Showing posts with label மழலை. Show all posts
Showing posts with label மழலை. Show all posts

Jun 24, 2012

மஹியின் மரணம்

என்னதான் சொல்வது, யாரைத்தான் நோவது... மரணம் கண்டிப்பா வரும், எப்படி வேன்னா வரும் அப்படீன்னு நமக்கு நாமே சமாதானமா போகனுமா? இல்லை குழந்தைகளை கொல்வதற்காவே கிணறுகளை/குழிகளை வெட்டி மூடாமல் விடுகிறார்களா என்று எண்ணிக்கொள்வதா?

எல்லாரும் படிச்சுருக்கலாம், நான்கு வயது சிறுமி ஒரு குழிக்குள் விழுந்து 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கபட்டாள் என்பதை, படிக்க




இப்படி நிகழ்வுகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துவிட்டது, அடிக்கடி இப்படி குழிக்குள் குழந்தைகள் விழுவதும், இறப்பதுமாக... எதுக்காக அப்படி ஒரு குழியையை தோண்டி மூடாமல் விடனும்? இப்ப நம்ம நாட்டுல எப்படி ஆயிடுச்சுன்னா, நாம நல்ல வாழ்ந்தா மட்டும் பரவாயில்லை, எவனும் எப்படி வேன்னா போகட்டும்... எல்ல மட்டதிலும் சகிப்புதன்மை இல்லாமல் போயிடுச்சு... சுயநலம் மட்டுமே முக்கியமா இருக்கு...

கொஞ்சம் வேகமா மீட்பு நடவடக்கை இருந்திருந்தா மஹியை காப்பாதிருக்கலாமே???

சிறுமி மஹியை இழந்து தவிக்கும் அந்த பெற்றேருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.... :(

Sep 17, 2009

மழலைச் சொல் கேளாதவர்

இப்பதிவு நான் எழதுவதற்கு காரணமே எனது நண்பன்தான்.


அவனேடு நான் சொன்னவைதான் இங்கு உங்களுடனும் பகிர்ந்துகொள்ளனும்னு தோனுச்சு அதான் "மழலைச் சொல் கேளாதவர்", அப்படி என்ன அட்வைஸ் மழையா பொழியப்போறான்னு நென்ச்சு டெர்ரர் ஆகாதீங்க தெரிச்சு ஓடாதீங்க


பதிப்பின் தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சமாவது கெஸ் பண்ணீருப்பீங்க...


அவசரப்படாதீங்க! பொறுமை பொறுமை... :)


நீங்க நினைக்கிறது கிடையாது.. இது டோட்டல் வேற..


நான் பேசப் போறது வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களை பற்றிதான்.


எனது நண்பன் துபாய்ல குப்பை கொட்டுகிட்டு இருக்கான், கொஞ்சம் வருசமாத்தான் அங்க போய் குப்பயை கொட்டுறான்... ஊருக்கு வந்தா அதிக பட்சம் ஒரு மாசம்தான் அதுக்கு மேல ஒரு நிமிசம் கூட இருக்க மாட்டான், இருந்தா ஆப்பு அடுச்சுருவாங்க...


போன வருசம்தான் அவனுக்கு கல்யாணம் ஆச்சு, அதுக்கும் தலைவர் வந்து இருந்தது 30 நாள்தான், சமிபத்தில் அவனுக்கு குழந்தை பிறந்தது... அவன் குழந்தைய பாக்க வருவான்னு பார்த்தால், வரவே இல்லை, கூப்பிட்டு கேட்டான் "வேலை பிசிடா இப்ப வர முடியாது",  இந்த எழவு பதிலத்தான் எப்பவும் சொல்லுவான்.

ம்ம்ம்ம்ம்ம்ம்...

பெத்த புள்ளைய பாக்கம கூட அப்படி என்ன வேலை,  ரெண்டு நாளைக்கு ஊருக்கு வந்துட்டு போய்ட்டாத்தான் என்ன,  உலகத்தில் எவ்வளவே பேர் என்னனெமே செஞ்சும் குழந்தை பாக்கியம் இல்லாம இருக்காங்க, இவனுக்கு இறை அருளால் சீக்கிறமா கிடைச்சுடுச்சி, இவன் இப்படி இருக்கானே இப்படியே மனசுக்குள்ள வருந்தினேன்.  நான் போயி குழந்தையே பார்த்தேன், அப்படியே பூப்போல... கடவுள் அற்புதமானவன்... எவ்வளவு அழகாக படைத்திருக்கிறான். குழந்தைகளை ரசிக்காதவன் மனிதனே இல்லை.

இல்லையா?




இவன் உண்மைதான் சொல்கிறானா, இல்லையான்னு உளவு பாக்கனும்னு,  துபாய்ல இருக்குற என்னோட வேற ஒரு நண்பன்கிட்ட இதப்பத்தி சொல்லி நல்ல விசாரிச்சு சொன்னேன், அவன் சொன்னது "இவனுக்கு இப்ப லீவு கிடையாதாம்!" .

எனக்கு தோனியதெல்லாம், இப்படியெல்லாமா இருக்கனும். ஏன் நம்ம நாட்டில் வேலை  தேடிக்கொண்டு இங்கே குடும்பத்துடன் வசித்தால்தான் என்ன? மிகவும் பாவம் தனது குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள். :( ஏதாவது ஒரு துக்கம்னா உடனடியா வர முடியாமல், சந்தோசம்னா யாருடனே சேர்ந்து கொண்டாடிக்கொண்டு...  சே

பணம்தான் வாழ்க்கையா?

ஒரு சில விசயங்களை கடந்து விட்டால் என்ன முயற்சி செய்தலும், கோடி கோடியா பணத்தை திரும்ப கொட்டினாலும் திரும்ப பெற முடியாது.

ஆயிரம்தான் இருந்தாலும், கல்யாணம் ஆவதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தாலும். கல்யாணத்திற்கு பிறகு கண்டிப்பாக தனது துனைவியருடன் தான் இருக்கனும். ஒரு சந்தோசம்னா பகிர்ந்து கொள்ள துக்கம்னா கூட பங்கெடுக்க இணை எப்போதும் வேண்டும்.  தன்னுடைய குழந்தை வளருவதை பக்கதில் இருந்து அனு அனுவாக ரசிக்க வேண்டும்.

வள்ளுவர் கூட
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலை சொல் கேளாதவர்.


அதாவது,  குழல் இசைதான் சிறந்தது, யாழ் இசைதான் சிறந்ததுன்னு சொல்வார்களாம் சிலர், அவர்கள் யாரென்றால் தனது மழலை பேச்சை கேக்காதவர்களாம்.