிப்படும் புகை ஒன்றும் ஓசன் படலத்தை ஓட்டை போடுவதில்லை, புகைப்பவர்களின் இதயத்தில் ஓட்டை போடுவதோடு சரி, ஆனால், மேற்கண்ட வழிகளில் வெளிப்படும் புகை ஓசன் படலத்தை அல்லவா ஓட்டை போடுகிறது, இதனால் என்ன பிரச்சனை என்பவர்கள் வருங்கால சந்ததிக்காக நாம் சேர்த்து வைப்பது கொடிய நோய் நொடிகள்தான், போராடுபவர்கள் இதற்கும் சேர்ந்து போராடினால் மிகவும் நன்றாய் இருக்கும்!

நமது நாட்டில் அரசாங்காத்தின் பல்வேறு தூண்கள் பேருக்காகவே இருக்கின்றன... அதில் ஒன்றுதான், "மாசு கட்டுபாட்டு வாரியம்"... இதன் செயல்பாடுகளை யாராவது எடுத்து சொன்னால் தேவலை, பேருதான் "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஆனால் செயல்பாடுகளோ "மாசு கட்டுபடுத்தா வாரியம், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டில் நமது நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா? 123வது இடம். அவ்வளவு சுகாதாரமாக நமது நாட்டை வைத்துள்ளோம். "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஒழுங்காகவே செயல்பட்டு இப்படி புகை வெளியும் பஸ், காரு, ஆட்டோ போன்றவற்றை தடை செய்து, கொடுரமாக புகை வெளியிடும் இண்டஸ்ட்ரீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்தால் மிகவும் நல்லது.


கடைசியா இரண்டு தகவல்

  • சிக்ரட் குடிப்க்கும் ஆண்களுக்க் ஆண்மை குறைவு ஏற்படுமாம், பெண்களாய் இருந்தால் பெண் தன்மையே பரிபோகுமாம்.
  • சிக்ரட் குடிப்பவர்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தால் அது குழந்தையின் உயிரை கூட பரித்து விடுமாம்,சமிபத்தில் வந்த தந்தியில் இருந்த தகவல்.

Apr 30, 2010

நீக்க வேண்டுமா ஆட்டோ பர்மிட்டுக்கு தடையை?

ஆட்டோ பர்மிட்டுக்கு தடையை ரத்து செய்து அரசு செய்தி வெளியுட்டுள்ளது, இதற்கான காரணம் "சென்னையைவிட சிறிய நகரங்களான பெங்களூருவில் 78 ஆயிரம் ஆட்டோக்களும், ஐதராபாத்தில் 64 ஆயிரம் ஆட்டோக்களும் ஓடுகின்றனவாம்" சென்னையில் 52 ஆயிரம் ஆட்டோவே உள்ளனவாம்.

அதனால், சென்னையில் கூடுதல் ஆட்டோ ரிக்ஷாக்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, ஆட்டோக்கள் பதிவு செய்யப்படுவதற்கான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ரிக்ஷா பெர்மிட்டுகள் தகுதி அடிப்படையில் விண்ணப்பம் செய்வோருக்கு வழங்கப்படும்.

நன்றி தட்ஸ்தமிழ்


முதலில் நன்றாய் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதையும் கற்று கொடுத்து விட்டு பர்மிட்டுக்கு பர்மிட் கொடுத்திருக்கலாம். இரண்டாவது பயணிகளிடம் எப்படி பேசுவது என்பதையும் சொல்லி கொடுத்திற்கலாம், மூன்றாவது நியாயமான முறையில் பணம் வாங்குவது என்பதை சொல்லி கொடுக்கலாம்... இப்படி பல உள்ளன...



பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஆட்டோக்களில் சவாரி செய்திருப்பவர்களிடம் சென்னையில் ஆட்டோ பயணம் செய்ய சொல்லுங்கள், ஒருவர் திருப்தியாக பயணம் செய்தால் அப்பறம் தடையை நீக்கலாம்.

சென்னையில் இருப்பவர்களிடம் கேளுங்கள், யாருமே ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாகவே பேசவே மாட்டார்கள், விதிவிலக்குலாக சில ஆட்டோ டிரைவர் இருக்கலாம்... ஆனாலும் பெருபான்மை என்னவோ அதுதானே உண்மை. பொதுவா நான் எங்கு போனாலும் பைக், அல்லது ரயிலில் போயிவிடுவேன், சில நேரங்களில் பஸ் பயணம் செல்ல நேரலாம்... மற்றபடி என்ன அவசரம் என்றாலும் ஆட்டோ பயணத்தை விரும்பவதில்லை... அவர்கள் ஏறும் போது ஒரு வாடகையும் இறங்கும் போதும் ஒன்றாகவும் இருக்கும், கண்டிப்பா மீட்டர் போடவே மாட்டார்கள், இதுவரை யாருமே நியாயமான வாடகை கேட்டதே இல்லை, குறைந்தது 1 கிமீ போகவேண்டும் என்றாலும் 100 ரூபாயவது கேட்பார்கள், நமக்கு இடம் தெரியும் பக்கதில்தான் என்றாலும் அங்க சுத்தி இங்க சுத்தி போகனும் என்பார்கள், சென்னைக்கு புதியவர்கள் என்றால் ஆட்டோ டிரைவர்கள் பாடு கொண்டாட்டம்தான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறந்து விடுவார்கள்.

ஓட்டுவது மிக மிக வேகமாக இருக்கும், சின்ன சந்தில் ஒரு மனிதன் நுழைய முடியுமா என்று இருப்பதில் கூட ஆட்டோவை நுழைக்க முயற்சி செய்வார்கள் உள்ளே இருக்கும் பயணி உயிரை கையில் பிடித்து, நாம போக வேண்டிய இடம் சீக்கிறமா வர கூடாதா என்று வேண்டி கொண்டிருப்பார்கள்.

சாலைகளில் எந்த விதமான விதிகளையும் மதிக்காமல் ஓட்டுவது ஆட்டோ டிரைவர்களாகத்தான் இருக்கும், ஒரு ஆட்டோவில் பேசிவிட்டு அடுத்த ஆட்டோவிற்கு சென்றால், முதலில் பேசிய ஆட்டோ டிரைவர் "... போற மூஞ்சிய பாரு, ந்தா 20க்கு போகனுமா, த்தா...." என்று மற்ற ஆட்டோ டிரைவருடன் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். இப்படி ஒன்று இல்லை... பல கூறலாம்...

