Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts

Apr 14, 2012

இலவசக் கல்வி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த செய்தியை எவ்வளவு பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை, எதுவும் பரபரப்போ அல்லது நடிகை பற்றிய நிகழ்ச்சியே என்று யாரும் கண்டுகொள்ளாமல் கூட போய்விடலாம். பொதுவா இப்படிதானே நடக்குது.

அதாவது உச்சநீதிமன்றம் மிகவும் வரவேற்க்க கூடிய தீர்ப்பை கூறி இருக்கிறது, ஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு, 

தட்ஸ்தமிழில் வந்த செய்தியை பாருங்கள்.

http://tamil.oneindia.in/news/2012/04/13/india-sc-stamp-on-right-education-poor-students-to-study-free-aid0174.html

கல்வி என்பது மாபெரும் வியாபரமாக போய்விட்ட நமது நாட்டில், கல்வி என்பது இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்பாடி ஏற்படும்? 1000 ருபாய் முதல் போட்டவர்கள் 100 ருபாய் லாபம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் கல்வி வியாபரத்திலே முதலே போடாமல் லாபம் மட்டும்தானே, லாபத்தில் குறை ஏற்பட்டால் விடுவார்களா?



என்ன மனது இருந்தால் ஏழை குழந்தைகளுக்கு கல்வி தர முடியாது என்று நீதிமன்றம் சென்றிருப்பார்கள். அதுவும் 25 சதவீதம்... மீதி 75 சதவீதம் தாரளமாக கொள்ளை அடிக்கலாமே, யார் தட்டி கேட்க முடியும், அதுவும் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற பெயரால், இவர்களால் சிறுபான்மை மக்களுக்க் நன்மை என்றால் அதுவும் கிடையாது.  ஒரு சிலர் வளரத்தான் எங்கும் எப்போதும் "சிறுபான்மை" என்ற சொல் பயன் படுது, இதை பற்றி தனியே தொடர் கட்டுரையே எழுத் முடியும். பிறந்தவுடனே ஸ்கூலில் சேர்க்கிற அவலம் நமது நாட்டில்தான் உள்ளது, ஏன்னா அப்பத்தான் நல்லா படிக்க முடியுமாம், ஆமாம் அப்படியே எல்லாரும் விஞ்ஞானிகளை உருவாக்கிறார்கள் பாருங்கள், நினைக்க நினைக்க மிகவும் எரிச்சாலத்தான் இருக்கு...

என்னுடைய எண்ணம் எல்லாம், அனைவருக்கும் சமமான இலவச கல்வியை கொடுக்க வேண்டும், ஏழை, நடுத்தர வகுப்பு, பணக்காரன் என்ற பாகுபாடு கல்வியில் இருக்கவே கூடாது,  எல்லாரும் சமம் என்ற நிலை கல்வியில் இருந்துதான் வரவேண்டும். அரசாங்கத்தின் கேவலமான நிலைப்பாடால், கொள்ளை அடிப்பவர்கள்தான் அதிகமாகி கொண்டே செல்கின்றனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்க்க கூடியது.

Apr 10, 2012

கள்ளகாதலும் உயிர் பறிப்பும்

தினமும் ஏதாவது ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு கொண்டே போகிறது, அதுவும் கள்ளகாதலினால் ஏற்படும் உயிர் பறிப்பும் அதிகம் அதிகம்… இன்று தட்ஸ்தமிழ் படிக்கும் போது மிகவும் கொடுமையான சம்பவமாக இது உள்ளது, அதாவது கள்ளக்காதலாக்காக பெற்ற குழந்தைகளைக் கொன்றதுதான்… படிக்கும்போதே மிகவும் வலித்தது…

என்ன ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேமோ…


அதை படிக்க

http://tamil.oneindia.in/news/2012/04/10/tamilnadu-illicit-affair-auto-driver-killed-his-kids-aid0128.html


என்னுடையே கேள்வியெல்லாம், எதுக்கு குழந்தையை கொல்லனும்? அவருடைய கள்ளக்காதலியுடன் போய் தொலைய வேண்டியதுதானே… அந்த கள்ளக்காதலி கொல்ல சொன்னாராம் இவரும் கொன்னுட்டாறம்… ஒரு பெண் எப்படி இப்படியெல்லாம் குழந்தையை கொல்ல சொல்ல முடியும்? இதில் மிகவும் பாவம் அந்த குழந்தைகளின் தாய்தான்.. மிகவும் பரிதாபம்….


கள்ளகாதல் மிகவும் ஒரு கொடுரமாக பரவிக்கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு தீர்வு கண்டிப்பா வேண்டும்.


சரி, குழந்தைகளை கொன்றவருக்கு நமது நாட்டின் அரசியல் சட்டபடி என்னதான் தண்டனை கொடுப்பார்கள்? இப்படி பட்ட ஆட்டகளையெல்லாம் என்னதான் செய்யலாம்?

Nov 29, 2010

கண்டிப்பாக செய்ய வேண்டிய சாலைவிதி

சாலைவிதி..., மாற்றம் செய்யவேண்டியது எவ்வளவோ உள்ளது, இன்னும் இதேபோல் தொடர்ந்து கொண்டிருந்தால் பெருநகரத்தில் இருப்பவர்கள் கடுமையான விரக்தி உள்ளாவர்கள்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் அதிகமாகி கொண்டே போகிறது, இப்போது கார் வாங்குவது என்பது ஒரு அவசியம் ஆகிவிட்டது, வரும்காலங்களின் கார் என்பது கட்டாயமாகிவிடும். ஆனால் சாலை வசதி மட்டும் மாறவே மாறாது, அப்படியே இருக்கும்... அதாவது போக்குவரத்து நெரிசல் தகுந்தார்போல் சாலையை மாற்ற மாட்டார்கள்... என்னதான் மெட்ரோ ரயில் விட்டாலும் கொஞ்ச நாளிலே போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்து விடும், இன்னும் 1900 போட்ட சட்ட திட்டங்களையோ கொண்டிருந்தால் வருங்காலத்தில் கண்டிப்பாக வருத்த படுவோம்.

சமிபத்தில் ஒரு சட்டம் போட்டிருக்கிறார்கள், என்னவென்றால் இ-சாலன் முறை, இ-சாலன் முறை வந்தால் மட்டும் திருந்திட போகிறார்களா என்ன? அவர் தொடர்ந்து தவறு செய்து கொண்டிருந்தால் அவரின் அத்யாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை தடை செய்ய வேண்டும், அப்போது ஓரளவுக்கு தவறுகள் மட்டுபடும்.

சென்னை போன்ற பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் தனிமனித ஒழுக்கமின்மையாகும், எல்லாருக்கும் எங்கும் அவசரம்தான். ஒரு பகுதி ஒரு வழி சாலையாக இருந்தால் அதில்தான் தவறாக போக முயற்சிப்பார்கள், இதில் ஆட்டோ ஓட்டுனர் ஆகட்டும் அல்லது இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் ஆகட்டும்.... அனைவரும் தவறிலைப்பதில் குறைந்தவர்கள் அல்ல.

