Showing posts with label அதிர்ச்சி. Show all posts
Showing posts with label அதிர்ச்சி. Show all posts

Jun 24, 2012

மஹியின் மரணம்

என்னதான் சொல்வது, யாரைத்தான் நோவது... மரணம் கண்டிப்பா வரும், எப்படி வேன்னா வரும் அப்படீன்னு நமக்கு நாமே சமாதானமா போகனுமா? இல்லை குழந்தைகளை கொல்வதற்காவே கிணறுகளை/குழிகளை வெட்டி மூடாமல் விடுகிறார்களா என்று எண்ணிக்கொள்வதா?

எல்லாரும் படிச்சுருக்கலாம், நான்கு வயது சிறுமி ஒரு குழிக்குள் விழுந்து 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கபட்டாள் என்பதை, படிக்க




இப்படி நிகழ்வுகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துவிட்டது, அடிக்கடி இப்படி குழிக்குள் குழந்தைகள் விழுவதும், இறப்பதுமாக... எதுக்காக அப்படி ஒரு குழியையை தோண்டி மூடாமல் விடனும்? இப்ப நம்ம நாட்டுல எப்படி ஆயிடுச்சுன்னா, நாம நல்ல வாழ்ந்தா மட்டும் பரவாயில்லை, எவனும் எப்படி வேன்னா போகட்டும்... எல்ல மட்டதிலும் சகிப்புதன்மை இல்லாமல் போயிடுச்சு... சுயநலம் மட்டுமே முக்கியமா இருக்கு...

கொஞ்சம் வேகமா மீட்பு நடவடக்கை இருந்திருந்தா மஹியை காப்பாதிருக்கலாமே???

சிறுமி மஹியை இழந்து தவிக்கும் அந்த பெற்றேருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.... :(

Apr 10, 2012

கள்ளகாதலும் உயிர் பறிப்பும்

தினமும் ஏதாவது ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு கொண்டே போகிறது, அதுவும் கள்ளகாதலினால் ஏற்படும் உயிர் பறிப்பும் அதிகம் அதிகம்… இன்று தட்ஸ்தமிழ் படிக்கும் போது மிகவும் கொடுமையான சம்பவமாக இது உள்ளது, அதாவது கள்ளக்காதலாக்காக பெற்ற குழந்தைகளைக் கொன்றதுதான்… படிக்கும்போதே மிகவும் வலித்தது…

என்ன ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேமோ…


அதை படிக்க

http://tamil.oneindia.in/news/2012/04/10/tamilnadu-illicit-affair-auto-driver-killed-his-kids-aid0128.html


என்னுடையே கேள்வியெல்லாம், எதுக்கு குழந்தையை கொல்லனும்? அவருடைய கள்ளக்காதலியுடன் போய் தொலைய வேண்டியதுதானே… அந்த கள்ளக்காதலி கொல்ல சொன்னாராம் இவரும் கொன்னுட்டாறம்… ஒரு பெண் எப்படி இப்படியெல்லாம் குழந்தையை கொல்ல சொல்ல முடியும்? இதில் மிகவும் பாவம் அந்த குழந்தைகளின் தாய்தான்.. மிகவும் பரிதாபம்….


கள்ளகாதல் மிகவும் ஒரு கொடுரமாக பரவிக்கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு தீர்வு கண்டிப்பா வேண்டும்.


சரி, குழந்தைகளை கொன்றவருக்கு நமது நாட்டின் அரசியல் சட்டபடி என்னதான் தண்டனை கொடுப்பார்கள்? இப்படி பட்ட ஆட்டகளையெல்லாம் என்னதான் செய்யலாம்?