இருந்தாலும் சில பேர் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள், சமிபத்தில் எனது நண்பர் தனது மனைவியை கூட்டி கொண்டு சென்னை வந்தார், அவருக்கு ஒரு மகன், மனைவிக்கு உடம்பு சரியில்லை.. ஒரு ஆட்டோவில்தான் சென்னை முழுக்க பயணம் செய்தார்... ஆட்டோ டிரைவர்தான் கூட இருந்து அனைத்து விதமான உதவிகளையும் செய்தார், அவரின் மகனை முழுவதுமாக பார்த்து கொண்டது ஆட்டோ டிரைவர்தான், கடைசியில் பணம் கொடுக்க போகும் போது, பரவாயில்லை சார், முதல்ல அவங்க சரி ஆகட்டும் என்று பணத்தை மறுத்தார்... இப்படியும் சிலபேர்....



ஆனாலும், அரசாங்கம் ஆட்டோ பர்மிட்டுக்கு இருந்த தடையை நீங்கவதற்கு முன்பு அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் சில கட்டுபாடுகளை விதித்திருக்கலாம்.

  • மீட்டர் பொருத்துவது
  • கணிவாய் பேசுவது
  • சாலைவிதிகளை மதிப்பது

Apr 5, 2010

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா? ஒரு நிமிடம் இதையும் பாருங்களேன்

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.




ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[]    கண்டிப்பாக எழுதவும்
[]    தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்


அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும்.  அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்


பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு  சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.



அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.  குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

அவ்வளவுதான் முடிந்தது மேலும்  தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)

Mar 8, 2010

மகளீர் தினமும் 33% இடஒதுக்கீடும்

இன்று மத்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யபடும் மசோதாவில் ஒன்று, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகும். ஆதரளிப்பவர்கள் அதிகம் என்பதால் இந்த இடஒதிக்கீடு கண்டிப்பக நிறைவேறிவிடும்.

காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட், திமுக, அதிமுக, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் இதை ஆதரிப்பதால் நிறைவேற மிகவும் வாய்ப்புகள் உள்ளன, எதிர்க்கும் கட்சிகள் மிகவும் குறைவு சிவசேனா, சாமஜ்வாடி, ராஸ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சாமஜ் போன்றவை, இவர்களின் பங்களிப்பு மக்களவையுளும் மாநிலங்களவையுளும் மிகவும் குறைவு, ஆதலால் மிகப்பெரிய சண்டை சச்சரவு இல்லாமலும், ஒரு பரபரப்பற்ற அல்லது வழக்கமான மசோதாவக இது நிறைவேறிவிடும்.




எனது கேள்வி எல்லாம், இந்த இடஒதுக்கீடு தேவைதான என்பதுதான்? ஏன் கொடுக்கவேண்டும் 33 சதவீத ஒதுக்கீடு? எதற்காக இந்த இட ஒதுக்கீடு? பொதுவாக இடஒதுக்கீட்டு ஆதரளிப்பவர்கள் கூறுவது, பின்தங்கி உள்ளவர்கள் முன்னேறுவதற்காக... காலங்காலமாக கூறுவது முன்னெறுவதற்காக என்றுதான், இந்த மசோதாவிலும் அதே பல்லவிதான், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், நாட்டில் சரிபாதி பெண்கள்தான் ஆனால் 10% பெணகளுடைய ஆதிக்கம் இல்லை அரசியலில்... இப்படி சொல்லி புலம்புவார்கள்.



இன்று அரசியல் ஆகட்டும் வேறு பிரபலத் துறையாகட்டும் ஆண்களுக்கு மிகச்சமமாகவே பெண்கள் வந்து கொண்டிருக்கின்றனர், எந்த துறையில் இப்போது பெண்கள் இல்லை? எல்லாவிதமான வேலைகளிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டின் முதன் குடிமகள் ஒரு பெண்தானே. சோனியாவகட்டும், ஜெயலலிதாவகட்டும் எந்த இடஒதுக்கீட்டை பெற்று இந்த இடத்தை அடைந்தார்கள்? அரசியலில் மட்டும் அல்ல. நான் இதை எழுதுவதால் பெண்களுக்கு எதிரானவன் என்று எண்ணவேண்டாம், பொதுவாகவே இடஒதுக்கீடு என்பது நல்ல தகுதி உள்ளவனை ஒதுக்கிவிட்டு தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கபடுவதாகும், காலங்காலமாய் ஜாதியாலும் மதத்தாலும் பிரித்தவர்கள் இப்போது பால் முறையிலும் வந்துவிட்டார்கள்.

பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நன்றாய் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் நிலையும் வேண்டும், இப்போது அரசியலில் ஈடுபடுபவர்கள் அந்த அஞ்சா நெஞ்சு கொண்டவர்களாகவே வந்துள்ளார்கள்,  அவர்கள் ஜஸ்ட் லைக் தட் என்று வரவில்லை... அதாவது இடஒதுக்கீடு முறையை பெற்று வருபவர்களிடம் இந்த தகுதியை எதிர்பார்க்க முடியாது... பஞ்சாயத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கீடு கொண்டுவந்தார்கள், என்ன ஆயிற்று? ஜெயிப்பவர்கள் பெண்களாக இருக்கும், கையெழுத்து போடுவதற்காக பஞ்சாயத்து ஆபிஸ்க்கு வருபர்களாக உள்ளனர், அதே நிலமைதான் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஏற்படவேண்டுமா?

சரி, மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் தீமை என்ன??? அந்த பகுதியில் நல்லது செய்து கொண்டிருக்கும் ஒரு ஆண், தேர்தலில் போட்டியிட்டு இன்னும் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று நினைத்தால், அந்த தொகுதி பெண்களுக்கு உண்டான தொகுதி என்று அறிவிப்பு வந்தால், அவரால் கிடைக்க போகும் நன்மை இல்லாமல் போகலாம்.

மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் நன்மை என்ன??? பல அட்டூழியங்கள் செய்து வரும் ஒருவர், தமது தொகுதி பெண்களுக்கு என்று மாற்றியவுடன், தமது துனைவியை வெற்றிபெற (அதான் இப்ப காசு போதுமே) வைத்து, மேலும் அட்டூழியம் செய்யலாம்.

வாழ்க ஜனநாயகமும் இடஒதுக்கீடும்!

Mar 3, 2010

சாமியார் - எனது எண்ணங்கள்

எப்படி இதை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை....

ம்ம்ம்ம்ம்ம்...