நான் பார்த்த வரை, சென்னையின் மற்றும் அனைத்து மாநகரங்களின் போக்குவரத்துக்கு மிக தேவையான ஒன்று, மஞ்சள் பெட்டி பகுதி (Yellow Box System) கொண்டுவருவதாகும். இது எதற்கு என்றால் நான்கு ரோடு சந்திக்கும் பகுதி என்றால் நேராக செல்பர்கள் குறுக்காக செல்பவர்களுக்கு தோதாக நிற்க வேண்டும், அதாவது மஞ்சள் ஒளிந்தவுடன் நிற்க ஆரபித்து, சிவப்பு ஒளிரும் போது நின்றுவிட வேண்டும் அதுதான் முறை, ஆனால் என்ன நடக்கிறது என்றால் ஒருவர் சீக்கிறமாக சென்றுவிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் செல்லும் வழியை அடைத்து கொள்வார்கள்.


மஞ்சள் பெட்டி என்பது நடுவில் போடப்படும் ஒரு மஞ்சள் கட்டம் ஆகும், எதற்கு என்றால் அந்த கட்டத்திற்குள் எந்த வாகனமும் அதிக நேரம் நிற்க கூடாது.

கிழே இருப்பதுதான் மஞ்சள் பெட்டி


இப்ப நான் நேரே செல்லவேண்டும் என்றால் பச்சை விளக்கு எரிந்தால் மேலும் மஞ்சள் கட்டத்திற்குள் சிக்காமலும் இருக்க வேண்டும்; மஞ்சள் கட்டத்திற்குள் சிக்க கூடாது என்றால் நான் போக வேண்டிய அளவு இடம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். கீழே உள்ள படத்தை பாருங்கள் 1ம் எண் வண்டி போவதற்கு பச்சை விளக்கு எரிந்தும் நிற்கிறது, ஏனேன்றால் 3ம் எண் வண்டி சென்றால்தான் அதனால் மஞ்சள் பெட்டியில் மாட்டாமல் செல்லமுடியும்; அதே நேரத்தில் 2ம் எண் வண்டி சென்று கொண்டியிருக்கிறது ஏனெறால் அந்த வண்டி எப்படியும் மஞ்சள் பெட்டி பகுதியில் நிற்க போவதில்லை. மஞ்சள் பெட்டியில் நின்றால் என்ன நடக்கும் மற்றவர்களின் (குறுக்காக செல்பவர்களின்) வழியை மறைத்து கொண்டிருப்பதினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.


இந்த முறை அனைத்து வெளிநாடுகளில் உள்ளது, நமது நாட்டில் இன்னும் வரவில்லை, வந்தால் மிகவும் நல்லது; மஞ்சள் பெட்டில் ஒரு குறிப்பிட்ட நேர அளவை தாண்டி நின்றால் போக்குவரத்து விதிகளுக்கு மாறு செய்தகாக நம்மீது ஃபைன் போடுவார்கள். அதை தொடர்து செய்தால் நமது ஓட்டுனர் உரிமம் கூட ரத்து செய்யபடலாம்.

எவ்வளவு நல்ல விசயம் அல்லவா? யாராவது இதை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து கொண்டு போங்களேன்.

Aug 13, 2010

சாவு கண்டிப்பா உண்டு உங்க வீட்டில்

எனது நண்பருக்கு இப்படி ஒரு SMS வந்தது, வந்ததில் இருந்து பாவம் மனிதன் மிகவும் கவலையா இருக்கார். இப்படிமா SMS அனுப்புவாங்க? கொஞ்சமாவது அறிவு வேண்டாம், அந்த நம்பருக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை. ஏதாவது ஒரு SMS அனுப்ப வேண்டியது அதை எல்லாருக்கும் பார்வோர்டு செய்ய சொல்லுவது இல்லையென்றால் ஏதாவது தீமை ஏற்படும் என்று பயமுறுத்துவது. இப்படி பட்ட ஆசாமிகளை என்ன செய்தால் தகும்?



Today is Friday and 13th, Say GOD SAVE ME & forward this to 10 people else death will definitely occur in your family. No stupid comedy please send back this sms.




வர வர மொபயிலில் SMS தொல்லை அதிகமாய் விட்டது, எல்லாத்துக்கும் SMS அனுப்ப ஆரம்புச்சுட்டாங்க. வீடு லோன் இப்ப அதிகமா வருது... எப்படி இதெல்லாம் தடை செய்றதுன்னு தெரியலை, மெயிலில் இருப்பதுபோல் ஸ்பாம் இருந்தால் நல்லாருக்கும் :)

சரி நார்மலான SMS வந்தா உடனே அழித்திடலாம், ஆனால் எனது நண்பருக்கு வந்தது போல் இருந்தால். எதுக்கு இப்படி கிருக்கு ஆட்கள் இருக்க வேண்டும்? "இதை செய் இல்லாட்டா சாவு கண்டிப்பா உண்டு" என்ன ஒரு பயமுறுத்தல், இவர்களை போலீஸில் ரிப்போர்ட் செய்ய யாராவது வழி சொல்லுங்களேன் பிளீஸ்.

Jun 16, 2010

ரயில்வேயில் நடக்கும் கொள்ளை

சிறுவயதில் அனைவருக்கும் இருக்கும் கனவுதான், அதாவது ரயிலில் பயணம் செய்வது, ரயில் பயணம் செய்வது மட்டுமல்ல, அதை பார்ப்பது கூட மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாகவே உள்ளது. எனக்கு ரயில் பயணம் செய்வது அவ்வளவு சந்தோசம், அதனுடைய கூஊஊ என்று கூவிக்கொண்டு போகும் சப்தமும், பர்த் கிடைத்து படுக்கும் போது அதன் தாலாட்டு போல் அமைவது... சே, இவை எல்லாம் அனுபவித்தவர்களுக்குதான்...

நடுத்தரவர்க்கம் மட்டுமல்லாது அனைவரும் விரும்பி பயணம் செய்வதும், விரும்பவதும் ரயிலில்தான், ஏனென்றால் அதனின் வேகமும், அனைத்து வசதிகளும்... பயணம் செய்து கொண்டிருக்கும் இப்படி கிடைக்கும் வசதிகள்தான் அனைவரையும் ரயிலை மிகவும் விரும்ப வைக்கின்றன... மிக முக்கியமாக தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல் விலையில் உயராமல் இருக்கும் ரயில் கட்டணத்தின் விலைதான் நடுத்தரவர்க்கம் மற்றும் ஏழை மக்கள் மிக விரும்ப ஒரு காரணம் ஆகும்!



சமிபகாலமாக, ரயிலில் பயணம் செய்வது கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, அதுவும் மிகவும் கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, ஜெனரல் கம்பார்ட்மெண்ட் எனப்படும் பொதுப்பெட்டி ஒரு ரயிலில் 4 தான் அதிக பட்சமாக இருக்கிறது, அந்த 4 பெட்டிகளிலும் அதிகபட்சமாக 300 நபர்கள் முதல் 350 நபர்கள் வரை இருக்கலாம், ஆனால் இப்போது என்ன நடக்கிறது ஒரு பெட்டியிலே 400 நபர்கள் வரை இருக்கிறார்கள்... இதெல்லாம் சாதாரன நாட்களில்தான் ஏதாவது திருவிழா நேரம் என்றால் தொலைந்தோம்... படியில் தொங்குவதற்கு கூட இடம் இருக்காது, அவ்வளவு கூட்டமாக இருக்கும்.



