Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

Aug 6, 2010

இஸ்ரேல்... ஹிட்லரின் தீர்க்கதரிசனம்

சிலரை உயிரோடு விட்டுள்ளேன், அவர்கள் மீது இரக்கபட்டு அல்ல, அந்த இனம் எப்படி பட்டது என்பதை உலகம் அறியவேண்டும். --ஹிட்லர்.

இந்த படங்களை பாருங்களேன், மிகவும் வருத்தமாய் இருக்கும் இதையெல்லாம் பார்க்க, ஏன்தான் இப்படி நடக்கிறதோ??? ஹிட்லர் சொன்னது உண்மைதான் போல், ஈவு இரக்கம் இல்லாமல் இப்படியும் செய்வார்களா?































Oct 12, 2009

விஞ்ஞானிகளும் முடநம்பிக்கைகளும்

படிச்சவனும் எல்லா முடநம்பிக்கையிம் இருக்கும் என்பது அடிக்கடி உறுதி செய்யபடுகிறது..  இப்போது நான் பார்த்து அதிர்ச்சி அடைந்தது விஞ்ஞானிகள் வேறு ஒரு விஞ்ஞானிகானியை நரபலி கொடுக்க முயன்றது.

குவாலியர்: மத்தியப் பிரதேசத்தில் இளம் விஞ்ஞானி ஒருவரை இரு மூத்த விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.



மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (Defence research and development establishment) விஞ்ஞானியாக உள்ள சுசில்குமார் மிஸ்ராவின் மனைவி ஸ்ரீதா சர்மா.
இவர் 4 நாட்களுக்கு முன் குவாலியர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.


அதில், தனது கணவருடன் பணியாற்றும் மூத்த விஞ்ஞானிகளான காமேஸ்வர ராவ், பாஸ்கர் ஆகியோர் அவரை கடத்திச் சென்று நரபலி கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.


ராணுவத்தின் ரக்ஷா விஹார் காலனியில் வசிக்கும் காமேஸ்வர ராவ், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி சுசில் குமாரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.அங்கு சுசில் சென்றபோது பாஸ்கர் ஏதோ பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது சுசில் குமாருக்கு குடிக்க பானம் கொடுத்துள்ளனர் இரு விஞ்ஞானிகளும்.அதை அருந்திய சுசில் குமார் மயங்கியுள்ளார். இந் நிலையில் கூர்மையான கத்தியுடன் இருவரும் அவரை நெருங்கியுள்ளனர். அப்போது பாஸ்கர் மந்திரங்களை ஜெபித்தபடி அருகே வந்ததால் அந்த சத்தத்தில் சுசில் குமார் முழித்துள்ளார். தன் கழுத்துக்கு அருகே கத்தியுடன் இரு விஞ்ஞானிகளும் நின்றிருந்ததைப் பார்த்து தப்பியோட அவர் முயன்றுள்ளார். அப்போது இருவரும் அவரை பிடித்து இழுக்கவே, உதவி கேட்டு குரல் எழுப்பினார் சுசில். இந்த சத்தம் கேட்டு வாட்ச்மேன் ஓடி வரவே அவரை விட்டுவிட்டனர் இரு விஞ்ஞானிகளும். ராவின் வீட்டிலிருந்து சுசில் குமார் தப்பியோடுவதை அண்டை வீட்டினரும் வாட்ச்மேனும் பார்த்துள்ளனர். தப்பியோடுகையில் வலது கையில் ஏற்பட்ட காயத்துடன் கண்டோண்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் சுசில்குமார்.


நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் இப்படிப்பட்ட விஞ்ஞானிகளும் இருப்பது வெட்கக்கேடு.
 
நன்றி தட்ஸ்தமிழ்
 
 
மிகவும் வருத்ததுகுறிய செய்தி.
 
சுசில் குமார் முழித்ததினால் தப்பித்தார் இல்லை என்றால்? நினைக்கவே கொடுறமாக இருக்கிறது.
 
அவர்கள் அப்படி செய்ய காரணம் என்ன?
 
தமிழகத்தை தவிர பலமாநிலங்களில் மூடநம்பிக்கை வேரூன்றி போய் உள்ளது... ஆனால் படித்தவர் மத்தியில் அதுவும் விஞ்ஞானியாக இருப்பவர்களிடம் இதுபோல் இருக்க காரணம் என்ன? நரபலி கொடுப்பதினால் என்ன நடந்து விட போய்கிறது? இதில் மதத்தை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை.  ஒருவர் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அவர்கள் வளர்ந்த விதமும் சமுதாயமும் காரணமாய் அமைகின்றன...
 
இதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மிகச்சிறந்த நிறுவனங்களில்தான் கல்வி பயின்று இருப்பார்கள். அறிவியல் கல்வி கொடுக்கும் பல்கலைகழகம், ஒழுக்க கல்வியும் அனைத்து பகுத்தறிவும் முறையும் கற்பிக்கனும்.

இது மட்டும் அல்ல, நமது ISRO வில் கூட, ராக்கெட் ஏவும் போது நாள் பார்த்து,  இலுமிச்சை வெட்டிதான் அவற்றை ஏவுகிறார்களாம். 