சாமியார் நித்தியானந்தா, இப்போது அதிகம் அதிகம் மக்கள் பேசும் பெயராகிவிட்டது. இவரை பற்றி அதிகபட்சம் எல்லாரும் எழுதியிருக்கிறார்கள், எழுதாவிட்டால் நான் தமிழன துரோகியாகிவிடுவேன், அதனாலும் நானும்... :)



குமுதத்தில் கதவை திற காற்று வரட்டும், தொடர் எழுதும் போது அவ்வளவு பிரபலமாக நித்தியானந்தா, இப்போது வேறு மீடியா மூலமாக மிகவும் பிரபலம் அடைந்துவிட்டார். பொதுவாக ஒருவர் பிரபலம் அடைவதினால் ஏற்படும் தொல்லைகளில் ஒன்று பிரைவசி பாதிப்பது (ஆமா  பிரைவசி தமிழ் பதம் என்ன???).

ஒருவரின் அந்தரங்கதில் ஏன்தான் அவ்வளவு ஆர்வமோ? அதுவும் சாமியார் மற்றும் சினிமா பிரபலம் என்றால் ட்ரிபிள் ஆர்வம்... இரண்டு பேர் சேர்ந்து இருந்தால் இன்னும் அதிகம். ஏன் ஒருவரின் அந்தரங்கதில் குறிக்கிடவேண்டும்? அவர் எப்படி இருந்தால் என்ன? செக்ஸ் என்பது மாபெரும் குற்றமா? சாமியார் என்பவர் மனிதர்தானே அவருக்கும் உணர்ச்சிகள் இருக்காதா? அவரின் பொது வாழ்க்கையில் எப்படி இருக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும். அவரின் கதவை திற காற்று வரட்டும் படித்திருக்கிறீர்களா? மிகவும் நன்றாய் இருக்கும், அவரின் சொற்பொழிவு கூட மிகவும் நன்றாய் இருக்குமாம்.

இப்படி பொது வாழ்க்கையில் மிகவும் நன்றாய் இருப்பவரை அசிங்கபடுத்தும் விதமாக, ஏன்தான் இவ்வளவு தொந்தரவுகளோ??? அவர் என்னவோ பலபேர் பணத்தை கொள்ளை அடித்து கொண்டு சென்றது போல... யாராவது அவர் மேல் கேஸ் போட்டார்களா? அல்லது அந்த நடிகைதான் அவர்மீது குற்றம் சுமத்தினாரா? ஏனோ இவ்வளவு வெறுப்போ?

எனக்கு தோன்றிய கேள்விகள்.

  • சாமியாரார் என்பவர் மனிதர்தானே, அவருக்கும் ஆசை இருக்காதா?
  • ஒருவரின் பெட்ரூமில் நடப்பதை ஏன் படம் பிடிக்கவேண்டும்?
  • தனிமனித சுதந்திரத்தில் தலையிட யார் அனுமதி அளித்தார்கள்?

Mar 2, 2010

திருட்டு விசிடி

திருட்டு விசிடி விற்பவர் பிடிபட்டார், ஓடி பிடித்தோம் வலை வீசி பிடித்தோம் என தினந்தோறும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. தினசரி பத்திரிக்கைகளும் அதற்காக சில பத்தியை ஒதுக்கி இருக்கும் போல், மிகச்சரியாக அவ்விடத்தில் சிலபேர் போட்டோவை வெளியிடுவார்கள். விசிடி என்பதே தப்பு எந்த படத்தை இப்போது விசிடி அடக்க முடிகிறது? டிவிடி, புளுரேய் என்று முன்னேறிக் கொண்டிறிக்கிறார்கள். இன்னும் விசிடி? ஹும்ம்ம்...




சரி, விற்பவர் பிடிபட்டார், விற்பவர் பிடிபட்டார்... என்பவர்கள், இதையும் அவர்கள் வேறிடத்திலுருந்துதானே வாங்கி கொண்டுவந்திருக்க வேண்டும் அந்த தயாரிப்பாளர்(?) என்ன ஆனார், அவரை பற்றி எதற்கு எந்த நியுஸ் இல்லை??? திருட்டு விசிடி விற்பவர்கள் உண்மையில் மிகவும் பாவம், ஒரு டிவிடி விற்றால் அதிகபட்சம் 10 ருபாய் கிடைக்குமா? 10 ருபாய்க்கு ஆசைப்படுபவற்களுக்கு குண்டர்சட்டம் எல்லாம் பாயுது... இவைகள் சாதாரண டிவிடி விற்பவர்களுக்கே பாயவேண்டுமா... நம்ம நாட்டுலதான் சட்டத்தை மிகவும் திறன் பட பயன்படுத்துகிறார்கள்.



நான் சொல்ல வந்ததே வேற மேட்டரு... அதாவது ஏதாவது ஒரு புதிய தொழில்நுட்பம் வரும் பொழுது அதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்... இல்ல, மாட்டேன், என்னால் முடியாதுன்னு சொன்னா அந்த தொழில்நுட்பம் நம்மை சீண்டித்தான் செல்லும். தொழில்நுட்பம் என்பது சுனாமி மாதிரி அப்படியே அடிச்சு தூக்கிபோட்டு போய்கிட்டே இருக்கும்...  இப்ப எல்லாம் சின்ன மொபைல் போனில் 10 MP கேமரா வந்துடுச்சு... ரொம்ப ரொம்ப ஈஸியா படம் எடுத்து போய்கிட்டே இருக்கலாம். படம் எடுக்குறது மட்டும் இல்லை, அதை ஆன்லைனில் வெளியிடுவதும் மிக மிக எளிதான காரியம்.  டிவிடி தொழில்நுட்பத்தை கண்டிப்பாக திரைத்துறையினர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.


ஒரு படத்தை இருவர் பார்க்க சென்றால் குறைந்தது 350 - 500 ருபாய் ஆகும்... டிக்கட் விலை குறைந்தது 80 முதல் 150 வரை இது கவுண்டரில் வாங்கினால்தான் பிளாக்கில் வாங்கினால் இரண்டுமடங்கு விலை, வெளியே 22 ருபாய்க்கு விற்கும் கோக்கோ பெப்சியோ 50 ருபாய்க்குமேல். அதையெல்லாம் விட 6 ருபாய்க்கு வாங்கும் சமோசா குறைந்தது 20 ருபாய் முதல் 30 ருபாய் வரை... இப்படி கொள்ளை மேல் கொள்ளை, இவற்றை சரி செய்வதற்கு எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர்களோ,  நடிகர்களோ முன்வரவில்லை... திருட்டு விசிடி திருட்டு விசிடி என்று ஆவூன்னா முதல்வரை பார்க்க போய் விடுகிறார்கள், என்ன ஒரு பிஸியான வேலை இருந்தாலும் முதல்வர் திரைத்துறையினறை பார்க்க மட்டும் தவறுவதில்லை. குண்டர்சட்டமும் பாஞ்சுக்கிட்டேதான் இருக்கு, ஏதாவது தடுக்க முடிந்ததா???