இரண்டாம் படுக்கை வசதி என்பது 3 மாதங்களுக்கு முன்பு புக் செய்தால் மட்டுமே நன்றாய் படுத்து கொண்டு போகலாம், இல்லையென்றால் கொடுமைதான். புக்கிங் ஏஜெண்ட் எப்பொழுது நியமித்தார்களோ, அப்போது ரிசர்வரேசன் என்பது அதிக பணம் கொடுப்பவர்களுக்கு என்பதாகிவிட்டது... ஒரு வாரத்தில் எங்காவது பயணம் போகவேண்டியது இருந்து, ரயில் போய் ரிசர்வ் செய்து விடுங்கள் பார்ப்போம், கண்டிப்பா கிடைக்காது, அதே நேரத்தில் ஏதாவது ஒரு ரயில் புக்கிங் ஏஜெண்ட் பார்த்து கூட 200 அல்லது அதனின் கூடவோ கொடுத்தால் நீங்கள் கண்டிப்பாக பயணம் செய்வது உறுதி. எப்படி அவர்களுக்கு இதனை கொடுக்க முடிகிறது, எல்லாம் ரயில்வேயில் தவறுகள்தான்... ரிசர்வ் செய்யும் ஒருவர், ஒரே நேரத்தில் 6 பேர்களை ரிசர்வ் செய்யலாம், ஆனால் ஒருவர் மட்டும் ஐடி கார்ட் காமித்தால் போதும், புக்கிங் ஏஜெண்ட் ஏதாவது பெயரிலும் வயசிலும் டிக்கட்டை புக் செய்து விட்டு மற்றவர்களுக்கு வழி இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

உங்களுக்கு மிகவும் அவசரமாய் போக வேண்டுமா???
தட்கல் கூட கிடைக்க வில்லையா???
புக்கிங் ஏஜெண்ட் கூட உதவ வில்லையா???

கவலை வேண்டாம், சாதாரன டிக்கட் எடுத்து கொண்டு ரிசர்வ் கம்பார்ட்மண்டில் ஏறி டிடியை (டிக்கட் பரிசோதிப்பர்வரை) கொஞ்சம் கவனித்தால் போதும்... எப்படிதான் இவர்களுக்கு மட்டும் சீட் இருக்குமோ? பணம் தின்னும் கழுகாக மாறி வருகிறார்கள். ஒரு சிலபேர் நல்லவர்களாய் இருக்கலாம், ஆனால் மிக அதிகமானோர் கவனிப்புக்கு மயங்குறவர்களே... பொதுவாக RAC 1 என்று இருந்த்தால் ஏதாவது ஒரு டிக்கட் கேன்சல் ஆகிவிட்டது என்றால் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும், அதுதான் நியாயமும்.. ஆனால் TTE அப்ப்டி செய்வதில்லை, பணம் இருக்கா, கண்டிப்பா சீட் கிடைக்கும், இல்லையா சீட்ல இருக்கும் முனை கூட கிடைக்காது.

இப்படி பட்ட கொள்ளைகள் ரயில்வேயில் நடந்து வருகிறது... யாரும் இதற்கு எதிராக எந்த விதமான ஆக்சனும் எடுக்கவில்லை.


பல நாடுகளில் வேலையை செய்ய வேண்டாம் என்றால்தான் லஞ்சம்
ஆனால், இந்தியாவில்தான் வேலையை செய்ய லஞ்சம்.

இந்தியன் படத்தில் வரும் வசனம்

Apr 30, 2010

நீக்க வேண்டுமா ஆட்டோ பர்மிட்டுக்கு தடையை?

ஆட்டோ பர்மிட்டுக்கு தடையை ரத்து செய்து அரசு செய்தி வெளியுட்டுள்ளது, இதற்கான காரணம் "சென்னையைவிட சிறிய நகரங்களான பெங்களூருவில் 78 ஆயிரம் ஆட்டோக்களும், ஐதராபாத்தில் 64 ஆயிரம் ஆட்டோக்களும் ஓடுகின்றனவாம்" சென்னையில் 52 ஆயிரம் ஆட்டோவே உள்ளனவாம்.

அதனால், சென்னையில் கூடுதல் ஆட்டோ ரிக்ஷாக்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, ஆட்டோக்கள் பதிவு செய்யப்படுவதற்கான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ரிக்ஷா பெர்மிட்டுகள் தகுதி அடிப்படையில் விண்ணப்பம் செய்வோருக்கு வழங்கப்படும்.

நன்றி தட்ஸ்தமிழ்


முதலில் நன்றாய் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதையும் கற்று கொடுத்து விட்டு பர்மிட்டுக்கு பர்மிட் கொடுத்திருக்கலாம். இரண்டாவது பயணிகளிடம் எப்படி பேசுவது என்பதையும் சொல்லி கொடுத்திற்கலாம், மூன்றாவது நியாயமான முறையில் பணம் வாங்குவது என்பதை சொல்லி கொடுக்கலாம்... இப்படி பல உள்ளன...



பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஆட்டோக்களில் சவாரி செய்திருப்பவர்களிடம் சென்னையில் ஆட்டோ பயணம் செய்ய சொல்லுங்கள், ஒருவர் திருப்தியாக பயணம் செய்தால் அப்பறம் தடையை நீக்கலாம்.

சென்னையில் இருப்பவர்களிடம் கேளுங்கள், யாருமே ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாகவே பேசவே மாட்டார்கள், விதிவிலக்குலாக சில ஆட்டோ டிரைவர் இருக்கலாம்... ஆனாலும் பெருபான்மை என்னவோ அதுதானே உண்மை. பொதுவா நான் எங்கு போனாலும் பைக், அல்லது ரயிலில் போயிவிடுவேன், சில நேரங்களில் பஸ் பயணம் செல்ல நேரலாம்... மற்றபடி என்ன அவசரம் என்றாலும் ஆட்டோ பயணத்தை விரும்பவதில்லை... அவர்கள் ஏறும் போது ஒரு வாடகையும் இறங்கும் போதும் ஒன்றாகவும் இருக்கும், கண்டிப்பா மீட்டர் போடவே மாட்டார்கள், இதுவரை யாருமே நியாயமான வாடகை கேட்டதே இல்லை, குறைந்தது 1 கிமீ போகவேண்டும் என்றாலும் 100 ரூபாயவது கேட்பார்கள், நமக்கு இடம் தெரியும் பக்கதில்தான் என்றாலும் அங்க சுத்தி இங்க சுத்தி போகனும் என்பார்கள், சென்னைக்கு புதியவர்கள் என்றால் ஆட்டோ டிரைவர்கள் பாடு கொண்டாட்டம்தான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறந்து விடுவார்கள்.

ஓட்டுவது மிக மிக வேகமாக இருக்கும், சின்ன சந்தில் ஒரு மனிதன் நுழைய முடியுமா என்று இருப்பதில் கூட ஆட்டோவை நுழைக்க முயற்சி செய்வார்கள் உள்ளே இருக்கும் பயணி உயிரை கையில் பிடித்து, நாம போக வேண்டிய இடம் சீக்கிறமா வர கூடாதா என்று வேண்டி கொண்டிருப்பார்கள்.

