Showing posts with label தண்டனை. Show all posts
Showing posts with label தண்டனை. Show all posts

Apr 10, 2012

கள்ளகாதலும் உயிர் பறிப்பும்

தினமும் ஏதாவது ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு கொண்டே போகிறது, அதுவும் கள்ளகாதலினால் ஏற்படும் உயிர் பறிப்பும் அதிகம் அதிகம்… இன்று தட்ஸ்தமிழ் படிக்கும் போது மிகவும் கொடுமையான சம்பவமாக இது உள்ளது, அதாவது கள்ளக்காதலாக்காக பெற்ற குழந்தைகளைக் கொன்றதுதான்… படிக்கும்போதே மிகவும் வலித்தது…

என்ன ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேமோ…


அதை படிக்க

http://tamil.oneindia.in/news/2012/04/10/tamilnadu-illicit-affair-auto-driver-killed-his-kids-aid0128.html


என்னுடையே கேள்வியெல்லாம், எதுக்கு குழந்தையை கொல்லனும்? அவருடைய கள்ளக்காதலியுடன் போய் தொலைய வேண்டியதுதானே… அந்த கள்ளக்காதலி கொல்ல சொன்னாராம் இவரும் கொன்னுட்டாறம்… ஒரு பெண் எப்படி இப்படியெல்லாம் குழந்தையை கொல்ல சொல்ல முடியும்? இதில் மிகவும் பாவம் அந்த குழந்தைகளின் தாய்தான்.. மிகவும் பரிதாபம்….


கள்ளகாதல் மிகவும் ஒரு கொடுரமாக பரவிக்கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு தீர்வு கண்டிப்பா வேண்டும்.


சரி, குழந்தைகளை கொன்றவருக்கு நமது நாட்டின் அரசியல் சட்டபடி என்னதான் தண்டனை கொடுப்பார்கள்? இப்படி பட்ட ஆட்டகளையெல்லாம் என்னதான் செய்யலாம்?

Dec 28, 2009

அதிகபட்ச தண்டனை

சமிபத்தில் நாளிதள்களில் வந்த செய்திகள்.


  • கள்ளநோட் மாற்றிய கும்பல் பிடிபட்டது
  • சீனாவில் இருந்து போலி மருந்து

முதலில் உள்ளது நமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்க கூடியது. இரண்டாவது உள்ளது மக்களின் உடல் நலத்தை சிதைக்க கூடியது. இரண்டுமே மிகக்கொடியதுதான். 

கள்ளநோட்டு மாற்றுபவர்கள் அடிக்கடி பிடிபடுவதும், அவர்களை பற்றிய செய்திகள் நாளிதள்களில் வெளியிடப்படுவதும் நடந்து கொண்டே உள்ளன, பிடிபடுபவர்கள் என்ன் ஆகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு பதில் எப்போதும் போல் வெறுமையாகவே உள்ளது... பிடிபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும், மேலும் இதனின் வேர் எங்குள்ளது என்று கண்டுபிடித்து வேரோடு அழிக்கவேண்டும். ஒவ்வொரு தடவை பிடிபடுபவர்களை போட்டோ எடுத்து நாளிதளில் போடுவதும், வேறு ஒரு பரபரப்பான செய்தி வந்தவுடன் அதை மறப்பது என்று இல்லாமல் அதனின் ஃபாலேஅப் செய்தியை வெளியிட்டு, நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவர்களை வேரோடு சாய்க்கவேண்டும். 




இதையிம் விட மிகவும் கொடியவர்கள் போலி மருந்து இறக்குமதி செய்பவர்கள். மனசாட்சியை பணத்திற்காக அடமான வைத்து செயல்படுவர்கள். சீனாவில் இறக்குமதி செய்யபடும் அதிகாகமான பொருட்கள் நமது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை, இதை மருத்துவர்களே ஒப்புகொண்டுள்ளுனர், நமது நாட்டில் விற்கபடும் மிக அதிகமான பொருட்களின் இடத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபடும் பொருட்கள் பிடித்துள்ளன, எங்கு நோக்கினும் "Made in China" என்ற முத்திரையுடன் பொருட்கள் உள்ளன. 

இப்படி மக்களை அழிப்பது போதாது, இந்திய மக்கள் அதிகமானோர் நோயளிகள் அவர்கள் அதிகம் நாடுவது மருந்துகளைதான், அதை போலியாக தயாரித்து மொத்தமாக இந்திய மக்களை ஒழித்து விடலாம் என்று சீனா என்னுகிறது போல, ஏனெனில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், வளர்ந்துவிட்டால் ஏதாவது ஒன்றுதான் வல்லரசாக இருக்க முடியும், இப்போதே இந்திய மக்களை ஏதாவது விதத்தில் அழித்துவிட்டால் அல்லது நோய்வாய் படுத்திவிட்டால் சீனாவிற்கு எதிரிகளே இருக்கபோவதில்லை, ஆதலால் கூட இப்படி செய்யலாம். 

நமது நாட்டு அரசியல்வாதிகள் இதை கண்டும் எதை பற்றியும் கவலைபடாமல் இருப்பது, சீனாவை கண்டு அஞ்சுகிறார்களா அல்லது வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. 

எந்த பத்திரிக்கையிம் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவில்லை, அவர்களை சொல்லியும் குற்றமில்லை, சகீலா காதல்தான் அவர்களுக்கு முக்கியம். அல்லது செக்ஸ் புகார்ல எந்த சாமியாருடா சிக்குவான், அந்தரங்க படத்தை வெளியிடலாம் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்.