கண்டிப்பா முடியாது...  ஒரு படம் வெளியிடும் போதே அதன் டிவிடி பதிப்பையும் வெளியிட்டால் ஓரளவிற்கு இதை தடுக்கலாம். விலையையும் ஓரளவிற்கு நியாயமாக வைத்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாது, தியேட்டரில் படம் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அங்குதான் பார்பார்கள். திருட்டு விசிடியும் ஒழியும்.

Jan 4, 2010

கொண்டாடின தப்பா?

புது வருடம் ஆரம்பம் எப்படி போச்சு? நல்லா சந்தோசமா கொண்டாடிருப்பீங்க... நானும் அப்படிதான். :) ஒரே ஜாலிதான்.
 
எல்லா வருசம் போல, இந்த வருசமும் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்.
 
புது வருடத்தை கொண்டாட கூடாதுன்னு சில கூட்டம்... எல்லா மதத்திலிருந்தும் சொல்ல ஆரம்புச்சுட்டாங்க.
 
 

 
ஏன் கொண்டாட கூடாதுன்னு கேட்டா பதில் இல்லை, ஆனா கொண்டா கூடாது...
 
இப்போதய கலண்டர் படி நாம் ஆங்கில முறையை பின்பற்றுகிறோம்... அரசு எழுதுகிற டாக்குமெண்ட்ஸ், பொது நிறுவனங்கள் வெளியிடும் ஏதாவது டாக்குமெண்ட்ஸ் போன்றவற்றில் இடம் பெறுவது ஆங்கில தேதியே... எங்காவது வேறு முறையில் எழுதுகிறார்களா? பின்பற்றும் அனைத்தையும் ஒரு மாதிரி வைத்துகொண்டு... அந்த வருடம் முடிந்து அடுத்த வருடம் தொடங்கினால் மட்டும் கொண்டாடாதேன்னு சொல்லிறதுக்கு ஒரு கூட்டம்... ஏதாவது சொல்லி மக்களை பிரிக்கனும் அதுதான் நோக்கம்.
 
உஸ்ஸ்ஸ்... சந்தோசமா எழுத வந்தேன், மக்களின் சில பேர்களை நினைத்தாலே சந்தோசம் சந்தோசமில்லாம போய்டுது...
 
நல்லா கொண்டாடுவோம்!

Dec 30, 2009

வெளிவந்துகொண்டிருப்பது பூனைக்குட்டியா ஓநாயா?

இப்போதுதான் அதிக அதிக பூனைக்குட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது... மிகவும் பக்கத்தில் பார்க்காமல் விட்டதினால் தெரியவருகிறது அது பூனைக்குட்டி இல்லை, ஓநாய் என்று. இவ்வளவு நாள் அடிமனதில் தேக்கிவைத்திருந்தவை இப்போதுதான் வெளிவருகின்றன. அது கூட அதிகம் பழகிவருக்கே அது தெரியவில்லை பூனைக்குட்டியா அல்லது வேறு எதுவுமா என்று... ஓநாய் எதற்கு வரும், இரத்தம் தேடிதான் ஓநாய் வரும். இரத்த்தை பார்க்காமலும் இறந்த மனித உடலை பார்க்காமலும் கண்டிப்பாக ஓநாய் செல்லாது.




விதைப்பது விஷம் என்றே தெரியாமல் சிலபேர்,
நட்பை அசிங்கபடுத்தியிம்,
உறவை கொச்சைபடுத்தியும்..
இதுதானா அவர்கள் விருப்பம்?
அசிங்கத்தை பார்த்து விட்டால்
சிங்கத்தை எதிபார்க்கும் கூட்டம்...
இதுதான் இறுதி,
இதுதான் முடிவு என்றும் சிலபேர்...
அய்யோ பாவம்...
கொடுப்பதுதான் கிடைக்கும் அறியாதவர்களா அவர்கள்?
பரவட்ட்டும் தீ...!


இதற்கு மேலும் இதை பற்றி எழுத விரும்பவில்லை, புரியவேண்டியவர்களுக்கு புரிந்தாலும் சரி தொலைந்தாலும் சரி, நான் ஒரு பிரபல எழுத்தாளன் இல்லை பிரபல எழுத்தாளர்கள் படிப்பதற்கு, ஒரு சராசரியின் உள்ள கூக்குரல்தான் இது.

தீ பரவ வேண்டுமா அல்லது அனைக்க வேண்டுமா.

Dec 28, 2009

அதிகபட்ச தண்டனை

சமிபத்தில் நாளிதள்களில் வந்த செய்திகள்.


  • கள்ளநோட் மாற்றிய கும்பல் பிடிபட்டது
  • சீனாவில் இருந்து போலி மருந்து

முதலில் உள்ளது நமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்க கூடியது. இரண்டாவது உள்ளது மக்களின் உடல் நலத்தை சிதைக்க கூடியது. இரண்டுமே மிகக்கொடியதுதான். 

கள்ளநோட்டு மாற்றுபவர்கள் அடிக்கடி பிடிபடுவதும், அவர்களை பற்றிய செய்திகள் நாளிதள்களில் வெளியிடப்படுவதும் நடந்து கொண்டே உள்ளன, பிடிபடுபவர்கள் என்ன் ஆகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு பதில் எப்போதும் போல் வெறுமையாகவே உள்ளது... பிடிபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும், மேலும் இதனின் வேர் எங்குள்ளது என்று கண்டுபிடித்து வேரோடு அழிக்கவேண்டும். ஒவ்வொரு தடவை பிடிபடுபவர்களை போட்டோ எடுத்து நாளிதளில் போடுவதும், வேறு ஒரு பரபரப்பான செய்தி வந்தவுடன் அதை மறப்பது என்று இல்லாமல் அதனின் ஃபாலேஅப் செய்தியை வெளியிட்டு, நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவர்களை வேரோடு சாய்க்கவேண்டும். 




இதையிம் விட மிகவும் கொடியவர்கள் போலி மருந்து இறக்குமதி செய்பவர்கள். மனசாட்சியை பணத்திற்காக அடமான வைத்து செயல்படுவர்கள். சீனாவில் இறக்குமதி செய்யபடும் அதிகாகமான பொருட்கள் நமது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை, இதை மருத்துவர்களே ஒப்புகொண்டுள்ளுனர், நமது நாட்டில் விற்கபடும் மிக அதிகமான பொருட்களின் இடத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபடும் பொருட்கள் பிடித்துள்ளன, எங்கு நோக்கினும் "Made in China" என்ற முத்திரையுடன் பொருட்கள் உள்ளன. 