சாலைகளில் எந்த விதமான விதிகளையும் மதிக்காமல் ஓட்டுவது ஆட்டோ டிரைவர்களாகத்தான் இருக்கும், ஒரு ஆட்டோவில் பேசிவிட்டு அடுத்த ஆட்டோவிற்கு சென்றால், முதலில் பேசிய ஆட்டோ டிரைவர் "... போற மூஞ்சிய பாரு, ந்தா 20க்கு போகனுமா, த்தா...." என்று மற்ற ஆட்டோ டிரைவருடன் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். இப்படி ஒன்று இல்லை... பல கூறலாம்...

இருந்தாலும் சில பேர் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள், சமிபத்தில் எனது நண்பர் தனது மனைவியை கூட்டி கொண்டு சென்னை வந்தார், அவருக்கு ஒரு மகன், மனைவிக்கு உடம்பு சரியில்லை.. ஒரு ஆட்டோவில்தான் சென்னை முழுக்க பயணம் செய்தார்... ஆட்டோ டிரைவர்தான் கூட இருந்து அனைத்து விதமான உதவிகளையும் செய்தார், அவரின் மகனை முழுவதுமாக பார்த்து கொண்டது ஆட்டோ டிரைவர்தான், கடைசியில் பணம் கொடுக்க போகும் போது, பரவாயில்லை சார், முதல்ல அவங்க சரி ஆகட்டும் என்று பணத்தை மறுத்தார்... இப்படியும் சிலபேர்....



ஆனாலும், அரசாங்கம் ஆட்டோ பர்மிட்டுக்கு இருந்த தடையை நீங்கவதற்கு முன்பு அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் சில கட்டுபாடுகளை விதித்திருக்கலாம்.

  • மீட்டர் பொருத்துவது
  • கணிவாய் பேசுவது
  • சாலைவிதிகளை மதிப்பது

Mar 8, 2010

மகளீர் தினமும் 33% இடஒதுக்கீடும்

இன்று மத்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யபடும் மசோதாவில் ஒன்று, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகும். ஆதரளிப்பவர்கள் அதிகம் என்பதால் இந்த இடஒதிக்கீடு கண்டிப்பக நிறைவேறிவிடும்.

காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட், திமுக, அதிமுக, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் இதை ஆதரிப்பதால் நிறைவேற மிகவும் வாய்ப்புகள் உள்ளன, எதிர்க்கும் கட்சிகள் மிகவும் குறைவு சிவசேனா, சாமஜ்வாடி, ராஸ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சாமஜ் போன்றவை, இவர்களின் பங்களிப்பு மக்களவையுளும் மாநிலங்களவையுளும் மிகவும் குறைவு, ஆதலால் மிகப்பெரிய சண்டை சச்சரவு இல்லாமலும், ஒரு பரபரப்பற்ற அல்லது வழக்கமான மசோதாவக இது நிறைவேறிவிடும்.




எனது கேள்வி எல்லாம், இந்த இடஒதுக்கீடு தேவைதான என்பதுதான்? ஏன் கொடுக்கவேண்டும் 33 சதவீத ஒதுக்கீடு? எதற்காக இந்த இட ஒதுக்கீடு? பொதுவாக இடஒதுக்கீட்டு ஆதரளிப்பவர்கள் கூறுவது, பின்தங்கி உள்ளவர்கள் முன்னேறுவதற்காக... காலங்காலமாக கூறுவது முன்னெறுவதற்காக என்றுதான், இந்த மசோதாவிலும் அதே பல்லவிதான், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், நாட்டில் சரிபாதி பெண்கள்தான் ஆனால் 10% பெணகளுடைய ஆதிக்கம் இல்லை அரசியலில்... இப்படி சொல்லி புலம்புவார்கள்.



இன்று அரசியல் ஆகட்டும் வேறு பிரபலத் துறையாகட்டும் ஆண்களுக்கு மிகச்சமமாகவே பெண்கள் வந்து கொண்டிருக்கின்றனர், எந்த துறையில் இப்போது பெண்கள் இல்லை? எல்லாவிதமான வேலைகளிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டின் முதன் குடிமகள் ஒரு பெண்தானே. சோனியாவகட்டும், ஜெயலலிதாவகட்டும் எந்த இடஒதுக்கீட்டை பெற்று இந்த இடத்தை அடைந்தார்கள்? அரசியலில் மட்டும் அல்ல. நான் இதை எழுதுவதால் பெண்களுக்கு எதிரானவன் என்று எண்ணவேண்டாம், பொதுவாகவே இடஒதுக்கீடு என்பது நல்ல தகுதி உள்ளவனை ஒதுக்கிவிட்டு தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கபடுவதாகும், காலங்காலமாய் ஜாதியாலும் மதத்தாலும் பிரித்தவர்கள் இப்போது பால் முறையிலும் வந்துவிட்டார்கள்.

பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நன்றாய் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் நிலையும் வேண்டும், இப்போது அரசியலில் ஈடுபடுபவர்கள் அந்த அஞ்சா நெஞ்சு கொண்டவர்களாகவே வந்துள்ளார்கள்,  அவர்கள் ஜஸ்ட் லைக் தட் என்று வரவில்லை... அதாவது இடஒதுக்கீடு முறையை பெற்று வருபவர்களிடம் இந்த தகுதியை எதிர்பார்க்க முடியாது... பஞ்சாயத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கீடு கொண்டுவந்தார்கள், என்ன ஆயிற்று? ஜெயிப்பவர்கள் பெண்களாக இருக்கும், கையெழுத்து போடுவதற்காக பஞ்சாயத்து ஆபிஸ்க்கு வருபர்களாக உள்ளனர், அதே நிலமைதான் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஏற்படவேண்டுமா?

சரி, மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் தீமை என்ன??? அந்த பகுதியில் நல்லது செய்து கொண்டிருக்கும் ஒரு ஆண், தேர்தலில் போட்டியிட்டு இன்னும் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று நினைத்தால், அந்த தொகுதி பெண்களுக்கு உண்டான தொகுதி என்று அறிவிப்பு வந்தால், அவரால் கிடைக்க போகும் நன்மை இல்லாமல் போகலாம்.

மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் நன்மை என்ன??? பல அட்டூழியங்கள் செய்து வரும் ஒருவர், தமது தொகுதி பெண்களுக்கு என்று மாற்றியவுடன், தமது துனைவியை வெற்றிபெற (அதான் இப்ப காசு போதுமே) வைத்து, மேலும் அட்டூழியம் செய்யலாம்.

வாழ்க ஜனநாயகமும் இடஒதுக்கீடும்!

Feb 11, 2010

இட ஒதுக்கீடும் இடமில்லா ஒதுக்கீடும்

சமிபத்தில் ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு கொடுக்கபட்ட இட ஒதுக்கீட்டை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது... இதற்காக பெரும் பிரச்சனை ஆந்திராவில் நடந்து கொண்டுள்ளது... தேவையில்லாத ஒன்று, அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களால் நமது நாடு இன்னும் இப்படியே இருக்கிறது.

எனது எண்ணம் எல்லாம்... இட ஒதுக்கீடே தேவையா என்பதை பற்றிதான், இது மதம் சார்ந்து சொல்ல வில்லை... மொத்தமாக நமது நாட்டில் மற்றவர்களுக்கு கொடுக்கபடும் இட ஒதுக்கீடு பற்றிதான்...