பெரியார் போல அங்கு யாரும் இருக்காததுதான் காரணம் என்றால், முதலில் பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுமைக்கும் அதிக அளவில் பரப்பவேண்டும்.  பெரியார் எதிர்த்த அளவிற்க்கு மூடநம்பிக்கைகளை யாரும் எதிர்திருப்பார்களா என்பது சந்தேகமே. பெரியார் என்றாலே கடவுள் மறுப்பு என்ற கருத்தை மட்டும் விளங்கொண்டுள்ளவர்களிடமும் பெரியாரின் கருத்துக்கள் போய் சேரவேண்டியது மிக அவசியம்,  பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிகொள்பவர்கள், அவரின் அனைத்து கருத்துகளையும் அனைவரிடமும் சென்றடையுமாறு செய்யவேண்டும் இதுதான் எனது எண்ணம். அப்போதுதான் இப்படி பட்ட நிகழ்ச்சிகள் படித்தவர்களிடம் இருந்து மறையும்.

Sep 30, 2009

தமிழை கொலை செய்தது போதும்

<<<
அய்யா இஸ்லாமியரே தமிழை கொலை செய்தது போதும் . இனியாவது தமிழை விட்டுவையுங்கள், தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் தமிழில் எழுத தெரியவில்லை. உங்களுக்கெல்லாம் எதற்கு தமிழ் வலைப்பதிவு , உமக்கெல்லாம் உருது தான் லாயக்கு. தயவு செய்து நிறுத்திகொள்ளும் உமக்கு கோடி புண்ணியமாக போகும். நீங்கள் சொல்லவிருக்கும் பதிவுகள் அனைத்தையும் படிக்கவே தோன்றவில்லை ஏனென்றல் தமிழை கொலை செய்வது பார்த்து தான் . தமிழுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் தயவு செய்து உங்கள் பதிவை தமிழில் எழுதுவதை நிறுத்தி கொள்ளுங்கள்







----இவண் முனைவர் ப . பிரியா கண்ணப்பன்
priya.9582@gmail.com
>>>
 
இப்படி ஒரு மெயில் எனக்கு இன்று வந்திருந்தது.
 
நானா தமிழை கொலை செய்கிறேன்?
 
ஆரம்பத்தில் எதுவும் தவறாகத்தான் இருக்கும், போக போகத்தான் சரியாகும், நானும் முடிந்த அளவு தவறில்லாமல்தான் முயற்சிக்கிறேன். ஏதாவது எழுத்து பிழையிருந்தால் அதை கடிதத்தில் கூறிருந்தால் சந்தோசப்பட்டு திருந்திருப்பேன்.
 
நான் எழுது எழுத்தில் இலக்கண தவறு இருந்து, அதை மாற்ற சொல்லி கடிதங்கள் வந்தன, அவர்களுக்கும் நன்றி சொல்லி அவர்கள் சொன்ன மாற்றம் படி மாற்றினேன்.
 
ஏன் இந்த வன்மம்?
 
நான் தமிழில் எழுதுவதற்கு காரணம், அது எனது தாய்மொழி. உருது எனக்கு தெரியாது, எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. தெரிந்த மொழியில்தானே எழுத முடியும்.
 
ஏன் அனைத்தையும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்?
 
எது எடுத்தாலும் மதம்தானா?
 
தமிழை யாரும் இங்கு சொந்தம் கொண்டாட தேவை இல்லை. எல்லாருக்கும் பொதுதான் அது. தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடும் கூட்டம் என்றாவது தமது சொந்தமான் நிறுவனத்தில் தமிழில் பெயர் வைத்திருக்குமா? அனைவரையும் நான் சொல்ல வில்லை. இஸ்லாமியர்கள் நடத்தும் நிறுவனங்களில் பாருங்கள் முடிந்த அளவு தமிழில்தான் பெயர் வைத்திருப்பார்கள்,  இங்கு மட்டும் அல்ல, நான் துபாயில் பணிபுரிந்ததால் அங்கும் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளுக்கு தமிழில்தான் பெயர். நாங்கள் தமிழை கொலை செய்ய விரும்பினால் ஏன் தமிழில் பெயர்?
 
என்னவோ இவர்கள் மட்டும்தான் தமிழை காப்பது போலவும், மற்றவர்கள் தமிழை கொலை செய்வது போலவும்...
 
 

இலங்கையில் தமிழ் சகோதர்கள் செத்து கொண்டுறுக்க, என்ன செய்தார்கள் இவர்கள்?
 
 
 
தமிழ் மொழிக்காக வாழ்கையில் என்ன செய்திருப்பார்கள்? அடுத்தவர்களை குற்றம் சொல்வதை தவிர?
 
 
 
 
எதுக்கு எடுத்தாலும் குறை.
 
எப்படித்தான் மதத்தை எல்ல விசயத்திலும் முடித்து போடுவார்களோ?
 
அது எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுகிறது?
 
தமிழை யாரும் இங்கு வாழ வைக்க வேண்டாம்.
அதுதான் பல பேரை இங்கு வாழ வைத்து கொண்டிருக்கிறது.