இப்படி மக்களை அழிப்பது போதாது, இந்திய மக்கள் அதிகமானோர் நோயளிகள் அவர்கள் அதிகம் நாடுவது மருந்துகளைதான், அதை போலியாக தயாரித்து மொத்தமாக இந்திய மக்களை ஒழித்து விடலாம் என்று சீனா என்னுகிறது போல, ஏனெனில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், வளர்ந்துவிட்டால் ஏதாவது ஒன்றுதான் வல்லரசாக இருக்க முடியும், இப்போதே இந்திய மக்களை ஏதாவது விதத்தில் அழித்துவிட்டால் அல்லது நோய்வாய் படுத்திவிட்டால் சீனாவிற்கு எதிரிகளே இருக்கபோவதில்லை, ஆதலால் கூட இப்படி செய்யலாம். 

நமது நாட்டு அரசியல்வாதிகள் இதை கண்டும் எதை பற்றியும் கவலைபடாமல் இருப்பது, சீனாவை கண்டு அஞ்சுகிறார்களா அல்லது வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. 

எந்த பத்திரிக்கையிம் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவில்லை, அவர்களை சொல்லியும் குற்றமில்லை, சகீலா காதல்தான் அவர்களுக்கு முக்கியம். அல்லது செக்ஸ் புகார்ல எந்த சாமியாருடா சிக்குவான், அந்தரங்க படத்தை வெளியிடலாம் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்.

போலி மருந்துக்கு சீனாவும், போலி நோட்டுக்கு பாகிஸ்தானும்தான் காரணம் என்றாலும் நமது ஆட்களில் உள்ள ஆடுகளால்தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றது, பிடிபடும் ஆட்களும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் அப்போதுதான்  மற்றவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும். 

Dec 21, 2009

இடைத்தேர்தல், அரசாங்கதிற்கு ஏற்படும் சுமை

சமிபத்தில் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது, திமுக அரசாங்கம் பதவி ஏற்ற நாளில் இருந்து இது 10 இடைத்தேர்தல் ஆகும்.




ஓட்டு போடுவது கட்டாய கடமை, கட்டாய கடமை என்று சொல்லி அதிககதிகமா ஓட்டு போடுவது நடந்து கொண்டுள்ளது. வரவேற்கதக்க அம்சம்தான். ஆனால் எதையிம் தொடர்ந்து செய்வதினால் ஒரு தொய்வு ஏற்படுவதை தடுக்க முடியாது. என்ன எழவுஓட்டுடா... எவனுக்கு போட்டாலும் எதுவும் ஆகபோறதில்லை, என்னதுக்கு அடிக்கடி ஓட்டு போடனும் என்று மக்களுக்கு தோன்றதவரைதான் தில்லுமுல்லு ஜெயிக்கும்.

இடைத்தேர்தல் நடப்பதினால் அரசாங்கதிற்கு பல்வேறு சுமைகள்.  இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் ஆண்டுகொண்டுருக்கும் அரசாங்கம் வெற்றி பெற்று ஆகவேண்டிய நிர்பந்தம், ஏவெனில் இடைத்தேர்தலில் மக்கள் வெற்றி பெற வைத்தால்தான் அந்த அரசாங்கதிற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக எண்ணம். இதற்காக எந்த எல்லை வரை செல்ல ஆண்டு கொண்டிருக்கும் தயங்குவதில்லை.

ஏற்கனவே நமது அரசாங்கம் வாங்கிய கடனுக்காக வட்டியே கோடிக்கணக்கில் கட்டி வருகிறது, இதில் இடைத்தேர்தல் நடப்பதினால் ஏற்படும் பணச்சுமை மிகப்பெரிய சுமை. இப்போது தேர்ந்து எடுக்க போகும் MLA ஒன்றும் ஆகபோவதில்லை, பாவம் பதவிகாலம் வெறும் 1 1/2 வருடம் தான். இந்த காலத்தில் அவர் மக்களுக்கு நல்லது செய்யபார்ப்பாரா அல்லது இழந்த பணத்தை மீட்க நினைப்பாரா?

ஒவ்வொரு இடைத்தேர்தலின் போதும் பணம்தான் அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்கிறது.

இடைத்தேர்தலினால் அரசாங்கதிற்கு ஏற்படும் செலவு எவ்வளவு என்று தனியாக கணக்கு வைத்து கொள்ளவேண்டும். அவ்வளவு செலவழிகிறது.

இதற்கு மாற்று வழி கண்டுபிடித்தால் என்ன?

ஏன் இடைத்தேர்தல் நடத்தவேண்டும்?

ஒரு தொகுதில் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவர் ஆவர், அவரின் இறப்போ அல்லது பதவியிழப்போ அங்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுத்துவிடும். அவ்வாறு இல்லாமல் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவராகவும் இரண்டாம் நிலையில் வாங்கு வாங்குபவரையிம் மாற்றாளாக (substitute) வைத்து கொள்ளவேண்டும்.  அப்படி இருக்கும் பட்சத்தில் முதலில் இருப்பவர் பதவி இழப்பு ஏற்பட்டால் இரண்டாம் நிலையில் உள்ளவர் அப்பொறுப்பை எடுக்கலாம். இதன் மூலம் அரசாங்கதிற்கு ஏற்படும் சுமையிம் ஆண்டு கொண்டுப்பவர்கள் ஜெயித்தால்தான் ஆச்சு என்ற தன்மையும் மாறும்.

எவ்வளவு காலத்திற்கு பழையதை வைத்து அழுது கொண்டுருப்பது, ஒரு மாற்றம் தான் வரட்டுமே...

Dec 8, 2009

பிரிதல் நலமா?

பிரிவினை...

ஒரு மொழி பேசும் மக்களுக்குள்ளும் பிரிவினை...

தூண்டபடுகிறவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது இந்த அரசாங்கம்! எதற்காக போராட்டம்? தெலுங்கான பகுதியில்தான் ஆந்திராவின் தலைநகரம் அமைந்துள்ளது, ஆந்திராவை சேர்ந்த அனைத்து மக்களும் அங்கு வேலை பார்க்கத்தான் செய்வார்கள். தெலுங்கான பகுதியில் வேலை பார்ப்பவர்கள் அதிகமானோர் தெலுங்கான பகுதியை சேரதவர்களாம், எங்கள் ஏரியாவை சேராதர்கள் எப்படி எங்கள் இடத்தில் இருக்கவேண்டும், வேலை செய்யவேண்டும் என்று ஒளிவுமறைவான திட்டத்துடன்தான் தனிமாநிலம் கேட்டு போராடுகிறார்கள்.