ஆரம்ப கல்வியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த ஒதுக்கீடு இறுதி வரை தொடந்தே கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் ஏழையாக இருந்தவர்களுக்கு எந்தவிதமான சலுகைகள் கிடைக்கபெறாத மக்களுக்கு கொடுக்கபட்டது இட ஒதுக்கீடு, பெற்றவர்கள் மிகவும் நன்றாய் இருக்க, மற்றவர்கள் இன்றும் இடமில்லாமல் அவதியுருகிறார்கள்.



ஏழை என்பது எல்லா ஜாதி மதத்திலும்தான் உள்ளது, ஏன் ஒருசிலருக்கு மட்டும் பாகுபாடு??? ஆரம்பத்தில் கொடுக்கபட்டது ஏதோ சரின்னால்லும், இன்னும் அதை தொடர்ந்து கொண்டிருப்பது என்ன நியாயம்? 60 வருங்களுக்கு முன்பிருந்த நிலமையா இன்றும் இருக்கிறது? மேலும் இந்த சலுகைகளை பெற்றவர்களே மேலும் மேலும் சலுகைக்காக முயல்கிறார்கள். இதில் ஏழை பணக்காரன் என்று வித்யாசம் இல்லை...

தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு கொடுப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடை நான் மனதலவில் ஒதுக்கியவன். இங்கு கொடுப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீடை யார் யாரெல்லாம் அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள், கண்டிப்பாக அவ்வசதியை பெற்றவர்களே மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள், ஏனெனில் இது மனித இயல்பு.  தமிழ்நாட்டில் பிறந்து பிரபலமாக இருக்கும் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு மூலம் அந்த பலனை அடைந்திருப்பார்களா என்றால் கண்டிப்பா இருக்காது. 

நன்கு படிப்பவன் ஒரு பள்ளியில் சீட் கிடைக்காமல், ஒன்னுமே தெரியாமல் ஜஸ்ட் இட ஒதுக்கீடு மூலம் உள் வருபவர்கள் கடைசியில் என்ன பெருசா சாதிச்சிட போறாங்க? ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்து மற்றவர்களை எரிச்சலா பேசுவதை தவிர?

அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், ஒருவருக்கு சில சலுகைகளும் மற்றவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காமல் செய்வதுமா நீதீ? இடமில்லா ஒதுக்கீடும் செய்வது ஏனோ?  அனைவரும் சமம், யாருக்கும் எந்த பாகுபாடும் கிடையாது என்று கூறும் அரசாங்கமே இப்படி இன்னும் இட ஒதுக்கீட்டை விட்டு வைத்திருப்பது கொடுமைதான், இட ஒதுக்கீடு மூலம் என்ன சரியாக சாதிக்க முடிந்தது? ஏழைகள் எண்ணிக்கையை குறைக்க முடிந்ததா? சரி ஓரளவுக்கு நன்மை இருந்தாலும், இன்னும் இது தேவையா? நமது நாட்டில் இரவு உணவு இல்லாமல் உறங்குபவர்கள் எவ்வளவோ பேர் இருக்க... ரோட்டிலும் காட்டிலும் வசிப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.. உண்மையான ஒதுக்கீடு என்றால் இவர்களுக்கு செய்யவேண்டும்... மீண்டும் மீண்டும் கொடுத்தவர்களுக்கே கொடுப்போம் என்றால் என்ன தீர்வு?

யாருக்கும் எதிலும் இட ஒதுக்கீடே தேவையில்லை, ஜாதிக்கு மதத்திற்கு என்று அனைத்து இட ஒதுக்கீட்டையும் தடைசெய்யவேண்டும்.
நன்கு படிப்பவர்களுக்கு மட்டும் கல்வியும், நன்கு வேலை பார்க்க தெரிந்தவர்களுக்கு மட்டும் வேலையும் என்று மாறவேண்டும்.

Dec 28, 2009

அதிகபட்ச தண்டனை

சமிபத்தில் நாளிதள்களில் வந்த செய்திகள்.


  • கள்ளநோட் மாற்றிய கும்பல் பிடிபட்டது
  • சீனாவில் இருந்து போலி மருந்து

முதலில் உள்ளது நமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்க கூடியது. இரண்டாவது உள்ளது மக்களின் உடல் நலத்தை சிதைக்க கூடியது. இரண்டுமே மிகக்கொடியதுதான். 

கள்ளநோட்டு மாற்றுபவர்கள் அடிக்கடி பிடிபடுவதும், அவர்களை பற்றிய செய்திகள் நாளிதள்களில் வெளியிடப்படுவதும் நடந்து கொண்டே உள்ளன, பிடிபடுபவர்கள் என்ன் ஆகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு பதில் எப்போதும் போல் வெறுமையாகவே உள்ளது... பிடிபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும், மேலும் இதனின் வேர் எங்குள்ளது என்று கண்டுபிடித்து வேரோடு அழிக்கவேண்டும். ஒவ்வொரு தடவை பிடிபடுபவர்களை போட்டோ எடுத்து நாளிதளில் போடுவதும், வேறு ஒரு பரபரப்பான செய்தி வந்தவுடன் அதை மறப்பது என்று இல்லாமல் அதனின் ஃபாலேஅப் செய்தியை வெளியிட்டு, நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவர்களை வேரோடு சாய்க்கவேண்டும். 




இதையிம் விட மிகவும் கொடியவர்கள் போலி மருந்து இறக்குமதி செய்பவர்கள். மனசாட்சியை பணத்திற்காக அடமான வைத்து செயல்படுவர்கள். சீனாவில் இறக்குமதி செய்யபடும் அதிகாகமான பொருட்கள் நமது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை, இதை மருத்துவர்களே ஒப்புகொண்டுள்ளுனர், நமது நாட்டில் விற்கபடும் மிக அதிகமான பொருட்களின் இடத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபடும் பொருட்கள் பிடித்துள்ளன, எங்கு நோக்கினும் "Made in China" என்ற முத்திரையுடன் பொருட்கள் உள்ளன. 

இப்படி மக்களை அழிப்பது போதாது, இந்திய மக்கள் அதிகமானோர் நோயளிகள் அவர்கள் அதிகம் நாடுவது மருந்துகளைதான், அதை போலியாக தயாரித்து மொத்தமாக இந்திய மக்களை ஒழித்து விடலாம் என்று சீனா என்னுகிறது போல, ஏனெனில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், வளர்ந்துவிட்டால் ஏதாவது ஒன்றுதான் வல்லரசாக இருக்க முடியும், இப்போதே இந்திய மக்களை ஏதாவது விதத்தில் அழித்துவிட்டால் அல்லது நோய்வாய் படுத்திவிட்டால் சீனாவிற்கு எதிரிகளே இருக்கபோவதில்லை, ஆதலால் கூட இப்படி செய்யலாம். 

நமது நாட்டு அரசியல்வாதிகள் இதை கண்டும் எதை பற்றியும் கவலைபடாமல் இருப்பது, சீனாவை கண்டு அஞ்சுகிறார்களா அல்லது வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. 

எந்த பத்திரிக்கையிம் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவில்லை, அவர்களை சொல்லியும் குற்றமில்லை, சகீலா காதல்தான் அவர்களுக்கு முக்கியம். அல்லது செக்ஸ் புகார்ல எந்த சாமியாருடா சிக்குவான், அந்தரங்க படத்தை வெளியிடலாம் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்.

