Showing posts with label தானம். Show all posts
Showing posts with label தானம். Show all posts

Aug 15, 2010

கண்தானம் - ஒரு அருமையான குறும்படம்

கண் எவ்வளவு முக்கியமானது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை, இந்த பதிபை படிக்க உதவி செய்வது கூட கண்கள்தான். நமது உடம்பிற்கு எப்படி தலையோ, அப்படி எல்லாவற்றிர்க்கும் முக்க்கியம் கண்கள்தான். கண் இல்லாதவர்களுக்குதான் தெரியும் அந்த வேதனையும் வருத்தமும்.

நான் சமிபத்தில் கண்தானத்தை பற்றிய ஒரு குறும்படத்தை பார்க்க நேர்ந்தது எனது நண்பர் ஜஸ்டின் இயக்கியுள்ளார். அனைவரும் இதை பார்க்க வேண்டும் என்பதற்ககவே இப்பதிவு.



http://www.youtube.com/watch?v=QJhoYxjEXRs

படத்தின் விமர்ச்சனம்,

"கறுப்பு வெள்ளை" என்பதை கலர்புல்லாக காமித்து ஆரம்பம்பமே மிகவும் அசத்தலாக ஆரம்பித்துள்ளார், ஹாஸ்பிட்டலில் அஹமது என்பவர் படுத்திருப்பது போல ஆரம்பிக்கின்றது இப்படம். அஹமது என்பவரை கேமரா காமிக்க வில்லை, அதே நேரத்தில் மற்றவர்கள் கூப்பிடுவதை வைத்து படுத்திருப்பவர் அஹமதுதான் என்று தீர்மானிக்கலாம். அஹமதுவை தனது அப்பா, சகோதரன், உறவுகாரர்கள் மற்ற நண்பர்கள் கூப்பிடும்போது படத்தின் நிறம் ஒரு வேறு பட்ட நிறத்தில் இருக்கிறது... அனைவரையும் நிழல்படமாகவே காமித்துள்ளார். யார் யாரோ கூப்பிட்டும் பார்க்காத அஹமது தனது அண்ணன் மகள் வந்து கூப்பிடவுடன் கண்திறக்கிறார், அதாவது முதன் முதலில் கண் திறக்கிறார், அனைத்தும் கலருக்கு மாறுகின்றன.

அப்பெண் அவருக்கு நிறங்களை சொல்லி தருகிறது... இந்த ஒரு இடம் மிகவும் நெகிழ்சியா இருக்கு... நமக்கு எல்லா நிறங்களும், இதுவரை பார்க்காதவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள் என்று... ரியல்லி சூப்பர். அதுவும் கருப்பு நிறத்தை பற்றி சொல்லும் போது, அஹமது கூறுகிறார் ட"தெரியும் நல்லாவே தெரியும்" இந்த ஒரு வசனம் அப்படி ஒரு வலியை கொண்டு வருகிறது. ஒவ்வொரு கலரையும் சொல்லும்போது பேக்கிரவுண் வாய்ஸ் ஒன்று கேட்கிறது, அது தானம் செய்தவரின் குரல்.

தானம் செய்தவரின் போட்டோவுடன் அவரின் கண் இல்லாமல் விரிகிறது அடுத்த ஷாட், தானம் செய்தவர் பெயர் "முத்து குமார்" ஒரு போட்டோகிராபர், கலரை எப்படியெல்லாம் அவரின் கண்களால் பார்க்கிறார் என்று வருகிறது. ஒரு ஆக்சிடன்ட் மூலம் இறந்துவிட்ட "முத்து குமார்" உள்ள கண்ணை எடுத்துதான் அஹமதுக்கு பொருத்துகிறார்கள். பார்வை கிடைத்வுடன் தனது அப்பா, சகோதரன், உறவினர், நண்பர்கள் யாரையும் பார்க்காத அஹமது தனது அண்ணன் மகளை மட்டும் பார்கிறார்.

35 வருடங்களாய் தன் கூட இருந்த சொந்த பந்தம் எதுவும் உதவ வில்லை, நண்பர்கள் உதவவில்லை என்கிற ஆதங்கமான பேச்சாக அஹமதுவின் குரல் ஒலிக்கிறது.

அவன் இறந்தாலும்
என்னுடன் இருக்கிறார்...
அவனின் கண்ணை கொடுத்துவிட்டு...

நானும் வாழ்வேன்
அவன் கண்ணை
இன்னொருவனுக்கு கொடுத்துவிட்டு...

என்ற கவிதையுடன் முடிவடைகிறது.




எனக்கு பிடித்தமான படம், without "
I" cant be vision


ஒன்னு தெரிமா?
இந்தியாவில் தோராயமாக ஒரு கோடி மக்கள் மேல் கண்பார்வை இல்லாமல் இருக்கிறார்கள்

உங்களாலும் மற்றவர்களுக்கு ஒளி ஏற்ற முடியும்
http://www.sankaranethralaya.org/eye-donation-faq.html
http://www.aravind.org