மாநிலம் பிரிவதற்காக போராட்டம் நடத்தும் சந்திரசேகர ராவை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்கள் தெலுங்குதேசப் பகுதியை சேராதவர்களும் இருப்பார்கள். இவற்றை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? 30 மருத்துவர் குழு அவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது. 30 மருத்துவர்களும் தெலுங்கு தேச பகுதியை சேர்ந்தவர்கள்தானா?

இதற்கு ஆதரவு தெரிவித்து மற்ற தேசிய(?) கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுள்ளது. தேசியம் பேசினாலே நாங்கள்தான் என்று மார்தட்டும் பிஜேபி எப்படி இதற்கு ஆதரவு தெரிவித்தது என்று தெரியவில்லை.

சொந்த மொழி ஆட்கள் மீது வெறுப்பாக இருக்கும் சந்திரசேகர ராவ் கட்சியினர் மாநிலம் பிரிக்கபட்டால் அங்கு பல காலமாக வசிக்கும் தமிழர்கள் மற்றும் மற்றவர்கள் மீதும் வெறுப்பை கக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தெடர்ந்து பல நாட்களாக பந்த்... ஆந்திராவில் இயல்பு வாழ்க்கையே பாதுக்கபட்டது, இவ்வளவு சிக்கலாக ஆக்கிகொண்டது மாநில அரசாங்கம்தான், அவர் ஆரம்பித்தவுடனே தடுத்திருக்கவேண்டும்.




ஏற்கனவே நமது நாட்டில் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்டதில் பிரிந்து போய் கிடக்கிறோம். இந்தியாவின் ஒரு சரிசரியான வளர்ச்சி எட்டாதற்கு மொழியால் பிரிந்து கிடப்பது ஒரு காரணம் ஆகும், யார் மறுத்தாலும் இது ஒரு கசப்பான  உண்மையே. இந்தியர்கள் என்று பெருமை பேசும் நாம், இந்தியர் என்பதால் ஒன்றுபடுகிறோம் எனும் நாம், மொழி என்று வரும்போது மட்டும் அனைத்து விசயங்களிலும் கோட்டைவிட்டு விடுகிறோம்,  எனது மொழி பெரிதா உனது பெரிதா எனும் சண்டையிலே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து கொண்டுயிருக்கிறோம்.

மொழியால் நமது நாடு பிரிந்து கிடப்பதினலே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, மொழிக்குள்ளும் பிரிவு ஏற்பட்டால்?

இப்படியே போனால் வீதிக்கு என்றும் ஜாதிக்கு என்றும் மாநில கோரிக்கை எழலாம்.




இந்தியா வல்லரசு ஆக அனைவரும் சேர்ந்து இருந்தலே நலம்.

Nov 21, 2009

இந்தியா எப்ப முன்னேற?

இந்தியா நன்கு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், எப்பவும் வளர்ந்துகொண்டிருக்கும் போலவே எண்ணத்தோணுகிறது. டக்க்குன்னு கோவபட்டு நீ ஒரு தேச துரோகின்னு நினைச்சுறாதீங்க... எனக்கு இந்தியா நல்ல முன்னேறனும், வல்லரசு ஆகுதோ இல்லையோ நல்லரசு ஆகி பசி பட்டினி இல்லாம மக்கள் வாழனும் அப்படீங்கிற ஆசைதான்.

 
பின்ன எதுக்கு இப்படி ஒரு பதிவுக்கு தலைப்பு?

 
மக்கள் எவ்வளவுதான் விரும்புனாலும் சில அரசாங்க ஊழியர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளால் நமது விருப்பம் தள்ளி கொண்டேபோகிறது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெரியும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு விசயங்களிலும் அலட்சியமாக இருப்பதை. அவர்கள் ஊழியர்கள் என்று சொல்வதை கூட வெறுக்கிறார்கள் அவர்களை  அதிகாரிகள் என்று கூப்பிட வேண்டுமாம், ஏன் என்றால் எல்லாரையும் அதிகாரம் செய்ய அரசாங்கதால் நியமிக்கபட்டவர்கள் என்று நினைப்பு.

 
கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரேசன்கார்டில் மாற்றம் செய்வதற்காக அங்கு உள்ள ஊழியர் சில நாட்கள் அலையவிட்டனர். ரேசன்கார்டில் மாற்றம் செய்து வாங்குவதற்குள் சே ரேசன்கார்டே வேண்டாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.
 
இப்போது பாஸ்போர்ட் முடிந்து விட்டது என்று, ஆன்லைனில் அப்ளை செய்து  அவர்களும் 20/11/2009 10 மணிக்கு என்று நேரம் ஒதுக்கியதால், பரவாயில்லை நாடு முன்னேறிக்கொண்டுதான் வருது போல என்று சந்தோசமடைந்து, பந்தாவா 9:55 பாஸ்போர்ட் ஆபீஸ் சென்றேன்.

ஊரில் உள்ள பலபேரு அங்குதான் இருப்பார்கள் போல, அவ்வளவு ஒரு கூட்டம். சரி நமக்குதானே டைம் போட்டு செட்யூல் போட்டு கொடுத்திருக்கார்கள்தானே ஈஸியா உள்ள போயிடலாம்னு நினைச்சு, பெரிரிரிரிய வருசையை கடந்து ஒரு செக்யூரிட்டியிடம் கேட்டா, அவர்தான் அந்த பாஸ்போர்ட் ஆபிசை தாங்கி நிற்பவர் அப்படி ஒரு எரிச்சலான பார்வை... "ந்தா, எல்லாருக்கும் 10 மணிதான் டைம், நீ அங்கே போயி நில்லு" அப்படின்னு ஒரு பெரிய வருசையை காட்டினார். வரிசையா பார்த்து அதிர்ந்து போய் நின்றேன். அந்த வரிசையில் கூட்டமும் கொஞ்சமாத்தான் இருந்தது, சரி எப்படியும் ஒரு 60 நிமிடத்தில் வரிசை முடிந்துவிடும், பாஸ்போர்க்கு அப்ளிகேசன் கொடுத்துடலாம்ன்னு நம்பி நின்றேன். அப்பதான் தெரிந்தது அது அப்ளிகேசனு கொடுப்பதற்கு உண்டான கூட்டம் இல்லை, எந்த வரிசையில் நிற்கவேண்டும் என்பதற்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவாங்களாம் அதற்கு உண்டான வரிசைதான் அது. இந்த கொடுமையா யாராவது அனுபவித்துள்ளீர்களா.