போலி மருந்துக்கு சீனாவும், போலி நோட்டுக்கு பாகிஸ்தானும்தான் காரணம் என்றாலும் நமது ஆட்களில் உள்ள ஆடுகளால்தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றது, பிடிபடும் ஆட்களும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் அப்போதுதான்  மற்றவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும். 

Sep 28, 2009

மனித நீதி தண்டனை

மறுபடியும் தண்டனை பற்றிய ஒரு பதிவு.  முந்தைய பதிவு இங்கே


இதை எழத தூண்டியது தருமியின் GO TO HELL ! பதிவுதான்.


அதாவது, அப்பதிவை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது எல்லாம், "மனித நீதி தண்டனை" பற்றிதான். மனித நீதி தண்டனை என்றால் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.

தண்டனை என்றாலே அது மனிதாபமற்றதாத்தான் இருக்கும். இதில் எப்படி வரும் மனித நீதி?



 முதலில் தண்டனை என்பதை மறுபடியும் கூறுகிறேன், ஒரு தவறு செய்கிறவர் அதை மீண்டும் செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, இதைத்தான் நான் விளங்கி கொண்டது.

ஒருவன் ஒருவரிடம் இருந்து 1000 பணம் திருடியதாக வைத்துகொள்வோம், மனித நீதி தண்டனையின் படி "எப்பா இவன பார்த்தா பாவமா இருக்கு! ஜெயில் தண்டனையிலாம் கொடுக்கிறது மனித நீதிப்படி தப்பு,  செல்லமா கன்னத்துல ரெண்டு அடி போட்டு விட்டுடுங்க."  இப்படி ஒரு தீர்ப்பு/தண்டனை இருந்தா அவன் மீண்டும் 1000000 திருடினால் அதற்கு காரணம் இந்த மனித நீதி தண்டனையாத்தான் இருக்கும். ஒரு தவறு செய்கிறவன் மீண்டும் அதை செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, அதை ஊக்கிவிக்கவா மனித நீதி தண்டனை???

மனித நீதி, மனித நீதி சொல்லி சொல்லி... பல நாடுகளில் தூக்கு தண்டனை இல்லாமல் செய்தாயிற்று, இப்ப எதுக்கு மற்ற தண்டனையும், தண்டிக்கிறது பாவம், விட்டுடிவோம் இப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

நான் தருமியின் பதிவை மட்டும் வைத்து சொல்லவில்லை. பல்வேறு நாடுக்களில் உள்ள பல அறிவுஜீவிகள் இப்படிதான் கூறுகிறார்கள்.

அதாவது தவறு இழைத்தவர்களை தண்டிக்க கூடாதாம். இதுதான் மனித நீதி தண்டனையாம்.

இதைப்பற்றி பேசுபவர்கள் தவறு செய்பவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது, ஏதாவது நடந்து பிறகு தவறு செய்தவனை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து விடலாம் என்றால் அது சரியான முறை. இங்கு தவறிழைத்தவருக்கும் தவறிழைக்கப்பட்டவருக்கும் இவர்கள் எவ்விதத்திலும் சம்பந்த படாதவர்கள்.

ஒருத்தன் ஒரு பெண்னிடம் தவறாக நடந்தால் அல்லது அப்பெண்னை கெடுத்து விட்டால், என்ன தண்டனை கொடுக்கும் இச்சமுதாயம்? சில காலம் ஜெயில் தண்டனை. ஆனால் அப்பெண்னின் வாழ்க்கை??? இதே நேரத்தில் அவனின் உறுப்பை வெட்டினால், யாருக்காவது மீண்டும் இதை போல் செய்ய தோண்டுமா?  இவ்விசயத்தில் அனைவரும் பயப்படுவர்கள்.

பாதிக்கப்பட்டவனுக்குதான் வலி தெரியும், குஜராத் கலவரத்திலும், மும்பை குண்டு வெடிப்பிலும் தனது சொந்த பந்தங்களை இழந்தவர்களுக்கும் தெரியும் வலியும் வேதனையும்,  இவர்கள் இப்படி சொல்லி சொல்லியே அஜ்மல் கசாப்பை விடுதலை செய்ய வைத்து விடுவார்கள்.
 
சிங்கப்பூர் இப்போது பணக்கார நாடுகளில் ஒன்று, மலேசியாவை விட்டு பிரிந்து வரும்போது ஒரு சாதாரன நாடுதான் அது, எப்படி ஏற்பட்டது இவ்வளர்ச்சி? சும்மா இல்லை ஆரம்பத்தில் தவறிழைத்தவர்களையும் லஞ்சம் ஊழல்களில் மாட்டியவர்களை தயவு தாட்சனை இல்லாமல் தண்டித்தார்கள், இப்போது அவ்வாறே உள்ளது சிங்கப்பூர். இங்குதான் எது என்றாலும் கொடியை பிடித்து வந்து விடுகிறார்கள்.

அதிப்படியான தண்டனைகளே குறைவான குற்றங்களுக்கு வழிவகுக்கும்.

தண்டனைகள் அதிப்படுத்த வேண்டும் என்று போராடிகொண்டிருக்க, தண்டனைகளே நீக்க வேண்டும் என்று போராட்டம்...... ம்ம்ம்ம் என்ன செய்வது ஒரு விதமா நோய் இவர்களை பிடித்து ஆட்டுகிறது.