போலி மருந்துக்கு சீனாவும், போலி நோட்டுக்கு பாகிஸ்தானும்தான் காரணம் என்றாலும் நமது ஆட்களில் உள்ள ஆடுகளால்தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றது, பிடிபடும் ஆட்களும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் அப்போதுதான்  மற்றவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும். 

Dec 21, 2009

இடைத்தேர்தல், அரசாங்கதிற்கு ஏற்படும் சுமை

சமிபத்தில் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது, திமுக அரசாங்கம் பதவி ஏற்ற நாளில் இருந்து இது 10 இடைத்தேர்தல் ஆகும்.




ஓட்டு போடுவது கட்டாய கடமை, கட்டாய கடமை என்று சொல்லி அதிககதிகமா ஓட்டு போடுவது நடந்து கொண்டுள்ளது. வரவேற்கதக்க அம்சம்தான். ஆனால் எதையிம் தொடர்ந்து செய்வதினால் ஒரு தொய்வு ஏற்படுவதை தடுக்க முடியாது. என்ன எழவுஓட்டுடா... எவனுக்கு போட்டாலும் எதுவும் ஆகபோறதில்லை, என்னதுக்கு அடிக்கடி ஓட்டு போடனும் என்று மக்களுக்கு தோன்றதவரைதான் தில்லுமுல்லு ஜெயிக்கும்.

இடைத்தேர்தல் நடப்பதினால் அரசாங்கதிற்கு பல்வேறு சுமைகள்.  இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் ஆண்டுகொண்டுருக்கும் அரசாங்கம் வெற்றி பெற்று ஆகவேண்டிய நிர்பந்தம், ஏவெனில் இடைத்தேர்தலில் மக்கள் வெற்றி பெற வைத்தால்தான் அந்த அரசாங்கதிற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக எண்ணம். இதற்காக எந்த எல்லை வரை செல்ல ஆண்டு கொண்டிருக்கும் தயங்குவதில்லை.

ஏற்கனவே நமது அரசாங்கம் வாங்கிய கடனுக்காக வட்டியே கோடிக்கணக்கில் கட்டி வருகிறது, இதில் இடைத்தேர்தல் நடப்பதினால் ஏற்படும் பணச்சுமை மிகப்பெரிய சுமை. இப்போது தேர்ந்து எடுக்க போகும் MLA ஒன்றும் ஆகபோவதில்லை, பாவம் பதவிகாலம் வெறும் 1 1/2 வருடம் தான். இந்த காலத்தில் அவர் மக்களுக்கு நல்லது செய்யபார்ப்பாரா அல்லது இழந்த பணத்தை மீட்க நினைப்பாரா?

ஒவ்வொரு இடைத்தேர்தலின் போதும் பணம்தான் அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்கிறது.

இடைத்தேர்தலினால் அரசாங்கதிற்கு ஏற்படும் செலவு எவ்வளவு என்று தனியாக கணக்கு வைத்து கொள்ளவேண்டும். அவ்வளவு செலவழிகிறது.

இதற்கு மாற்று வழி கண்டுபிடித்தால் என்ன?

ஏன் இடைத்தேர்தல் நடத்தவேண்டும்?

ஒரு தொகுதில் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவர் ஆவர், அவரின் இறப்போ அல்லது பதவியிழப்போ அங்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுத்துவிடும். அவ்வாறு இல்லாமல் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவராகவும் இரண்டாம் நிலையில் வாங்கு வாங்குபவரையிம் மாற்றாளாக (substitute) வைத்து கொள்ளவேண்டும்.  அப்படி இருக்கும் பட்சத்தில் முதலில் இருப்பவர் பதவி இழப்பு ஏற்பட்டால் இரண்டாம் நிலையில் உள்ளவர் அப்பொறுப்பை எடுக்கலாம். இதன் மூலம் அரசாங்கதிற்கு ஏற்படும் சுமையிம் ஆண்டு கொண்டுப்பவர்கள் ஜெயித்தால்தான் ஆச்சு என்ற தன்மையும் மாறும்.

எவ்வளவு காலத்திற்கு பழையதை வைத்து அழுது கொண்டுருப்பது, ஒரு மாற்றம் தான் வரட்டுமே...

Nov 25, 2009

லிபரான்: அரசியல்வாதிகளின் பொய்முகம்

பலவருடங்களையும், அரசாங்கத்தின் கஜானவையும் சேதப்படுத்தி வந்திருக்கும் லிபரான் கமிஷன் அறிக்கை, என்ன முடிவுகளை கொண்டுவந்திருக்கிறது என்றால்... பெரிய ஒரு வெற்றிடம்தான் மிச்சம்.




எதற்காக நாடாளுமன்றத்தில் இதை சமர்க்கப்பட வேண்டும்? இதை சமர்பித்த அரசாங்கம் யார் மீதும் குற்றம்யில்லை, சூழ்நிலையால் குற்றவாளியாக ஆக்கபட்டுள்ளனர் எனும் அர்த்ததில் சமர்பித்துள்ளது. யார் மீதும் குற்றம்யில்லை என்றால் எதற்கு ஒரு கமிஷன், எதற்கு இவ்வளவு நாட்கள்? ஏன் நமது வரிப்பணம் இவ்வளவு வீணடிக்கபட்டது? அதை விட முக்கியமானது இக்கமிஷன் கூறியிருக்கும் எவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை இல்லையாம். நடவடிகை எடுக்க வில்லை என்றால் இதை சமர்பிக்கனும்? இக்கமிஷனே யார் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பரிந்துரைக்கவில்லை.

லிபரான் கமிஷன், மிகப்பெரிய உண்மையை மறைந்த்துள்ளது, அது காங்கிரஸுக்கு எந்த விததிலும் பாபர்மசூதி இடிப்பில் தொடர்பில்லை என்பதை... இந்த உண்மையை கண்டுபிடித்தது லிபரான் கமிஷனா, அல்லது அறிக்கையை தாக்கல் செய்த அரசாங்கமா தெரியவில்லை? பாபர்மசூதி இடிக்கபட போகிறது என்று அன்று ஆண்டுகொண்டிருந்த நரசிம்மராவுக்கு எதுவுமே தெரியாதாம், அவரும் காலையில் பேப்பர் பார்த்துதான் இச்செய்தியை தெரிந்து கொண்டாராம், இதை நான் சொல்லவில்லை லிபரான் அறிக்கை சொல்கிறது, இல்லை இல்லை தாக்கல் செய்த அரசாங்கம் கூறுகிறது. பாபர்மசூதி விவகாரத்தின் ஆணிவேர், காங்கிரஸ் கையிலே உள்ளது, அனைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தி ராமர் சிலையை அங்கு நிறுவ அனுமதியளித்தது அன்றய காங்கிரஸ் அரசாங்கதான். இடித்தது வேண்டும் என்றால் இந்துத்துவா, அதற்கு துனை நின்றது காங்கிரஸ் என்றால் மிகையில்லை. காங்கிரஸ் கட்சிய சேர்ந்த (சங்கர் சிங் வகேலா) அமைச்சரும் இதில் குற்றம் சாற்றபட்டவர் ஆவார்.