எந்த வருசையில் நிற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு வருசை.

அதுமுடிய 1 மணிநேரம் ஆச்சு. ஒருவழியா ஸ்டிக்கர் ஒட்டியாச்சு அவர்கள் சொன்ன வேறு ஒரு கியுவில் போய் நின்றேன். அங்கும் சரியான கூட்டம் இருந்துச்சு, எனக்கு முன்னாடி வயசான ஒரு அம்மா நின்று கொண்டிருந்தார்கள், பாவம் அவர்களால் நிற்க கூட முடியவில்லை,  பாஸ்போர்ட் ஆபிஸில் எப்படி விண்ணப்பம்  பூர்த்தி செய்வது போன்ற விபரங்கள் எழுதி போட்டிருந்தனர், அதில் ஒன்றுதான் வயதானவர்களுக்கு 2 மாடியில் அப்ளிகேசன் வாங்கபடும்ன்னு போட்டிருந்தது. இதை அந்த வயதான அம்மாவிடம் சொன்னேன். நீங்க "ஏம்மா கியுவில் நிக்கிறீங்க, 2 மாடிக்கு போங்க அங்க வாங்கிகிருவாங்க" அப்படீன்னு, பாவம் அவர்களும் ஏறமுடியாமல் 2 மாடிக்கு ஏறி கொஞ்ச நேரத்தில் திரும்ப வந்துட்டாங்க,  அங்கு கொடுக்க முடியாதாம் இங்குதான் கொடுக்கவேண்டுமாம். எனக்கே என்னவே போல ஆயிடுச்சு. என்னாலதானே நடக்க முடியாம மேல் போய்விட்டு வந்துவிட்டார்கள் என்று.

பெரிய கொடுமை என்னவென்றால், மிக அதிகமான கூட்டத்திற்கு,  எல்லாவற்றையும் செக்செய்யும் ஊழியர்கள் 3 பேரே இருந்தனர்.

கூட்டம் அப்படியே நகர்ந்து நகககககககர்ந்து போயிடுச்சு.

அங்கே இருந்தவர்கள் முகத்தில் அப்படி ஒரு கடுகடுப்பு, எல்லரிடமும் எரிச்சலான வார்த்தைகள்தான். யாரா இருந்தாலும் ஆங்கிலத்தில்தான் பதில், ஆனால் அவர்களுக்குள் தமிழில் பேசிக்கொள்கிறார்கள், என்னமோ இந்தியாவை அவர்கள்தான் காத்துகொண்டிருப்பது போல்.

நான் எனது அப்ளிகேசன் ஃபார்ம் மற்றும் அனைத்து சர்டிபிகேட் எல்லவற்றையும் கொடுத்தவுடன், "Your photos are not good, take photos for passport" இது சொன்னவுடன் நெக்ஸ்ட் அப்படின்னுட்டாரு, நான் உடனே வெறுத்துபோயி வெளியே வந்துட்டேன்.

எப்ப மறுபடி போட்டா எடுத்து மறுபடி லீவு போட்டு அப்ளை செய்ய...

இதுதான் எனது கோபம்.

  • இப்படி செய்தால் ஏஜெண்டிடம் ஏன் அதிக பணம் எடுத்து அல்லது ஏதாவது திருட்டுதனம் செய்து பாஸ்போர்ட் வாங்க மாட்டார்கள்?
  • வயதானவர்கள், கர்பிணிப் பெண்கள் வந்தால் அவர்களுக்கு ஏன் தனி இடம் ஒதுக்க கூடாது?
  • 90% பேர் வேலைக்கு போகிறவர்கள்தான், வரவேண்டும் என்றாலே விடுப்பு எடுத்துதான் வரவேண்டும். சனி, ஞாயறு நாட்களிலும் செயல்பட்டால் என்ன?
  •  ஆன்லைன் அப்ளிகேசன் எதற்கு? அப்ளை செய்பவர்களுக்கு சரியான நேரத்தை குறிப்பிட்டால் எல்லாருக்கும் நன்றாக இருக்கும்.
  • அங்கிருப்பவர்கள் உட்கார இடம் இல்லை, கியுவில் நின்றுகொண்டே வரவேண்டியதிற்கிறது, ரயில் முன்பதிவு நிலையங்களில் உள்ளதுபோல் சேர் போட்டால் என்ன?
  • 10 பேர் பார்க்கவேண்டிய வேலையை 3 பேர் பார்த்தால் எல்லருக்கும் வெறுப்புதான் வரும், ஏன் அதிக பேர்களை வேலைக்கு அமர்த்த கூடாது? 

Nov 13, 2009

சென்னையின் சப்தம்

உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... தினமும் யராவது ஒரு ஆட்டோக்காரரிடம் திட்டு வாங்குவது அல்லது அவரை திட்டுவது என்பது சென்னை வாசிகளுக்கு பழக்கமான ஒன்றுதான். நான் ஆட்டோக்காரரை திட்டுறேன்னா, அதுக்கு முதல் காரணம், என்ன கருமாந்திரமான எஞ்சின்தான் வைய்த்துருப்பார்களோ, கடவுளே, அது ஓசோன் படலத்துல ஓட்டை போடுறது ஒரு பக்கம். சில ஆட்டோ விடும் பாருங்க ஒரு சப்த்ம், உலகத்துல யாருமே கேட்டே இருக்க முடியாது; அப்படி ஒரு சவுண்டு.... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்னூ மிகக்கொடுமையான சப்தம், நான் பைக்ல போகும் போது ஆட்டோ வந்தா ஒதுங்கி வழிவிட்டுறது, ஆட்டோ முன்னாடி மாட்டிக்கிடா டிரைவரோட வாய் சத்தம்; ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிடா இஞ்சின் சத்தம்.






அப்புறம், பைக்... சில பேர் பன்னுற அழும்பு தாங்கவே முடியலை... பைக்ல ஹாரனுங்குற பேருல வச்சுருப்பங்க ஒரு வித்தியாசமா சவுண்டு. ஏதாவது மிருகம் பக்கதுல போய் அடுச்சா அடுத்த நொடி அது செத்துரும், நாம எல்லாம் இதை எல்லாம் கேட்டுகிட்டு எப்படித்தான் உயிர் வாழ்றோமே???