அரசியல்வாதிகளுக்கும், நான்காம் தூணுக்கும் மிக நல்ல ஒரு விசயம் மாட்டிகொண்டது. அரசியல்வாதிகள் நன்கு அடித்துகொள்வதற்கும், ஓட்டு வங்கியை பலப்படுத்தவும் லிபரான் கமிஷன் உதவபோய்கிறது. இப்பவே நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்திவுள்ளது. பாஜாக உறுப்பினர்களும் சமாஜ்வாடி உறுப்பினர்களும் தாக்கி கொள்ளாத அளவிற்கு கூச்சல் இட்டு கொண்டனர், மகராஷ்ட்ராவில் உள்ள தொடர்ச்சி போல்...  வேறு ஒரு பரபரப்பு செய்தி வரும் வரை இச்செய்தி ஓடும்.

லிபரான் கமிஷனால் குற்றவாளிகள் என்று கூறப்பட்டிருக்கும் சிலபேரில் மிகவும் பிரபலமான முகங்கள்... இவர்களை சட்டம் என்ன செய்துவிட முடியும்? பாபர்மசூதி இடிப்பிற்கு மிகவும் பெருமைபடுவதாக உமாபாரதி கூறுகிறார்,  சட்டம் அனைவருக்கும் பொதுதான் என கூறுவோம் நாம் சட்டதை பற்றி தெரியாதவரை... மிகப்பிரபலமானவர்கள் மீது சட்டம் என்ன கடமையை செய்யும்? மாபெரும் கேள்விகுறி!!! தன்னை மிதவாதி என்று கூறிகொண்ட வாஜ்பாயி, பாபர்மசூதியை இடுத்தது தவறு என்று வேறு நாடுகளுக்கு போய் ஒப்பாரிவைக்கும் அத்வானி போன்ற பொய்முகம்கள் அதிககதிகம் உள்ளன.
 
தெரிந்த முகங்கள் 
  • வாஜ்பாய் (BJP)
  • அத்வானி (BJP)
  • அசோக் சிங்கால் (VHP)
  • பால் தாக்கரே (Sivasena)
  • ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (VHP)
  • உமா பாரதி(BJP)
  • கோவிந்தாச்சார்யா (RSS)
  • கல்யாண் சிங்(BJP)
  • முரளி மனோகர் ஜோஷி(BJP)
  • பிரவீன் தொகாடியா(பஜ்ரங்தள்)
  • வினய் கத்யார்(RSS)
மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது,  பெரிய பொறுப்பில் இருக்கு அரசு அதிகாரிகளும் நேரம் கிடைத்தால் கொடிய முகத்தை காட்ட தயங்கமாட்டர்கள் என்பதுதான். லிபரான் கமிஷனால் கூறப்பட்டிருக்கும் மிகக்குறைந்தவர்களின் எண்ணிக்கை. மிகப்பெரிய தலைமை பொறுப்பில் இருந்த இவர்களின் கீழ் வேலை பார்த்த பலபேர்களை மனமாற்றம் செய்திருப்பார்கள் என்பதுதான்.   எவ்வளவு பேரிடம் விசத்தை விதைத்திருப்பார்கள்? முதலில் தண்டிக்க வேண்டியது உயர் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகளைதான். கீழ் உள்ள இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்று ரிட்டயர் ஆகி இருப்பார்கள் அல்லது ஏதாவது அரசியில் கட்சியில் சேர்ந்து தொண்டு ஆற்றுவார்கள்.

அரசு அதிகாரிகள்
  • ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)
  • அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)
  • அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)
  • டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)
  • ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)
  • கெளர் (மாவட்ட ஆணையர்)
  • திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)
  • பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)
அமைதியானவர்கள், சாதுக்கள் என்று மக்களால் நினைக்கபட்டவர்கள், எப்படி வந்தது இந்த கொலைவெறி???

சாதுக்கள் என்று அறியபட்டவர்கள்
  • சுவாமி சின்மயானந்த்
  • சுவாமி சச்சிதானந்த சாக்ஷி
  • சாத்வி ரிதாம்பரா

அறிந்தது தெரிந்தது குறைந்த அளவே. தெரிந்தவர்களையாது சட்டம் தண்டிக்கிறதா என்று பார்ப்போம்.  தர்மம் என்றாவது ஒரு நாளைக்கு வெல்லும். நம்பிக்கையுடன் 17 வருடத்தையும் எதிர்கொள்வோம்.

Sep 14, 2009

அரசு ஊழியர்களின் மட்டும் குற்றவாளிகளா?

சமிபத்தில் ஒரு முக்கியமான அதுவும் மிகவும் வரவேற்க்க கூடிய கருத்து தெரிவித்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள்.
அக்கருத்து இதுதான் (கவனிக்கவும் கருத்துதான் தீர்பு அல்ல)


ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.



ஊழல் குற்றங்களை ஒழிப்பது தொடர்பான மாநாட்டில் அவர் பேசுகையில்,


பொது மக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கி குவிக்கும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது நியாயமானதே. லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு உரிய சட்டம் கொண்டு வர வேண்டும்.


அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்து அதன் மூலம் சொத்துக்களை குவித்திருந்தால் அவரிடம் உள்ள சொத்துகளை ஜப்தி செய்யும் பொறுப்பு அம்மாநில அரசுக்கு உண்டு.


லஞ்ச-ஊழல் தடுப்பு புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்துள்ள சுமார் 9,000 வழக்குகள் நீதிமன்ற பற்றாக்குறை காரணமாக நிலுவையில் இருந்து வருகின்றன.


வழக்கு தொடருவதற்கு உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வழங்குவதன் மூலமும் தாமதத்தை தவிர்க்க முடியும்.


ஒரு அரசு அதிகாரி மீது லஞ்ச ஊழல் புகார் எழுந்தால் அதை விசாரிக்க அனுமதி வழங்குவதற்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை ஆகிறது. இப்படி காலதாமதமானால் விசாரணையை எப்படி நடத்த முடியும்?.


ஊழல் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்கு சிறப்பு வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் இத்தகைய வழக்குகளைச் சிறப்பாக நடத்த முடியும்.


மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அரசு வழக்கறிஞர்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதற்குப் பதில் குறிப்பிட்ட வழக்கறிஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் இந்த வழக்குகளை அவர்கள் திறமையாகக் கையாள முடியும்.


ஊழல் வழக்குகளில் அதிக எண்ணிக்கையில் சாட்சிகளை சேர்ப்பதில் தான் சிபிஐ கவனம் செலுத்துகிறது. அதற்குப் பதில் வலுவான ஒரு சில சாட்சிகள் மூலம் வழக்கு விசாரணையை விரைவிலேயே முடிக்க முடியும். வழக்குகளை 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை இழுக்க வேண்டிய அவசியமிருக்காது. 10 சாட்சிகளை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதை விட ஒரே ஒரு உறுதியான சாட்சியை முன்னிறுத்தி வழக்கை சிறப்பாக நடத்தலாம்.


ஊழல் வழக்கு களை விசாரிப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பிட்ட அரசு அதிகாரி லஞ்ச ஊழல் புரிகிறார் என்பதற்கு உரிய ஆதாரங்களை அளித்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வழக்கு பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.


மத்திய அரசின் முன்னோடி திட்டமான கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் பட்டியல்கள் போலியாக தயாரிக்கப்பட்டு எந்த வேலையும் செய்யாத இடைத்தரகர்கள் ஊதியம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதேபோல் அத்தியாவசிய பொருட்களை பொது மக்களுக்கு வழங்கும் பொது வினியோக திட்டத்திலும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்றார் பாலகிருஷ்ணன்.

நன்றி தட்ஸ்தமிழ்


இது மிகவும் சந்தோசமடைய கூடிய ஒன்றுதான், நமது நாட்டில் இப்படி சிந்திக்க கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது மிகவும் அதிசியம்.

சட்டம் எல்லாரும் பொதுவாகவா இருக்கிறது?  சட்டம் என்பது வாதாடும் வழக்குறைஞரின் வாத திறமையால் முடிவு செய்ய படுகிறது. பணம் உள்ளவன் சிறந்த வழக்குறைஞரை தேர்வு செய்து வழக்கில் இருந்து விடுவித்து கொள்கிறான், இல்லாதவனுக்கு கோவிந்தாதான்...  நீதியை ஒலிக்க வேண்டிய சட்டம் பணம் உள்ளவனிடம் ஒளிந்து கொள்கிறது அல்லது பணத்தால் ஒழிந்து போய்கிறது.

அரசு ஊழியர்கள் தவறு செய்தால்  உச்ச பட்ச தண்டனை, இடமாற்றம்தான், அதுவும் குறிகிய காலம்தான்... பிறகு அவர்கள் ஏதாவது (?) செய்து பழைய இடத்தை அடைந்து விடுவர்கள்.

அரசு ஊழியர்களின் தவறுக்கு அவர்களின் சொத்துக்க்ளை பறிமுதல் செய்வதை விட, அதற்கு தூண்டு கோலாக இருக்கும் அரசியல்வதிகளின் சொத்தை பறிமுதல் செய்யலாம்.  ஏனெனில் வெற்றி பெற்ற மனிதனின் பின்னால் ஒரு பெண் இருப்பது போல், தவறு செய்யும் அரசு ஊழியர்கள் தவறுக்கு பின்னால் அரசியல்வதிகள் இருக்கின்றனர்.

நமது அரசாங்கமும் அரசு ஊழியர்களின் தவறுக்கு பாதிப் பொறுப்பு எடுத்து கொள்ளலாம், ஏன் என்றால்... அரசாங்க வேலை செய்யும் ஊழியர்களில் சிலருக்கு மிக அதிக மிக மிக அதிக சம்பளமும் சிலருக்கு மிகக்குறைவன சம்பளமும் கொடுக்க படுகிறது.   இவ்விசயத்திலே அரசாங்கம் சரியான விதி முறைகளையும் அனைவருக்கும்  நல்ல சம்பளமும் வழங்கினால், ஏன் தவறு செய்ய போகிறார்கள். 

1947 எழுதிய சட்டத்தை வைத்துக்கொண்டு அழுவதை விட, காலத்திற்கு தகுந்தார் போல் சிறந்ததை உருவக்கி கொள்ளலாம்.

டிஸ்கி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குன்னு இவங்களே கேச பைல் செஞ்சு விசாரிப்பாங்களே,  அதப்போல ஊழல் செய்பவர்களுக்கு எதிரா ஏன் செய்யவில்லை? சும்மா தோனுச்சி அதான் டிஸ்கில...

Sep 4, 2009

தண்டனைகள் அதிகப்படுத்த வேண்டுமா?

இப்போதுதான் நான் சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கியது உண்மையே! – நீதிமன்றத்தில் ஒப்புதல்.   பதிவை பார்த்தேன். அதில் கூறப்பட்டு இருக்கும் ஒரு விசயம் இன்னும் நாம் 1947 ஆண்டு உருவக்கிய சட்டத்தை  வைத்து அழுது கொண்டு இருக்கிறேம் என்பது உறுதியானது.  


நம்ம ஆட்கள் ரெம்ப மறதியானவங்க அவங்களுக்காக


சின்ன பிளாஷ்பேக்
இரண்டு வருடங்களுக்கு முன்பு இளஞ்செழியன் எனும் இலங்கை தமிழர் சரவணா ஸ்டோரில் பொருட்கள் வாங்க செல்லும் போது அவரின் மீது சந்தேகப்பட்ட சரவணா ஸ்டோர் உழியர்களால் தாக்கப்பட்டார், இவ் விசயம் கூட அனைத்து பத்திரிக்கைகளும் வெளியிட்டன, நாம் கூட இதை கவனித்து, எப்பவும் போல மறந்து இருப்போம்.





 இப்போதுதான் அதுக்கு தீர்ப்பு வந்துள்ளது... நீதி என்றாவது ஒருநாள் வெல்லும் என்பது உண்மையாகி விட்டது.


ஆனால்..


ஆனால்....


ஆனால்........




அடிப்பதற்கு காரணமாக இருந்த சரவணா ஸ்டோர் உழியர்களுக்கு தல 1500 ருபாய் தண்டனை என்று தீர்ப்பு வந்துள்ளது.  நான் தவறாக எழுத வில்லை இது ஆயிரத்து ஐநூறு இது ஆயிரத்து ஐநூறு இது ஆயிரத்து ஐநூறு ருபாய்தான் மட்டும்தான். என்ன ஒரு கொடுமை... இதற்க்க பாடுபட்ட இளஞ்செழியன்  எவ்வளவு மனம் நொந்திருப்பார், எவ்வளவு  பணம்  செலவளித்திருப்பார்.  அந்த உழியர்கள் ஈஸியாக பணத்தை கட்டிவிட்டு டாடா காமித்து சென்றுருப்பார்கள்.


ஒரு தண்டனை என்பது, தப்பு செய்தவரால் கால காலத்திற்க்கும் நினைத்து பார்க்கவும், எதற்க்கக தண்டனை பெற்றாறே அதை மீண்டும்  செய்யாதிருக்கத்தான்.


இப்போது கொடுத்திருக்கும் தண்டனை கொஞ்சம் கூட போதுமானதாக இல்லை. சரவணா ஸ்டோரில் வேலை பார்ப்பவர்கள் மிகவும் ஏழ்மையனவர்கள்தான், ஆனாலும் இதை மீண்டும் அவர்கள் செய்யாதிருக்க தண்டனை தொகையை அதிப்படுத்திருக்க வேண்டும். குறைந்தது ஒருவருக்கு ஒரு லட்சம் அபராத தொகையும், அதில பாதியை சரவணா ஸ்டோர் கட்டுமாறும் செய்திருக்களாம், கூடவே சிறிது காலம் சிறைத்தண்டனையும் வழங்கிருக்கலாம்.


பஸ்சில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தால், தண்டனை தொகை எவ்வளவு தெரியுமா? 500 ருபாய் மட்டுமே.


நமது சட்டத்தில்,  கொஞ்சம் மாற்றம் செய்து,  இப்போது உள்ள விலைவாசிக்கு தகுந்தாற் போல் மாற்றம் செய்ய வேண்டும்.


மாற்றம்னு சொன்னாலே குய்யோ முய்யோன்னு குதிக்கும் கூட்டத்தை அடக்கி விட்டுடுதான் ஏதாவது செய்யனும்.




படத்திற்கு நன்றி நுகர்வோர் நலன்


குற்றம் குறைய தண்டனைகள் அதிக்ப்படுத்த வேண்டும்.