ஏதாவது தலைவர் பிறந்த நாள், இறந்த நாள் வந்தா போதும்... உசிரோட இருக்கும் போது கண்டுக்கதவன், மைக் செட்டு வச்சு போடுவான் பாட்டை... கொஞ்சம் நோயால இருக்குறவங்க எல்லாம் பெரிய சீக்காளி ஆய்டுவங்க. அந்த பாட்டு எழவுதான் ஒழியுதுன்னா, அவரு மைக் புடுச்சு பேச ஆரம்பிப்பார்... கொண்டாடப்படும் தலைவரே மறுபடியும் செத்துடலாமான்னு நினைப்பார்... அவரு பேசிறதா சென்னைல இருக்குற எல்லா ஏரியாவுக்கும் கேக்கனும்னு தெடர்ச்சியா மைக் செட் கட்டி நம்ம காத புண்னு ஆக்கிடுவாங்க.


நான் சென்னை விட்டு போகலைனா, விரைவில் நான் செவிடு ஆயிடுவேன் :(


எது எதுக்கோ கேசு போடுற புண்ணியன்களே சென்னையின் சப்தம் குறைக்க ஒரு வழி செய்ய கூடாதா???

டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு

Nov 11, 2009

மாறவே மாட்டாங்களா?

பொதுவா ஏமாறுவதுக்கு என்றே சில பேர் உள்ளனர் போல். இதில் ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்களையே குற்றம் சொல்லனும். சமிபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் இந்த பதிவை எழுத தூண்டியது. 

அதாவது, ஒரு கணிணி நிறுவனத்தில் பணம் கட்டினவர்களை அந்நிறுவனம் பட்டை நாமம் சாத்திஉள்ளது...

எப்படிதான் ஏமாறுவார்களோ?

சில பேர் தானும் சாப்பிடாமல், மற்றவர்களுக்கு தானம் செய்யாமலும் சேமித்து சேமித்து இப்படி ஏமாற்று பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து எப்படிதான் சிந்திக்காமல் ஏமாறுகிறார்களோ? சிறிது வருடங்களுக்கு முன்பு சிட்பண்ட் என்ற பெயரில் ஏமாற்றி கொண்டுருந்தார்கள். 

இப்போதும் அவர்கள் தொடர்கிறார், வேறு வேறு பெயர்களிலும். மக்கள் இப்போதும் தொடர்ந்து ஏமாறுகிறார்கள்.

சில விசயங்கள் நமக்கே தெரியவேண்டும். பணம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்நிறுவனத்தின் நம்பகதன்மையை சிந்திக்க வேண்டாமா? 100000 முதலீடு செய்து மாதம் 20000 வருமானம் வரும் என்றால் நம்பிவிடுவதா? சமிபகாலமாக அதிககமாக பஸ், ரயில் போன்றவற்றில் சிலபோஸ்டர் தென்படுகின்றன... அவைகளின் சாராம்சம்...

"மாதம் 5000 வருமானம்,  இது மார்கெட்டிங் கிடையாது, கஷ்டப வேண்டியதில்லை, சேல்ஸ் வேலையிம் கிடையாது, உங்களது விருப்பபட்ட நேரங்களில் வேலை செய்யலாம்"

இப்படிலாம்,  இருக்கின்றது... எப்படி வரும் 5000 ருபாய்.. சும்மா தூக்கி கொடுத்திருவாங்களா 5000 ருபாய்??? நாம அவர்கள் கொடுக்கும் நம்பருக்கு பேசினால் அப்படியே ஐஸ் முழுங்கியது போல் பேசுவார்கள்.. அவர்கள் இடத்திற்கு கூப்பிட்டு  நீங்க எந்த வேலையிம் செய்ய வேண்டாம், 100000 பணம் கட்டிடுங்க... மாசம் மாசம் 5000 ருபாயா 5 வருசத்திற்கு கொடுப்போம், ஜாலியா இருக்கலாம்னு சொல்வார்கள்... ஏமாறுவதற்கே இருக்கும் மக்களும் பணத்தை கட்டி விட்டு வருவார்கள்.

ஏமாற்றுபவர்கள் பலவிதம், கம்பியூட்டர் பெயரில் கூட... "டாக்குமொண்ட் பிராஸ்ஸிங்... ஒரு குறுப்பிட்ட அமொண்ட் கட்டிடுங்க, எவ்வளவு கட்டுறீங்களோ அதற்கு தகுந்தார்போலவே டாக்குமொண்ட் கொடுப்போம், நீங்கள் அதை பிராஸ்ஸிங் செய்து மாதம் 50000 வரை சம்பாதிக்கலாம்..." பணத்தாசையில் வீட்டை அடமானத்தில் வைத்து சேர்வார்கள்.

எனக்கு தெரிந்தவர் நடந்த உண்மை சம்பவம் இது.
சென்னை சுற்றி பார்க்க வந்த அவரது குடும்பம், எங்கோ செல்லும் போது, ஏதோ ஒரு பார்மில் அவர்களது மொபைல் நம்பரை கொடுத்துள்ளனர், அவர்களும் அதை மறந்து விட்டனர், கொஞ்ச நாளில் அவர்களுக்கு ஒரு போன் வந்துள்ளது,  "உங்களுக்கு சிங்கப்பூர் போவதற்கு பரிசு விழுந்துள்ளது" என்று கூறிவுள்ளார்கள், அவர்களும் ஒரே குஷியாகி அடுத்த நாளே சென்னை வந்து ஒரே குஷியா இருந்தாங்க... அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போனவுடன்... உங்களுக்கு பரிசு விழுந்தது உன்மைதான். சீக்கிரமா பாஸ்போர்ட்லாம் ரெடி பன்னுங்க, விசா, டிக்கட், தங்குற செலவு எல்லாம் நாங்களே பார்த்து கொள்வோம், அவரு ரெம்ப சந்தோசமாயிட்டாரு... அவர்கள் சில இடங்களில் அவரின் கையெழுத்து வாங்கிவிட்டு, இது நீங்க எங்க கிளப்பில் மெம்பரா சேர்ந்தாதான் இது எல்லாம் அணுவிக்க முடியும் என்றவுடன், அவரும் அவரின் மிகவும் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து விட்டனர்.

எல்லா இடங்களிலும் இவர்கள் உள்ளனர்,  வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூட ஒரு கூட்டம் ஏமாற்றி கொண்டு இருக்கின்றது. நாம அங்கு போன பிறகுதான் தெரியும், ஏதாவது அவர்களிடம் சேர்ந்து கோர்ஸ் படித்தால்தான் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வார்களாம்... வேலை என்பது உறுதி கிடையாது... வேலை கிடையாது என்பது உறுதி :)




இப்படி பலபேர் இருக்கின்றன்ர், ஏமாற்றுவர்களின் லிஸ்டில்... நாம்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுநிறுவன வங்கிகளே 11% மேல் வட்டி தறுவதில்லை... மற்றவர்கள் எப்படி தறமுடியும்? சிந்திப்பார்களா?